இன்னும் 25 ஆண்டுகள் கழித்து திமுக எழுதும் வரலாறு

“அன்று இந்தியா மாபெரும் சட்ட மோசடி செய்தது, குடி உரிமை மசோதா எனும் பெயரில் இந்நாட்டு இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் விரட்டி அடிக்க படுபயங்கர திட்டமிட்டதுபிராமணரின் குருநாதரான அமித்ஷா என்பவர் அச்சட்டத்தை கொண்டுவந்தார்யாருமே அதுபற்றி பேச அஞ்சிய நேரமது, அமித்ஷா என்பவர் ஹிட்லரை விட கொடியவர், டிரம்பே அவருக்கு அஞ்சி அமெரிக்கா ஓடிவிட்டார், புட்டீனே மாஸ்கோவில் ஒளிந்து கிடந்தார், அவ்வளவு கொடியவர் அமித்ஷாஅந்த கடும் இறுக்கமான நேரம், உலகமே அஞ்சி ஒடுங்கிய நேரம், இந்திய இஸ்லாமியரெல்லாம் இனி நாம் எங்கு செல்வோம் என ஒலமிட்ட நேரம், அவர் எழும்பினார்ஆம், உதயநிதி என்பவர் தைரியமாக எழும்பினார், குடியுரிமை சட்டத்தை பாராளுமன்றத்திலே கிழித்தெறிந்தார், குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று மீதி சட்டத்தை எடுத்து வந்து சென்னையிலே கிழித்தெறிந்தார்இந்திய ராணுவமே வந்தாலும் அவரை நெருங்கமுடியவில்லை, அவ்வளவு மக்கள் திரண்டனர்.பழ கருப்பையா எனும் திமுக தியாகி அந்த கூட்டத்தில் தொலைந்தே போனார், இன்றுவரை அவரை பற்றிய தகவல் இல்லை, அது அமித்ஷாவின் சதியாக இருக்கலாம்எனினும் நாடே அவர்பின் திரண்டதுஅஞ்சிய அமித்ஷா சட்டத்தை வாபஸ் பெற்று அடுத்த நாட்டில் இருந்து இங்கு இஸ்லாமியர் வரகூடாது, இங்கிருக்கும் இஸ்லாமியர் வெளிநாடு செல்ல கூடாது என சட்டத்தை திருத்தினார்இஸ்லாமிய மக்கள் அவரை நன்றியோடு நோக்கினர், இது காயிதே மில்லத் பிடித்து அழுத கருணாநிதியின் கரம் தொட்டு வளர்ந்த குழந்தை, உங்களுக்கு எக்காலமும் நானே காவல் என உதயநிதி சொன்னபொழுது வானில் காப்ரியேல் தூதன் தோன்றி “திமுகவில் ஆசீர்வதிக்கபட்டவர் நீரே, உம் தகப்பனான முக ஸ்டாலினும் ஆசீர்வதிக்கபட்டவரே” என சொல்லி மறைந்ததுஉதயநிதி என்றொரு போராளி இல்லையென்றால் இந்தியாவில் ஒரு இஸ்லாமியனோ ஒரு பள்ளிவாசலோ இருக்காது, நெல் வயலுக்கும் வாழை இலைக்கும் ஊட்டி காடுகளுக்கும் கூட காவிவண்ணம் அடித்திருப்பார்கள் படுபாவிகள்”இன்னும் 25 ஆண்டுகள் கழித்து திமுக எழுதும் வரலாறு இப்படித்தான் இருக்கும், ஏனென்றால் பெரியார் பற்றி இப்படித்தான் அன்றே எழுதிவைத்தார்கள்