இன்று கட்டபொம்மனின் பிறந்தநாள், இன்னும் பிற

இன்று கட்டபொம்மனின் பிறந்தநாள்

வெறும் 39 வயதிலே மானத்துடன் உயிர் நீத்த அவனுக்கு, பெரும் அவமானத்தோடு இன்னும் வாழும் வை.கோ அஞ்சலி செய்து வீரவுரை ஆற்றுவார்

கட்டபொம்மனுக்கு இதனை விட என்ன அவமானம் வேண்டும்?

கட்டபொம்மனின் வீரத்திற்கும் தன்மானத்திற்கும் உண்மையான அஞ்சலி செய்யவேண்டுமென்றால் வைகோ பாஞ்சாலங்குறிச்சி பக்கம் போகாமல் இருக்கட்டும்.


 

விரைவில் முதல்வராகிரார் சசிகலா

இன்னும் ஜெயா இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் இவ்வளவு வேகமா?

விரைவில் பன்னீரை அகற்றிவிட்டு சசிகலா முதல்வராவர் என்பதனை ஏற்றுகொள்ளலாம், அது விதி

இல்லாவிட்டால் பன்னீருக்கு விழும் மிதி..

ஆனால் இரு மாதத்தில் மோடியினை விரட்டிவிட்டு சசிகலா பிரதமர் ஆவார் என சிலர் சொல்ல தொடங்கியிருக்கின்றானே அவனை என்ன செய்ய?

எனினும் மிஸ்டர் டிரம்ப் எச்சரிக்கையாக இருப்பது நல்லது

இவர்கள் செல்லும் வேகத்தை கண்டால் அப்படி எச்சரிக்கத்தான் தோன்றுகின்றது.


இன்னும் 4 வருடம் இருக்கின்றது, திமுக தன்னை நிரூபித்து தக்கவைத்து கொள்ள பெரும் சீற்றம் அவசியம்

இல்லையென்றால் சீறிகொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ் கட்சியினை விட பின் தங்கி, சராசரி கட்சிகளை போல திமுகவும் ஆகிவிடும்

அவ்வகையில் இன்றைய திமுகவிற்கு ஸ்டாலினை விட அழகிரியே பொருத்தமானவர்.


சும்மாவே அகதளம் செய்யும் யானைக்கு அங்குசம் இல்லையென்றால் என்னாகும்?

அதுவும் யானை கூட்டமே வயலில் களம்புகுந்தால் என்னாகும்?

அப்படித்தான் ஆக போகின்றது தமிழ்நாடு

வேண்டுமானால் பாருங்கள், அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டிக்கு யாரும் வரமாட்டார்கள்

இனி அவர்கள் வந்து சுரண்ட இங்கு எது மிச்சமிருக்க போகின்றது?

தமிழகத்தில் இனி மக்கள் மயிராவது மிஞ்சுமா என்பதே மிக பெரும் எதிர்பார்ப்பு.

கங்கை அமரன், பாலு ஜூவல்லர்ஸ், சிவாஜி கணேசன், சந்திர லேகா எல்லாம் பட்ட பாட்டிற்கு சாமான்யன் எல்லாம் எம்மாத்திரம்

அகதியாய் செல்ல இனி ஒரே இடம் இலங்கைதான்

எப்படி செல்லலாம்?

வைகோவிடம்தான் கேட்க வேண்டும், அவருக்குத்தான் கள்ளதோணி அனுபவம் நிறைய உண்டு.