இன்னொரு வகையில் நோக்குங்கள்
அந்த 370ம் சட்டபிரிவினை இன்னொரு வகையில் நோக்குங்கள்
ஆம் காஷ்மீர் பாதுகாக்கபட்ட பிரதேசம், அந்நியர் யாரும் உட்புக முடியாது, தொழில் தொடங்கமுடியாது ஏகபட்ட கட்டுபாடுகள் என அந்த பிரிவு நேற்றுவரை சொல்லிற்று
இவை எதில் முடிந்தன?
தலைநகரில் இருந்து தொட்டுவிடும் தூரத்திலிருந்தும், பஞ்சாபின் லூதியானா போன்ற தொழில் நகரங்கள் அருகிலிருந்தும் காஷ்மீர் வளரவில்லை
வெளிமாநிலத்தவனும் அங்கு செல்லமுடியாது, காஷ்மீரியும் யார் கையினையும் பிடித்துமேல் வரமுடியாது
பாகிஸ்தானால் தூண்டபடும் தீவிரவாதமும் அது கொடுத்த வறுமையும் மற்ற மாநில மக்கள் அவர்களை தொடர்புகொள்ளமுடியா அளவு இருந்த சிக்கலும் காஷ்மீரை பின் இழுத்துகொண்டே சென்றது
வறுமையும் வேலை இல்லா திண்டாட்டமும் இளைஞர்களை எளிதில் தீவிரவாத பக்கம் திருப்பிவிடும், அங்குஅதுதான் நடந்தது
அங்கு தொழில்தொடங்குவார் யாருமில்லை அதற்கு சட்டமோ சூழலோ சரியில்லை எனும்பொழுது இந்திய ராணுவத்தின் மேல் தாக்குதல் நடத்தும் தொழில் வாய்பினை பாகிஸ்தான் வழங்கியது
ஆம் அதை தவிர ஒரு வளர்ச்சியுமில்லை
ஒரு காஷ்மீரிய விஞ்ஞானி என்றோ இல்லை காஷ்மீரிய தொழிலதிபர் என ஒருவரையாவது இங்கு சுதந்திர இந்தியாவில் காட்டமுடியுமா?
ஒருகாலமும் முடியாது, சுதந்திர இந்தியா அதற்கு வாய்பளிக்கவில்லை அந்த சட்டம் அவர்களை இந்தியாவிலிருந்து தனிமைபடுத்தி இருந்தது
மன்னர்கால சட்டம் காஷ்மீரின் தனிதன்மையினை ஒழித்துவிடும் என கருதிய சலுகைகளே அவர்களை பின்னோக்கி இழுத்து சென்றது
இனி காஷ்மீர் பொருளாதார வளர்ச்சிக்கு திறந்துவிடபடும்
சிலர் சொல்வது போல தனிநாடு ஆனாலும் அது ஒன்று பாகிஸ்தானால் விழுங்கபடும் அல்லது நேபாளம், பூடான் போல பின் தங்கிய நாடாகவே திகழும்,காரணம் கடல் இல்லை , எல்லை முழுக்க அடுத்த நாடுகள் எனும்பொழுது ஒரு நாடு வளர ஏக தடைகள்
இந்தியா ஒருவகையில் அவர்களை தன்னோடு இழுத்து இனி வளருங்கள் புதிய உலகில் காலடி எடுத்து வையுங்கள் என இன்று அழைத்து வந்திருக்கின்றது
சீனாவின் ஹாங்காங்கும் இந்தியாவின் காஷ்மீருக்கும் தலைகீழ் தொடர்பு உண்டு
ஹாங்காங் வளர்ந்த பிரதேசம் அதை சீனா இன்றும் தன்னாட்சி பகுதியாக நடத்தி வந்தாலும் ஹாங்காங் அடிக்கடி திமிறுகின்றது
ஆனால் நாமோ பிந்தங்கிய மாநிலத்தை இதுகாலம் சிறப்பு பகுதியாக நடத்தி அவர்களை பின்னடைய செய்திருந்தோம்
அந்த இரும்பு கதவும், தடுப்பு சங்கிலியும் இனி உடைகபடும்
தொழில் வளர்ந்து பணபுழக்கம் அதிகமானால் கல்வியும் தொழிலும் வளர்ந்தால் அங்கு தீவிரவாதம் எனும் சொல்லே வராது
ஆம் வளர்ந்துவிட்ட சமூகத்தில் தீவிரவாதத்தை ஒருகாலமும் புகுத்தமுடியாது அது அங்கு வளராது. பாலில் மீன் வாழமுடியாது என்பது போல செத்துபோகும்
காஷ்மீர் சுற்றுலாமுதல் ஏகபட்ட விஷயங்களுக்கு புகழ்பெற்ற பூமி, ஆசீர்வதிக்கபட்ட மலைநாடு
இனி சர்வதேச முதலீடுகள் அங்கு கொட்டபடும் இன்னும் சில ஆண்டுகளில் அது மாபெரும் வளர்ச்சியினை எட்டும்
அன்று இச்சட்டம் நீக்கபட்டதனை காஷ்மீரிகளும் உணருவார்கள் உலகமும் உணரும்
அதுவரை கத்துபவன் கத்திகொண்டே இருக்கட்டும்
இந்தியா நல்லதைத்தான் அவர்களுக்கு செய்திருக்கின்றது