இன்றைய செய்தித் துளிகள்….

சசிகலாவுடன் அமைச்சர்கள், போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் சந்திப்பு, பல விஷயங்கள் குறித்து ஆலோசனை

விரைவில் ஆளுநரும் அருண்ஜெட்லியும் சசிகலாவினை சந்தித்து எல்லாவற்றையும் உறுதிபடுத்துவார்கள் என நம்புவோம்

சரி அமைச்சர்களும், போலீஸ் அதிகாரிகளும் சசிகலாவினை சந்தித்து ஆலோசனை நடத்த மிஸ்டர் பன்னீர்செல்வம் என்ன செய்கிறார்?

ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகின்றாரோ?


 சென்னை வந்த ராகுல் காந்தி கலைஞரை சந்திக்காதது ஏன்? : பீட்டர் அல்போன்ஸ் சீற்றம்

ஜெய்காந்தனை எம்ஜிஆர் அழைத்தார் அவர் செல்லவில்லை மாறாக ஜெயிலில் இருந்த எம்.ஆர் ராதாவினை காண சென்றார்

எம்ஜிஆரின் அடிப்பொடிகள் ஜெயகாந்தனை மிரட்டின, “வாத்தியார் கூப்பிட்டும் போகாம, ஜெயில்ல இருக்க ராதாவ பாக்க போனியாமே, இன்னா நைனா டபாய்க்கிற”

ஜெயகாந்தன் சிங்கமென சொன்னார், “உன் தலைவனையும் ஜெயிலுக்கு போகச்சொல் அங்கு சென்று பார்க்கிறேன்”

ராகுல் கலைஞரை சென்று பார்க்கவில்லை என இந்த காங்கிரஸ்காரருக்கு வருத்தம்?

காரணம் தேடிகொண்டிருந்தார் கிடைத்துவிட்டது, இதனை விட காங்கிரஸ் கட்சியின் சின்னம் சரியில்லை என கிளம்பலாம்.

தந்தை உயிர்விட்ட திரும்பெரும்புதூருக்கு கூட செல்லாத ராகுல், கலைஞரை பார்க்கவில்லையாம்

ஏன் அண்ணா சமாதிக்கு ஏன் செல்லவில்லை என சொல்லலாமே.


சசிகலா நடராஜனை எதிர்த்து சசிகலா புஷ்பா பொதுசெயலாளர் தேர்தலில் களமிறங்குகின்றார்

நல்ல வேளையாக கட்சியில் இரு சசிகலாக்களே இருந்து தொலைத்தார்கள், இந்த பெயரினை வைத்தாலே சர்ச்சை வந்துவிடும் போல‌

எப்படியோ சசிகலா புஷ்பா களமிறங்கிவிட்டார் அல்லவா?, சும்மாவே அது மந்தை. ஒரு ஆடு குதித்துவிட்டது

இனி தொடர்ந்து பல ஆடுகள் குதிக்கலாம்


அப்பல்லோ தகவல்கள் சரியானவை: வைகோ

சரிதான், இனி அப்பல்லோவிற்கு விரைவில் மங்களம் பாடப்படும்.


ஜெ. மரணத்தில் ஏன் ரகசியம்? ‍ : பிரதமருக்கு கவுதமி கடிதம்

அன்று பிரதமரை சந்தித்தார், கமலை விட்டு பிரிந்தார். இன்று ஜெயா மரணம் பற்றி பிரதமருக்கே கடிதம் எழுதுகின்றார்

ம்ம்..ஏதோ தட்டுபடுகின்றது அல்லவா? பாஜக சந்திப்பு, அரசியல் பிடிக்காத கமலஹாசனோடு முறிவு, இன்று பிரதமருக்கு கடிதம்?

ஏதோ ஒரு தொடர்பு வருகின்றதல்லவா?

சரி, மிஸஸ் தமிழிசை சவுந்தர்ராஜன், பிளீஸ் ஸ்டேண்ட் அப்

அந்த நாற்காலியில் அமர கவுதமி வந்துகொண்டிருக்கின்றார்

இனி தமிழிசை என்ன செய்வார்?

சினிமாவில் நடித்த பிரபலங்களுத்தான் பாஜகவில் வாய்ப்பு என மனதிற்குள் கருவி, நானும் நடிகையாகிறேன் என சினிமாவிற்கு சென்று விடும் ஐடியா இருந்துவிட்டால் நாடு தாங்குமா?


இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

அதாவது இந்திய அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக தமிழக அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத ஒரு தினம்.

அவர்களுக்கு கருப்பு தினம்.


 துபாயில் இருந்துகொண்டு முகநூலில் முழங்கியும், அடிக்கடி ரத்த சாட்சியாகவும் காட்சி கொடுத்தும், பிரச்சார வீடியோ எடுத்தும், இன்னும் சொல்லணா தியாகங்கள் செய்தும், அடிக்கடி தினந்தந்தியில் அம்மாவை வணங்கியும் நின்ற‌,

அந்த துபாய் அதிமுக பாலா என்பவரை ஒரு வார்த்தை கூட கேட்கமால், கட்சியின் அடுத்த பொதுசெயலாளர் யார்?? எனும் அளவிற்கு ஆலோசனை நடத்துபவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்

அம்மா இறந்த அதிர்ச்சியில் அவர் அமைதியாக இருக்கலாம், அவர் உண்மை விசுவாசி அல்லவா? துக்கம் கலைக்க நாளாகும்.

ஏற்கனவே பெரியார் பெருந்தலைவர் கட்சி பெபெக என ஒன்றை, ஒற்றை ஆளாக நடத்திய அனுபவம் அவருக்கு உண்டு,

விரைவில் ஜெ அதிமுக என்றொரு கட்சியினை அவரை தொடங்க வைத்துவிடாதீர்கள்

அதிமுக பாலாவின் தியாகத்தை கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஆலோசனை எனும் அளவிற்கு சென்றுவிட்ட அவர்களும் அந்த கட்சியும்……………………….