இன்று சூரசம்ஹாரம்
இன்று சூரசம்ஹாரம்
தீபாவளிக்கு மட்டும் நரகாசுரன் முப்பாட்டன் என கிளம்பிய மானமுள்ளதாக சொல்லும் ஆனால் அறிவே இல்லாத சில தமிழர்களை இப்பொழுது காணவில்லை
தீபாவளியினை எதிர்த்தால் பகுத்தறிவாம், காரணம் நரகாசுரன் முப்பாட்டனாம்
ஆனால் சூரபத்மன் என்பவன் என்ன ரகம்? அவன் முப்பாட்டன் இல்லையா?
ஏற்கனவே முருகனை முப்பாட்டன் ஆக்கியாயிற்று, இதில் சூரமபத்மனும் முப்பாட்டன் என்றால் தமிழகத்தில் அடித்து கொன்றே விடுவார்களே? என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கின்றது அந்த குழப்ப கோஷ்டி
இதனால் சூரசம்ஹாரத்திற்கு வீரவணக்கம் செலுத்த முடியாமல் கம்மென்று இருக்கின்றார்கள்.
இதில் கவனிக்கவேண்டியது ஒன்றுதான், அசுரர்கள் எல்லாம் நம்மவர்கள் என சொல்லிகொண்டிருந்தது பகுத்தறிவு கோஷ்டி, வீரமணி எல்லாம் அந்த வகை
அந்த கோஷ்டி என்ன செய்யும்? கடவுள் இல்லை என சொல்லும், ஆனால் பெரும் ஆலயம் பக்கம் விடுதி கட்டி சம்பாதிக்கும்
கடவுளே இல்லை என்றால் அசுரர்கள் எப்படி உங்கள் முப்பாட்டன் ஆனார்கள் என கேட்டால் பதில் வராது, அது பகுத்தறிவு. அந்த கோஷ்டி வேறு
இதில் புதிதாக வந்து முருகனும் முப்பாட்டன் என சொல்லி குழப்பியது அங்கிள் சைமன். அவர் யாருடைய ஸ்லீப்பிங் செல்லாக இருந்தால் இப்படி செய்திருப்பார் என்பதை நீங்களே யூகித்துகொள்ளுங்கள்.
ஆக பகுத்தறிவு கோஷ்டி, சைமனை வதம் செய்யும் கோபத்தில் இருக்கலாம்
அடித்து சாவுங்கள், இரண்டில் எது ஒழிந்தாலும் தமிழகத்திற்கு நல்லதே.