இன்று கருவாட்டு குழம்பில் இறங்கிவிடலாம்

மலேசிய அரசுக்கு எப்பொழுதும் மக்களின் நாடிதுடிப்பினை பார்த்துகொண்டே இருப்பதில் கடுமையான அக்கறை

அப்படி வாக்களிக்கும் நாளான நேற்று சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் மன நிலை புரிந்திருக்கின்றது

இனி உடனே திரும்ப சிரமம் அல்லவா? என நினைத்து இருநாள் விடுமுறை விட்டுவிட்டார்கள்

நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாய்வது போல நமக்கும் இருநாள் விடுமுறை விட்டாயிற்று

வழக்கமான நாள் இல்லை என்பதால் மீன் கிடைக்கவில்லை

டிவியினை தட்டினால் படகோட்டி படத்தில் நம்பியார் தன் அடியாள் அசோகனிடம் இப்படி விரைப்பாக‌ சொல்லிகொண்டிருந்தார்

“அடைமழை நேரம் மீன்பிடிக்க போகமாட்டாங்க, வியாபாரம் நடக்காது

ஆனால் நம்மிடம் இருக்கும் கருவாட்டை காசாக்க இதுதான் நேரம்”

உடனே அசோகன் கண்ணை சிமிட்டியபடி சொல்கின்றார், அற்புதமான “யோஜனை” எசமான்.

இதே யோசனை நமக்கும் வந்தாயிற்று, இன்று கருவாட்டு குழம்பில் இறங்கிவிடலாம்

வழிகாட்டிய நம்பியார் வாழ்க‌

டிவிக்களில் சினிமா காமெடி டைம் போல இனி டிவிக்களில் “வில்லன்கள் நேரம்” என ஒன்றை நடத்தினால் பலருக்கு உபயோகமாக இருக்கும் போலிருக்கின்றது