இன்றைய துளிகள் தொடர்ச்சி …

என்ன ரஜினி, தேர்தலுக்கு வரலைன்னு சொல்லிட்டீங்க?

கமல், நமக்கு என்ன அசைன்மென்ட் கொடுத்திருகாங்க, ஒண்ணு பாஜக பக்கம் போகணும் இல்ல அவங்களுக்கு ஆதரவா வோட்ட பிரிக்கணும்

ஆமா ரஜினி அதுக்குத்தான் இவ்வளவுபாடு

கமல், பாஜக மேல தமிழ்நாட்டு மக்களுக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயமில்ல, இப்போ நானும் அவங்க கூட நின்னா அவ்வளவுதான், அடிச்சி அண்டர்வியரோடு விட்டிருவாங்க மானம் போனா திரும்ப வராது

அப்போ போர்களத்துக்கு வரவே மாட்டீங்ளா ரஜினி? அண்டர்வியர் மேல அவ்வளவு பயமா?

வெற்றி எங்கே இருக்க்கோ அங்கே சேரணும் இல்லாட்டி அமைதியா இருக்கணும், அதுதான் நம்ம இமேஜ் காப்பாத்திக்க நல்லது

அப்படின்னா என்னை அண்டர்வியரோடு அனுப்ப போறாங்களா ரஜினி?

அட உங்களுக்கென்ன கமல், ஏற்கனவே பல படங்கள்ல அப்படித்தானே வந்திருக்கீங்க, அரசியலிலும் அப்படித்தான் வரப்போறீங்க, நோ வொர்ரி அந்த அவமானம் உங்கள பாதிக்காது”

*****

பிராமணன் இந்திய ராணுவத்தில் உண்டா, அவன் நாட்டுக்காக செத்தானா என ஏகபட்ட திராவிட கும்பல்கள் கேட்டுகொண்டே இருக்கின்றன‌

பிராமண இனம் தமிழகத்தில் அய்யர், தெலுங்கில் அய்யங்கார், கேரளாவில் நம்பூதிரி, வடக்கே சாஸ்திரி, ஷர்மா வங்கத்தில் சாட்டர்ஜி, பானர்ஜி, காஷ்மீரில் பண்டிட் என பல பெயர்களில் அழைக்கபடுகின்றது

இதை நாம் மட்டும் சொல்லவில்லை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரே பல இடங்களில் சொல்லியிருக்கின்றார்

“பார்ப்பான் ஒவ்வொரு இடத்திலியும் ஒவ்வொரு பெயரில அதிகாரம் செய்றானுங்க, பேருதான் வேறங்க ஆனா எல்லா பயலும் பார்பானுங்கங்க” என பல மேடைகளில் சொல்லி பல ஏடுகளில் எழுதியவர் பெரியார் அதில் உண்மையும் உண்டு

இந்தியாவில் தளபதிகள் முதல் பல பதவிகளில் பிராமணர் இருந்தனர், ஏன் உளவுதுறை உருவாக்கபட்டபொழுது அதன் தலைவரும் மிக சிறந்த உளவாளிகளும் பிராமணராகவே இருந்தனர்

இந்தியாவின் முதல் “பரம்வீர் சக்ரா” எனும் ராணுவத்திற்கான விருதினை பெற்றவர் சோம்நாத் ஷர்மா எனும் பிராமணர்

ஒவ்வொரு யுத்தத்திலும் செத்த ஏகபட்ட பிராமண ராணுவ வீரர்கள் உண்டு

அவ்வளவு ஏன் 3 நாட்களுக்கு முன்பு புல்வமா தாக்குதலில் கொல்லபட்ட பங்கஜ் திரிபாதி, மகேஷ் சர்மா, குமார் ராவட் என்ற மூன்று பேரும் பிராமண சமூகம் என்கின்றது செய்தி

பிராமணர் என்றால் தமிழ்நாட்டு கோவிலில் மணியடிக்கும் அய்யர், சங்கராச்சாரி , எஸ் வீ சேகர், எச்.ராசா, குருமூர்த்தி மட்டுமே என இவர்களாக முடிவு செய்து ஏதாவது பேசிகொண்டிருப்பது

அதெல்லாம் இருக்கட்டும், சுதந்திர போராட்ட வீரன் என ஒரு திக காரனை காட்டிவிடுங்கள், ஒரு கருப்புசட்டைகாரனை காட்டிவிடுங்கள் பார்க்கலாம்

அட அவ்வளவு ஏன்? நாட்டுக்காக செத்த ஒரு திக, திமுக உறுப்பினரை காட்டுங்கள் பார்க்கலாம்

திகவும் திமுகவும் செய்தது என்ன?

இலங்கையில் இந்நாட்டு ராணுவத்தினை கொன்று குவித்த புலிகளை ரகசியமாக தமிழகத்திற்கு வரவழைத்து காயத்திற்கு மருந்து போட்ட மிக பெரிய சேவை என்பதை தவிர, அந்த தேசதுரோகத்தினை தவிர ஒன்றுமே இல்லை