இன்று சித்ராபவுர்ணமி நாளாம்…

Image may contain: 1 person, textImage may contain: 1 person, smiling, selfie, close-up and indoor

இன்று சித்ராபவுர்ணமி நாளாம், நிலவு மிக மிக அழகாக தெரியுமாம்

சும்மாவே மலேசியாவில் வானம் பார்க்க முடியாது, இப்பொழுது மழைவேறு நிச்சயம் நிலா தெரியாது, என்ன செய்யலாம்?

யாருக்கு வேண்டும் அந்த நிலா? இதோ சித்ராபவுர்ணமியினை விட அழகான நிலா..

“அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
எங்கள் கண்ணுக்கு ஒரே நிலா…….”.


ஒரு டிவியில் அண்ணாமலையும், இன்னொரு டிவியில் முறைமாமன் படமும் ஓடுகின்றது

எப்படிபட்ட சத்திய சோதனை? இதனை எப்படி ஒரு குஷ்பூ ரசிகன் எதிர்கொள்ள போகின்றான்?

இரண்டு டிவியினையும் மாற்றி மாற்றி பார்த்து, கட்டப்பாவின் ராணி விசுவாசத்தையும் வென்று கொண்டிருக்கின்றேன்


குஷ்பூவின் டிவிட்டர் செய்தியினை தொடர்ந்து அவருடன் வாதம் புரிய முடியாத எவனோ அவரை கூத்தாடி என சொல்லியிருக்கின்றான்.

ராமசந்திரன் பின்னால் சென்றவர்களை நோக்கி டேய் அந்த கூத்தாடி பய பின்னால போகாத என சொன்ன எம்.ஆர் ராதாவின் பேச்சில் அர்த்தம் இருந்தது , இருவரும் ஒரே தொழிலாளிகள். ராதா சொன்னபடி கேட்டிருந்தால் தமிழகம் இப்படி சீரழிந்திருக்காது என்பது இன்னொரு விஷயம்

இன்று குஷ்பூவினை அப்படி சொல்பவர், சினிமாவில் நடித்துவிட்டு அப்படி எம்.ஆர் ராதா போல புகழ்பெற்றுவிட்டு சொன்னாலும் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும், இவர் அந்த வகையும் அல்ல..

அக்காலத்தில் ஒவ்வொரு தொழிலாளியினையும் அவனவன் தொழில் நிமித்தம் அழைக்கும் காலமிருந்தது, அப்படி அழைத்தார்கள். அந்த தொழிலை சொல்லித்தான் அழைத்தார்கள்

இப்பொழுது மாறிவிட்ட காலங்கள், அப்படி அழைத்துவிட முடியாது, பெரும் கொந்தளிப்பில் முடியும்

அப்படி அழைக்கவேண்டுமென்றால் முன்னாள் தமிழக முதல்வர்கள் மூவர் சினிமாக்காரர்கள், அவர்களை கூத்தாடி என அந்த நபர் சொன்னாரா? கூத்தாடிக்கு ஏன் இவ்வளவு அரசியல் முக்கியத்துவம் என சொன்னாரா?

இல்லை, சொல்ல போவதுமில்லை. அவர்களை எல்லாம் சொல்லாமல் குஷ்பூவிடம் வந்து கூத்தாடி என்றால் அவருக்கு கோபம் வராதா? சொல்பவர் எல்லோரையும் சொல்லிவிட்டு, எல்லா தொழிலாளியினையும் அவன் பண்டைய பெயர்களில் அழைத்துவிட்டு பின் குஷ்பூவினை சொல்லவேண்டும்.

ஊனமுற்றவர்களை எல்லாம், அவர்கள் மனதினை பாதிக்காதவண்ணம் மாற்றுதிறனாளி என அழைக்கும் காலம் இது, இதில் பழம் பெயரான சொல்லில் சொல்ல என்ன அவசரம்?

திடீரென தலாக் பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டிருக்கின்றார்கள் அந்த பதர்கள், இது பற்றி குஷ்பூ முன்பே பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது, ஆனாலும் கேட்டிருக்கின்றார்கள்

சரி கேள்வி கேட்டவர் பிபிசி நிருபராகவோ இல்லை பெரும் ஊடக செய்தியாளராகவோ இருந்தால் கூட பரவாயில்லை, ஏதோ டிவிட்டரில் அக்கவுண்ட் இருப்பதனால் கேட்டிருக்கின்றார், இதற்கெல்லாம் ஏன் குஷ்பூ பதில் சொல்ல போகின்றார், சொன்னால் இலட்சகணக்கான மக்களுக்கு சொல்லிகொண்டே இருக்கவேண்டும், தவிர்ப்பதே வழி

இன்னும் பலவகையாக அவரை சீண்டியிருக்கின்றார்கள், உச்சமாக பெண்ணை வீழ்த்தும் இறுதி ஆயுதமான ஆபாச வசவுகளில் இறங்கியிருக்கின்றார்கள்,

அப்படி ஆபாச வசவுகளில் இறங்கிவிட்டான் என்றால் அவன் வாதத்தில் தோற்றுவிட்ட இயலாமையில் கத்துகின்றான் என அர்த்தம், அவன் அதனைத்தான் செய்திருக்கின்றான்

இவர்களால் எவ்வளவு செய்யமுடியுமென்றால் இவ்வளவுதான் செய்யமுடியும்? அதற்கு மேல் என்ன செய்துவிடமுடியும்?

கூத்தாடி என ராமசந்திரனையொ, ஜெயலலிதாவினையோ அப்படி அழைக்க தைரியம் இல்லாதவன் எல்லாம் குஷ்பூவிடம் தான் தன் தைரியத்தை காட்டுகின்றானாம்

மன்னர் ஆட்சியில் மக்கள் நலனை கவனிக்க சில அதிகாரிகள் உண்டு, அவர்களை மக்கள் சேவகன் அல்லது பணிக்காரன் என அழைத்தார்கள்

அப்படி எல்லாவற்றிலும் செந்தமிழ் செப்புவர்களா அவர்கள்?

எங்கே எடப்பாடி பழனிச்சாமியினை அந்த செந்தமிழ் வார்த்தையில் “பணிக்காரன்”, “சேவகன்” என அழைக்கட்டும் பார்க்கலாம்?

அந்த நபரின் எல்லை மீறிய பேச்சுக்களுக்கு கோடான கோடி ரசிகர்களை கொண்ட ரசிகர் படை கடும் கண்டனம் தெரிவித்துகொள்கின்றது.

புகழ்பெற்ற அந்த வசனத்தை இப்பொழுது சொல்லலாம்

“ஓரளவுக்கு வரைதான் பொறுமை காக்க முடியும்”