இன்றைய ஜெயா டிவி செய்தி எப்படி இருக்கும்?

இன்றைய முதல் வேலை ஜெயாடிவி நியூஸ் பார்க்க வேண்டும். முன்பு காற்றில் ஊழல், அலைகற்றை ஊழல் என அடிக்கடி சொல்லிகொண்டு இருந்ததே அவர்கள்தான்

ஜெயா சிறைக்கு போனபொழுது கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக என்றுதான் வாசித்துகொண்டிருந்தார்கள்

இன்று நிச்சயம் ஸ்பெக்டரம் தீர்ப்பு வந்திருப்பதை கண்டுகொள்ளவே மாட்டார்கள் என தெரிந்தாலும், அதை பார்த்து ரசிப்பதில் நமக்கொரு திருப்தி

அப்படியே இன்று தினகரனும் வழக்கிற்காக டெல்லி செல்ல வேண்டும் அதனை சொல்வார்களா இல்லையா என தெரியவில்லை

இன்றைய ஜெயா டிவி செய்தி எப்படி இருக்கும்?

ஆர்.கே நகரில் வோட்டு போட்டுவிட்டு வந்தவர்கள் எல்லாம் ஜெயாவிடி மைக் முன்னால் அம்மாவிற்கும் தியாக தலைவி சின்னம்மாவிற்கும் துரோகம் செய்தவர்கள் ஒழிவார்கள் என சிலர் சொல்லும்படியாகவே இருக்கும்

ஆக அம்மாவிற்கும், தியாக தலைவி சின்னமாவிற்கும் பெரும் துரோகம் செய்திருப்பவர் நீதிபதி ஷைனி என நாமாக புரிந்துகொள்ள வேண்டும்


நேற்று இரவு முழுக்க ஆர்.கே நகரில் பண பட்டுவாடா நடந்திருக்கின்றது , தினகரன் அதிகாரிகளிடம் சீற்றம் .: செய்தி

பின்னே, இவர் செய்ய வேண்டிய வேலையினை இன்னொருவர் செய்தால் மனிதருக்கு கோபம் வரத்தான் செய்யும், தார்மீக கோபம் என்பது இதுதான்


2ஜி தீர்ப்பு பிராமணார்க்கு செருப்படி : திண்டுக்கல் லியோனி

வழக்கினை நடத்தியது சிபிஐ, தீர்பிட்டிருப்பது நீதிமன்றம் இதில் பிராமணர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

அப்படியும் வழக்கு தொடுக்கபடும்பொழுது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்

ஒருவேளை அந்த சோனியா சாஸ்திரிகள், மன்மோகன் நம்பூதிரி, சிதம்பரம் அய்யங்கார் இவர்களை சொல்வாரோ???

மிஸ்டர் லியோனி, கனிமொழி ஜாமீனுக்கு வாதாட மட்டும் பிராமண வழக்கறிஞர்கள் வேண்டுமா? அதை மட்டும் ஏன் மறைக்கின்றீர் அய்ய்யா?

ஜெயா குற்றவாளி என அறிவிக்கபடவும், சசிகலா உள்ளே இருக்கவும் ஒரே காரணம் ஆச்சார்யா எனும் பிராமணன் என்பதை மறுக்கமுடியுமா?

அவர் வந்து என்னடா சொன்னாய் என செவிட்டில் அடித்தால் தாங்குவீரா?

பிராமணருக்கு செருப்படி தான் கிடைக்கும் 
என ஆச்சாரியா பின்வாங்கியிருந்தால் சசிகலா சிறைசென்றிருப்பாரா?

இதுதான் திராவிட கொள்கையா?