இன்று துருக்கியில் தேர்தல் நடக்கின்றது
இன்று துருக்கியில் தேர்தல் நடக்கின்றது, ஆனால் மற்ற தேர்தலை விட மகா முக்கிய தேர்தல் என்பதால் உலகம் உற்று கவனிக்கின்றது
அப்படி என்ன முக்கியம்?
இதுவரை பிரதமர் பதவியில் இருந்த துருக்கிக்கு அதிபர் முறை அறிவிக்கபட்டிருக்கின்றது, சீன அதிபர், புட்டீன், இலங்கை அதிபர் போன்ற சர்வாதிகார பதவி இது
நடப்பு அதிபர் எர்டகோன் அதனை உருவாக்கி அதில் நிரந்தரமாக அமர முயற்சிக்கின்றார். ராணுவ புரட்சிக்கு பின் நடக்கும் தேர்தல் என்பதால் கூடுதல் கவனம்
துருக்கி என்பது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு, ஆட்டோமான் சாம்ராஜ்யம் என உலகை மிரட்டிய பெரும் வல்லரசின் இன்றைய சுருக்கம் அது
ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய நாடு அதுதான். அதனால் அதனை ஒட்டோமானின் வீழ்ச்சிக்கு பின் நோயாளி என்றெல்லாம் ஐரோப்பா பழித்தது
ஆனால் கமால் பாட்சா தன் தியாகத்தாலும் உழைப்பாலும் துருக்கியினை சீர்படுத்தினார், இன்று இஸ்லாமிய நாடுகளில் மிக முன்னேறிய நாகரீகமான நாடு என துருக்கித்தான் முதல் இடத்தில் இருக்கின்றது
சிரிய அகதிகள் கட்டுபாடு மிகுந்த சவுதிக்கு வராமல் துருக்க்கிக்கு செல்ல காரணம் அதுவே
அரபுலகின் அமைதிக்கு துருக்கியின் பங்களிப்பும் மகா முக்கியம்
இந்த எர்டோகன் என்பவர் துருக்கியின் இரண்டாம் கமால் பாஷா என சொல்லிகொண்டு துருக்கியினை பெரும் இடத்திற்கு கொண்டு செல்வேன் என உறுமிகொண்டிருப்பவர்
இதனால்தான் சர்வ சக்திவாய்ந்த அதிபர் பதவியினை உருவாக்கி அதில் அமர துடிக்கின்றார்
மேற்குலகிற்கு இவரை பிடிக்காது என்பதால் ராணுவபுரட்சி மூலம் அகற்ற துடித்தார்கள் அதுவும் பிசுபிசுத்தது
அந்த முக்கியத்துவம் வாய்ந்த துருக்கி இப்பொழுது தன் முதல் அதிபரை தேர்ந்தெடுப்பதை உலகம் உன்னிப்பாக கவனித்துகொண்டிருக்கின்றது
அநேகமாக புட்டீன், ஜின்பெங் வரிசையில் எர்டோகனும் வரலாம்