இன்று புனித வெள்ளி : கவுரவ கொலை நடந்த நாள்
12 வயது சிறுவனாக இயேசு ஜெருசலேம் கோயிலில் அவர் யூத சட்டங்களை விவாதித்தபொழுது உச்சிமுகர்ந்த குருமார்களின் மொத்த கூட்டமும், 30 வயதில் அவர் போதிக்க தொடங்கியவுடன் முறைக்க ஆரம்பித்தது.
கடும் சட்ட திட்டங்களும், இறுக்கமான வாழ்க்கை முறையும் கொண்ட சமூகமாக அது அன்று விளங்கிற்று, வாழ்வது கடவுளுக்காக, அந்த கடவுள் வாழ்வது ஜெருசலேம் ஆலயத்தில்.
அவரை எப்படி அந்த ஆலயத்திலே தொடர்ந்து வசிக்க வைப்பது? அவரின் எல்லா கட்டளைகளையும் தவறாமல் கடைபிடிக்கவேண்டும் என்பதை தவிர எந்த சிந்தனையும் இல்லா கூட்டம் அது.
நாமே சொந்த கடவுளின் சொந்த இனம், கடவுள் எமககானவர் என்பதில் அது கொஞ்சமும் தயக்கமில்லாமல் இருந்தது. கடவுள் கொடுத்த சட்டம் படித்த நாம் புனிதமானவர்கள் மற்றெல்லாம் பாவிகள் என்பதில் அவர்களுக்கு அசாத்திய நம்பிக்கை.
இன்று கிறிஸ்தவர்களுக்கு நாம் மட்டும் பரலோகம் போவோம் வேறு எல்லோரும் நரகம் போவார்கள் என்ற எண்ணம் சில பிரிவினை கிறிஸ்தவ கோஷ்டிகளிடம் இருக்கின்றதல்லவா? அப்படி.
இங்குதான் இயேசு போதிக்க தொடங்கினார், சட்டங்களை மீறினார். மனிதனை மனிதனாக மட்டும் பார்க்க சொன்னார். பாவிகளோடு பழகுவதில், சபிக்கபட்டவர்கள் என ஒதுக்கபட்ட நோயாளிகள். கற்பு தவறியதால் பாவியாகியோர், அக்காலத்தில் பாவம் செய்தோருக்கே பேய் பிடிக்குமாம், அப்படி பேய் பிடித்தோர், அக்கால யூத தலித் சமுதாயமான சமாரியர் என யாருடனும் அமர்வதிலோ அல்லது உண்பதிலோ அவருக்கு எந்த சங்கடமும் இல்லை, எல்லோரும் கடவுளின் மக்கள் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
(ஆனால் ஆபிரகாமின் சந்ததியிடம் மட்டும் அவர் போதித்து புதுமை செய்தாரே அன்றி அன்றைய யூதேயா சமாரியா போன்ற இஸ்ரேலிய பகுதியினை விட்டு ஒரு இன்ஞ் அவர் நகரவில்லை. அந்த இனத்திற்கு மட்டுமே போதித்தார்)
யூத உலகிற்கு இது புதிது, அதுவரை வந்தவர்கள் எல்லாம் கடவுளின் போதனையினை வேறுமாதிரி சொன்னவர்கள், அவர்கள் பார்த்த கடவுளின் தூதர்கள் இறைவக்கினர்கள் அப்படித்தான் இருந்தனர். அவர்கள் சட்டங்களை உயிராக மதித்தனர்,
ஆனால் இயேசு அந்த இலக்கணத்திற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தார்.
யூத தலமை அன்றிலிருந்தே அவரை கொல்லதேடினர், பல கொலை முயற்சிகளிலிருந்து அவர் தப்பியபடியேதான் போதித்தார், ஆனால் மக்கள் கூட்டம் அவருக்கு பெருக பெருக யூத தலமை கூடம் அஞ்சியது.
அக்காலத்திலிருந்து அடிக்கடி அடிமையாகும் விதிகொண்டது யூத இனம், ஆது ஹிட்லர் காலம் வரை நீடித்தது உலகறியும், யாரிடமாவது அடிமைகளாய் வசமாய் சிக்குவார்கள். எகிப்து,பாபிலோன் என ஒரு சுற்று முடிந்து இயேசு காலத்தில் சொந்த நாட்டில் ரோமரிடம் சிக்கி அடிமைகளாக இருந்தார்கள்.
ரோமர் மிகபெரும் பேரரசினை ஆண்டுகொண்டிருந்ததால், கலகம் மிகும் இடங்களை தந்திரமாக ஆண்டார்கள், அதாவது ஒருவகையான சுயாட்சிமூலம் கட்டுபடுத்தினார்கள். யூதர்களை அவர்கள் கட்டுபடுத்திய விஷயம் வித்தியாசமானது.
சில விஷயங்களை வைத்து சிலரை கட்டுபடுத்தலாம், இலங்கை திரிகோணமலையினை வைத்து சில நாடுகளை கட்டுபடுத்தும், எகிப்து சூயஸ் கால்வாய் வைத்து மிரட்டும் இது சில இனங்களுக்கும் பொருந்தும், பெரியார் சிலைக்கே பொங்கிய தமிழகம் இது
அப்படி மொத்த யூதனும் அமைதியாகும் விஷயம் ஜெருசலேம் ஆலயம்.
பல சிக்கல்களில் தலைபோகும் ஆபத்தினை தடுக்க ஏரோது அரசன் அதனை கட்டிமுடித்துவிட்டு, ரோமரிடம் சரணடைந்தார். ஏரோது அவ்வளவு நல்லவன் அல்ல ஒரு முறை யூதரால் விரட்டபட்டு சிரியாவிற்கு ஓடியவன் பின் அகஸ்டஸ் சீசர் உதவியோடு அன்றைய கலிலேயா பகுதிக்கு வந்தான்
யூதரின் மீது இருந்த பயத்தை போக்க அவர்கள் கனவான அந்த ஜெருசலேம் ஆலயத்தை மிக அழகாக சாலமோனுக்கு பின் கட்டி இருந்தான்
அந்த ஆலயத்தை கண்டபின் யூதர்கள் அவனை விட்டுவைத்தனர், அவனையும் ஆட்சியாளராக்கினர். மிக பெரும் சாதனையாக கோவில் கட்டிவிட்டான் போததா? அவன் பிசாசாகவே இருந்தாலும் சிக்கலே இல்லை பிரதிநிதி ஆகலாம்
ரோமர் அவனை யூத பிரதிநிதியாக வைத்துவிட்டு, பிலாத்துவினை ஆளுநராக்கி ஆட்சி செய்தார்கள். ஆனாலும் பிலாத்துவிற்கும் ஏரோதிற்கும் பொருந்தவில்லை அடிக்கடி மோதல் இருந்ததால் அவன் கலிலேயா பக்கம் சென்றான், திருவிழாவிற்கு மட்டும் ஜெருசலேம் வருவான்
ஏரோது கலிலேயா பகுதியின் அரசன், கவனிக்க வேண்டும் யூதர்களின் அரசனாக அல்ல, யூதரின் அரசன் என்றால் அவர் தனிநாடு கண்டு முடி சூட வேண்டும்.
ஆலயம் கிடைத்த மகிழ்ச்சி இருந்தாலும், அடிமை வாழ்வு யூதருக்கு பிடிக்கவில்லை.
அவ்வப்போது கலகம் சண்டை நடக்கும், ரோமர் கொல்லபடுவர், பின் ரோமானிய படை வந்து அடக்கும் , அதாவது இன்று பாலஸ்தீனியர் இஸ்ரேலுக்கு எதிராக செய்வதை எல்லாம் அன்று யூதர் ரோமானியருக்கு எதிராக செய்தனர்.
ரோமரிடம் ஒரு பெரும் மிரட்டல் இருந்தது, அது என்ன? இப்படியாக எங்களை ஆளவிடவில்லை என்றால் கோயிலும் இருக்காது, பீடமும் இருக்காது வசதி எப்படி? இனி ஒரு யூதன் மூச் விடுவான், ம்ஹூம், ஆனால் மனதிற்குள் அழுவார்கள். கடவுளின் சொந்த இனம் இன்னொரு இனத்திடம் அடிமையாவதா?
அடிமை வாழ்வில் இருந்து யூதரை மீட்க எல்லாம் வல்லவர் வருவார் என்பது யூதருக்கு கொடுக்கபட்ட கடவுளின் வாக்கு. அவர் பெரும் அரசராக, ராணுவ ஜெனரலாக வந்து யூதரை வாழ்வாங்கு வாழவைப்பார் என்பது அவர்கள் எண்ணம்,
ஆனால் இந்த மக்கள் கூட்டம் இயேசுவினை அந்த மெசியாவாக ஏற்று கொள்ள தொடங்கினர், இங்குதான் யூத தலமை கூட்டம் கலங்கிற்று.
இவர் மெசியா என்று சட்டபடி நாம் ஏற்றுகொள்ளமுடியாது, பராரிகளுடனும் பாவிகளுடனும் அலையும் இவன், மோசேயின் கட்டளையினை மீறும் இவன் எப்படி மெசியாவாக முடியும்? எங்காவது வாய்ப்பு கிடைத்தால் சனியனை தொலைத்துவிடலாம்.
ஆனால் இளைஞன், கடந்தவாரம் ஜெருசலெம் வரும்பொழுது மக்கள் மெசியாவாகவே ஆர்பரித்தனர், விட்டால் தலைவனாவான்.
தலைவனாவது பிரச்சினை இல்லை, நிச்சயம் இது இறைவனின் அரசு என சவால் விடுவான், தரித்திரம் பிடித்தவன் கடவுளின் மகனாம், மோசெ சட்டத்தினை மதிக்காத இவனா நம்மை மதிப்பான்? ரோமரை மதிப்பான்? விடுவார்களா ரோமர்?,
4 பேர் சேர்ந்தாலே சந்தேகபடுவர், இவன் கூட்டத்தை வேறு கூட்டுகிறான், சீடர்களில் சிலபேர் தீவிரவாதிகளாம், போதாதா? ரோமர் வந்து கோயிலை இடிப்பர், நம்மை அழிப்பர்.
மொத்த இனத்தினை காப்பாற்ற ஒருவனை கொன்றால் தப்பில்லை.
விளைவு அவர் போதிக்கும் இடத்தில் உளவாளிகளை நிறுத்தினார்கள், யூதாசை வளைத்தார்கள். மொத்த யூத சமூகமும் கூடும் நாளில் மிகசரியாக அவரை பிடித்து பிலாத்துமுன் நிறுத்தி குற்றசாட்டை அவரின் போதனை மூலமே தொடுத்தார்கள், ஒரு குற்றசாட்டும் நிற்கவில்லை
இறுதியில் மாபெரும் அஸ்திரத்தை ஏவினார்கள் அது வேலை செய்தது
“நமது ஆலயத்தை இடிப்பேன் என்றவனை என்ன செய்யலாம்?” என்றார்கள், அவ்வளவுதான் மக்கள் கூட்டம் கொதித்தது,
என்னது? ஆலயத்தை இடிப்பானா? விட கூடாது.
உடனே யூத மேலிடம் தூண்டிவிட்டது, “இவனை சிலுவையில் அறைவோமா?”
கூட்டம் அதை பிடித்துகொண்டது, “ஆம் அறைந்துவிடுவோம்”
பிலாத்துவிற்கு அவரை காப்பாற்ற ஆசை, ஏரோதிடம் அனுப்பினான், காரணம் இயேசு கலிலேயன் என்பதால் அவரை ஏரோது விடுவிப்பான் என நம்பினான்
ஆனால் ஏரோது தனிபட்ட நோய்தீர்க்க யேசுவிடம் கேட்டான அவர் மறுத்தார், ஆத்திரமடைந்த ஏரோது பிலாத்துவிடம் திருப்பி அனுப்பினான், கசையடி தண்டனை கொடுத்து தப்பவைக்க எத்தணித்தான் பிலாத்து.
ஆனால் யூத குருமார் கூட்டமும் வெறியெற்றபட்ட மக்களும், இவன் யூதர்களின் அரசன் என சொன்னான், அப்படியானால் என்ன அர்த்தம்? சீசர் இருக்கும் உலகில் இன்னொரு அரசனா? உமது நிர்வாகம் சரியில்லை என சீசருக்கு கடிதம் எழுதட்டுமா? என மிரட்ட பணிந்தான் பிலாத்து.
இவன் பொருட்டு என் கைகள் சுத்தமானவை, உங்கள் விருப்பபடியே கொல்கின்றீர்கள் என கையினை கழுவி சொன்னான், இயேசுவினை விடுவிக்க அவன் ஆர்வமாக இருந்தாலும் மனைவி கண்ட கனவு மற்று பாஸ்கா திருவிழாவில் கலவரம் வந்துவிட கூடாது போன்ற எச்சரிக்கைகள் அவனை முடக்கின.
சிலுபே எனும் சீரியசொல்லுக்கு கொடூர மரம் என பொருள். யார் ரோம அரசினை எதிர்க்கின்றார்களோ அவர்களை அப்படி நிர்வாணமாக அறைந்து கொல்வார்கள்.
மற்றவர்களை பயமுறுத்தும் தந்திரம். ஜெருசலேம் அருகில் அப்படி ஒரு கொலைகளம் இருந்தது. சிலுவையில் அறைந்து வைத்துவிடுவார்கள், கைதி செத்து மண்டை கழன்று விழுத்து அந்த இடமே அன்று மண்டையோட்டு மலை என்றுதான் அழைக்கபட்டது.
அங்கு இயெசுவும் அறையபட்டார், வழக்கமாக ஒரு மனிதன் சிலுவையில் ஒரு நாளில் இறப்பது அன்று அபூர்வம். அந்த தண்டனை அப்படித்தான் அணு அணுவாக கொலவதாக இருந்திருக்கின்றது. ஆனால் 6 மணி நேரத்தில் உயிர்விட்டார் இயேசு, காரணம் தோட்டத்து வியர்வை இரத்தமாக வரும் அளவிற்கு அவர் முந்தையநாளில் கடவுளிடம் கதறி இருக்கின்றார்.
கசையடியிலும் முள்முடியிலும் உடல்ம்மிக தளர்ந்து இறுதியில் மனமும் கலங்கி ஏன் என்னை கைவிட்டீர் இறைவா என கதறியபடியே செத்திருக்கின்றார்.
வரலாற்றில் சொந்த மக்களால் கொல்லபட்ட முதல் கவுரவ அல்லது ஆவண கொலை இது.
அப்பொழுது ஒரு காரியம் நடந்திருக்கின்றது, அப்பொழுது சூரிய கிரகணமும், பூமி அதிர்ச்சியும் கொஞ்சநேரம் நடந்திருக்கின்றது. எந்த ஆலயத்தினை காப்பாற்ற அவரை கொன்றார்களோ அந்த ஆலயத்தினை கூட் பூமி அதிர்ச்சி தாக்கி அதன் பீடம் உடைந்திருக்கின்றது, பொதுவாக சூரிய கிரகணம் அன்று நடைசாத்தும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு.
அதாவது சூரிய கிரகணம் நல்ல சக்திகள் பலன் குறையும் நேரம் என்பது ஐதீகம். இயேசுவும் அந்த நேரத்தில்தான் உயிர்விட்டிருக்கின்றார்.
அவர் கடவுள் அவதாரம், அதனால் அவர் உயிர்த்தார் மீண்டும் வருவார் என்பது கிறிஸ்தவர் நம்பிக்கை. இயேசு என ஒரு நபி இருந்தார், அவர் சிலுவையில் அறைபடாமல் நேரடியாக பரலோகம் சென்றார் மீண்டும் இறுதிநாளில் வருவார் என்பது இஸ்லாமியர் நம்பிக்கை.
இயேசுவிடம் கடவுள் போதிக்க சொன்னார், ஆனால் அதிகபிரசிங்கியான யேசு தன்னையே கடவுளாக்க முயன்றதால், அரசாள ரோமானியர் கொன்றனர், அவர் உயிரோடெல்லாம் வரவில்ல்லை, கல்லறை கூட உண்டு என்பது யூத நம்பிக்கை,
ஒரு விஷயம் உண்மை, அவர் சாதாரண மனிதரென்றால் அவர் சாவோடு சகலமும் முடிந்திருக்கும், ஆனால் இந்த சாவிற்கு பின்னர்தான் உலகில் அவர் அழுத்தமாக கால்பதித்தார்.
எந்த ஆலயத்தினை காப்பாற்ற யூதர்கள் அவரை கொன்றுபோட்டார்களோ அந்த ஆலயம் கொஞ்சநாளில் இல்லாமல் போனது, இன்றுவரை யூதரால் கட்டமுடியவில்லை. அதற்கென்ன மெசியா வருவார் கட்டுவார் என அச்சமூக மெசியாவிற்காக காத்திருக்கின்றதே ஒழிய, இயேசு அவர்களுக்கு பெரும் எரிச்சல்.
மகா ஆச்சரியமாக எந்த ரோம பேரரசினை எதிர்க்கின்றார் என ரோமரின் முறைபடி கொல்லபட்ட சாதாரண தச்சுதொழிலாளியின் பின்னாளைய கிறிஸ்த்வம் அடுத்த 300 ஆண்டுகளில் அந்த ரோமாபுரியினையே கைபற்றிற்று. இன்றுவரை கிறிஸ்தவ தலமையகம் அந்த ரோம்தான். அவரை கொன்ற அதே ரோம்தான்.
மொத்தத்தில் கல்வாரியில் நிர்வாணமாக தோற்றதாக கருதபட்ட இயேசு, அதன் பின் மகா வெற்றி, வெற்றிமேல் வெற்றி பெற்றிருக்கின்றார். அவரின் போதனைகள் மகா உயர்வானவை, அவர் தன்னை கடவுளின் மகன் என சொன்னாரே அன்றி தான் கடவுள் என சொல்லவே இல்லை. யூதருக்கு மட்டும் பொதுவான கடவுளை உலகெல்லாம் கொண்டு சென்றார்.
உண்மையான கிறிஸ்தவம் என்பது, அல்லேலூயா என கத்துவதும், அடுத்த மதத்தினை சாடுவதும் அல்ல. நீ மதம் மாறாவிட்டால் நரகம்போவாய் என சபிப்பதும் அல்ல. மாறாக தாழகிடப்பவனை காப்பது, தன்னால் முடிந்த உதவியினை செய்வது, முடியாவிட்டால் கடவுளிடம் கேட்டு அந்த பலத்தில் செய்வது, வாழ முடியா மக்களிடம் உனக்கு கடவுள் இருக்கின்றார் என நலல் செய்தி சொல்வதே நற்செய்தி.
பென்னிகுயிக்,ஐடா ஸ்கேடர், சாரா டக்கர், அன்னை தெரசா என அந்த வரிசையில் வந்தவர்கள் எல்லாம் அப்படிபட்ட கிறிஸ்தவ தன்மையினை பெற்றிருந்தார்கள், இங்கு அழியா தடங்களை அவர்களால் பதிக்கமுடிந்தது.
இன்று ஓரளவு வளர்ந்துவிட்ட நாடு இந்தியா, இங்கு கிறிஸ்தவ மதத்தை அறியாதோர் இல்லை. அவர்களாக மனமுவந்து கிறிஸ்துபிடித்து அவரை பின்ப்ற்றினால் முடிந்தது விஷயம்.
உண்மையில் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்காக வாழ்கிறோம், நற்செய்தி பரப்ப குடும்பமாக ஊழியம் செய்கிறோம் என சொல்பவர்கள் செய்வது என்ன? சொன்ன இடத்திலே சொல்வார்கள், அரைத்த மாவையே அரைப்பார்கள், துவைத்த துணியினையே துவைப்பார்கள்.
அப்படி இவர்கள் நல்ல கிறிஸ்தவர் என்றால் தெரசா கல்கத்தா வந்தது போல இவர்கள் ஆப்கன் சிரியா,ஆப்ரிக்கா என செல்லலாம் அல்லவா? பென்னிகுயிக் தன் சொத்தை விட்டு அணைகட்டியது போல உகாண்டா சென்று குளம் வெட்டலாம் அல்லவா? ஐடா ஸ்கேடர் ஆஸ்பத்திரி கட்டியது போல ஆப்ரிக்க பழங்குடியினரிடம் செல்லலாம் அல்லவா?
நீங்கள் பெற்றுகொண்டதை பிறருக்கும் கொடுங்கள் என்ற இயேசுவின் வார்த்தை இவர்களுக்கு தெரியாது.
தமிழகத்திலிருந்து கோட்டு சூட்டு போட்டுகொண்டு வெள்ளையன் நாட்டுக்கு போய் அங்கு சிலர் நற்செய்தி அறிவிப்பார்களாம்? யார் இவனுக்கு நற்செய்தி அறிவித்தானோ, அவனுக்கே இவர்கள் நற்செய்தி திரும்ப அறிவிப்பார்களாம் எப்படி இருக்கின்றது கிறிஸ்தவம். காரணம் காணிக்கை.
சமத்துவத்தை போதிப்பது கிறிஸ்தவம், அதனை ஏற்றுகொண்டபின் ஐரோப்பா மிக வேகமாக மாறி உயர்ந்தது. இந்தியாவிலும் கிறிஸ்தவம் வந்தது, கல்வியில் பல மாறுதல்களை தந்தது, ஆனால் ஒரு விஷயத்தில் தோற்றது, உண்மையாக தோற்றது, அதன் பெயர் சாதி.
சாதிக்கொரு சபை, உச்சகட்டமாக சாதிக்கொரு கல்லறை தோட்டம் எனும் அளவிற்கு கிறிஸ்தவம் இங்கு மகா தோல்வியினை சந்தித்திருக்கின்றது.
நிச்சயமாக இந்த போலி போதகர்கள், வெள்ளையனுக்கே நற்செய்தி அறிவிக்கும் மாகா வித்தகர்கள், சாதி கிறிஸ்தவர்கள் எல்லாம் அந்த ஆணவ கொலை செய்த யூதர்களை விட மகா மோசமானவர்கள்.
யேசுவிற்கு முன்னும் பின்னும் எத்தனையோ பேர் சிலுவையில் அறையபட்டாலும், இவ்வுலகில் இன்றுவரை சிலுவைக்கு அடையாளமாக நிற்பவர் இயேசு மட்டுமே, நல்லோரின் சாவு அந்த அளவு வலுபெற்றுவிடுகின்றது.
இந்த புனித வெள்ளியில் அன்று யூதர்கள் செய்தது கவுரவ கொலை, தந்திரமாக ரோமானியரை வைத்து செய்தனர். ஆனால் எந்த குற்றமற்ற ரத்தமும் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும், யூத இனம் பின்னால் பட்ட பாடு அப்படி.
அதுவும் பிலாத்துவிடம் இவன் ரத்தம் எங்கள் சந்ததிமேல் இருக்ககடவது என கேட்டுபெற்ற கூடுதல் துன்பம் இந்நாள் வரை நீடிக்கின்றது. இஸ்ரேலில் அமைதியாக திரியும் ஒரு யூதன் உண்டா என்றால் இல்லை.
புனிதமான இயேசுவின் ரத்தம் யூதம்,ரோமானியம் எனும் பெரும் சக்திகளையே வீழ்த்திகாட்டிற்று, அப்பாவிகளின் ரத்தம் நிச்சயம் வீணாய் போகாது என்பதுதான் வரலாறு சொல்லபோகும் உண்மை.
இந்த புனிதவெள்ளி அனுசரிக்கும் நிகழ்வில் பங்குபெறும் நண்பர்களோடு யாரும் கலந்துகொள்ளலாம், காரணம் இந்த கவுரவ கொலைதான் பின்னாளில் உலக சரித்திரைத்தையே புரட்டி போட்டது