இன்று ஆர்.கே நகரில் மட்டும் அல்ல, ஐ.நா சபையிலும் தேர்தல் நடக்கின்றது

இன்று ஆர்.கே நகரில் மட்டும் தேர்தல் அல்ல, ஐ.நா சபையிலும் தேர்தல் நடக்கின்றது

அதாவது ஜெருசலேம் தொடர்பாக டிரம்ப் அறிவித்த அறிவிப்பினை திரும்பபெற கோரி சில நாடுகள் ஐ.நா பொதுசபையில் இன்று தீர்மானம் வருகின்றது

முன்னதாக பாதுகாப்பு சபையில் வந்த தீர்மானத்தை அமெரிக்கா தன் வீட்டோ பவர் மூலம் முறியடித்தது

இப்பொழுது பொதுசபைக்கு விஷயம் வந்திருக்கின்றது, அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் கூட எதிர்த்து வாக்களிக்கலாம் எனும் நிலை இருப்பதால் அமெரிக்கா இப்படி எச்சரிக்கின்றது

“எதிர்த்தா வாக்களிப்பீர்கள்? அளியுங்கள். எங்களுக்கு என்ன வந்தது? உங்களுக்கு எவ்வளவு பணம் அள்ளிகொடுக்கின்றோம் தெரியுமல்லவா?, அவ்வளவும் இனி எங்களுக்கு மிச்சம்”

அதாவது எங்களுக்கு எதிராக வாக்களித்தால், உங்களுக்கு தரபடும் உதவி தொகையினை தரமாட்டோம் என மிரட்டுகின்றது அமெரிக்கா

இதனால் கூட்டாளிநாடுகள் திகைத்துநிற்கின்றன.

இவ்விஷயத்தில் தமிழகம் உலகிற்கே முன்னோடி, ஆம் காசை முழுக்க வாங்கிவிட்டுத்தான் வோட்டளிப்பான் தமிழன்