இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள்…


இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாளினை உலகம் கொண்டாடி கொண்டிருக்கின்றது
இந்த மானிட வரலாற்றில் அடிமை முறையினை ஒழித்த நாயகன் அவர். அதுவும் அதற்காகவே படித்து அதற்காவே அரசியலுக்கு வந்து, பெரும் போராட்டம் போராடி பதவி அடைந்து, அதனை நிகழ்த்தியும் காட்டினார்
கருப்பர்களை மனிதர்கள் என அமெரிக்காவில் அங்கீகரித்தவர் அவர், அதனால் எழுத்த உள்நாட்டு சண்டையில் அமெரிக்கா உடையாமல் காத்தவரும் அவர்
அடிமை முறை ஒழிந்த ஆத்திரத்தில் ஒரு வெள்ளை வெறியனால் சுட்டும் கொல்லபட்டவர்
சுருக்கமாக சொன்னால் அடிமை மக்களுக்காக அமெரிக்காவில் அவதரித்து அவர்களை மனிதர்களாக வாழவைத்த மகான் அவர்.
அடிமை முறை அவ்வளவு கொடுமையானது, அவ்வளவு கொடூரமானது, ஆடு மாடுகளில் ஒன்றாக மனிதனை வாழ சொல்வது,அப்படி சொல்லிவிடலாம், ஆனால் ஆறரிவில் ஒரு அறிவை கழற்றி வைக்க மனிதனால் முடியுமா?
அடிமை கூட்டம் அப்படித்தான் ஆறாம் அறிவில் அழுதுகொண்டிருந்தது, விலங்காய் உழைத்து கொண்டிருந்தது..
மனதால் மனிதராகவும், சமூகத்தில் விலங்குகளாயும் வாழ்து கொண்ட அம்மக்களின் விலங்கு லிங்கனால்தான் உடைக்கபட்டது
அவரின் பிறந்தநாளை இன்று உலகம் கொண்டாடுகின்றது, தமிழகத்தில் இன்னும் மகா உற்சாகம்
எப்படி?
சசிகலாவிடமிருந்து தப்பி ஓடும் ஒவ்வொரு அடிமைகளையும் காணும்பொழுது லிங்கனின் அடிமை ஒழிப்பு திட்டம் நினைவுக்கே வருகின்றது
எதற்கும் பன்னீர்செல்வம் தன் வீட்டு வாசலில் ஒரு லிங்கன் படத்தினை மாட்டிவிடுவது நல்லது, அங்கு வரும் தப்பித்த அடிமைகள் அதனை வணங்கிவிட்டு உள் செல்வார்கள்
உலகெல்லாம் அடிமை முறையினை ஒழித்த லிங்கனை வணங்கிவிட்டு தமிழத்திலும் அடிமை முறையினை பன்னீர் ஒழித்தார் என உலகம் சொல்லட்டும், டிரம்ப் வியக்கட்டும்
பன்னீர் புகழ் அமெரிக்கா வரை பரவட்டும்.
தமிழகத்து லிங்கன் பன்னீர் செல்வம் வாழ்க….