இன்று தமிழக சட்டசபை கூடுகின்றது

இன்று தமிழக சட்டசபை கூடுகின்றது

இதயதெய்வம், புரட்சி தலைவி…, என பெரும் பாயிரம் பல்லவிகளை பாடி அரைமணிநேரம் அதனையே பாடும் பெரும் சங்கீத அவஸ்தைகள் இனி இருக்காது, ஆனாலும் பழக்க தோஷம் என்ன செய்ய போகின்றார்களோ?

இதுவே பழைய கலைஞராக இருந்திருந்தால் அவர் சட்டசபையில் செய்யும் அழிச்சாட்டியத்திற்கு பன்னீர் செல்வம் அம்மா சமாதியில் அழுதுவிட்டு ஓடியே விடுவார்

காமராஜர், எம்ஜிஆர் எல்லாம் கலைஞரிடம் பட்ட பாடுகள் கொஞ்சமல்ல, தலைமேல் கைவைத்து அமரவிடும் சாமார்த்தியமும் வாதாடும் திறனும் கலைஞருக்கு உண்டு

பன்னீர் செல்வத்தை எல்லாம் ஊதி தள்ளிவிடுவார், ஆனால் கலைஞருக்கும் வயதாகிவிட்டது

சட்டசபையில் என்ன தீர்மானம் எடுக்க போகின்றார்களோ தெரியாது, அம்மாவிற்கு அஞ்சலி என சொல்லிவிட்டு அமர்ந்துவிடலாம்

முன்பு அம்மா இருக்கும்போது அவர்கள் முன்னால் நின்றுகொண்டு அம்மாவிற்கு பாரத ரத்னா கொடுங்கள், அம்மாவிற்கு நோபல் கொடுங்கள், அம்மாவிற்கு ஏதாவது விருது கொடுங்கள் என மத்திய அரசினை கேட்டவர்கள் எல்லாம் இப்பொழுது சத்தமே இல்லை

எம்ஜிஆருக்கு கொடுத்த பாரத ரத்னா, ஜேக்கு ஏன் இல்லை என ஒரு பயலும் கேட்கவில்லை.

ஒரு பதமபூஷனாவது கொடுங்கள் என்ற குரலும் இல்லை

அட குறைந்தபட்சம் போயஸ் கார்டன் வீட்டையாவது அரசு நினைவகமாக மாற்றும் கோரிக்கை கூட அவர்களிடமிருந்து வரவில்லை

இவ்வளவு விசுவாமான‌ தொழிலாளிகளை வைத்திருந்ததை விட சாதாரண சலூன் கடை முதலாளி ஜெயாவினை விட கொடுத்து வைத்தவனே…

நாய்கள் கூட எஜமான் மறைந்த சில நாட்களுக்கு சாப்பிடாமல் இருக்கும் என்பார்கள், அது நன்றிக்கு பிறந்ததல்லவா, மனிதன் அப்படி இருந்தால் இவனுக்கும் அதற்கும் என்ன வித்தியாசம்.

போகட்டும்

இனி தமிழக ஆளுநர் யார்? என்பதில் பல தகவல்கள் வருகின்றன‌

சுப்பிரமணியன் சாமி என்பவரை நிச்சயமாக வைக்கலாம், அரசை ஆட்டுகின்றாரோ இல்லையோ இந்த பல்கலைகழக ஊழலாவது வெளிவரும்.