இன்றைய துளிகள் – 06/03/2019 (1)
அண்ணே பெரியார் என்ன சொல்லிருக்காரு
என்ன சொன்னாரு?
நாட்டுபற்று தேசபற்று எல்லாம் பொய், அதெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம்னு சொல்லிருக்காரு
அதனால
சும்மா இந்த தேசம், நாடுன்னு பொங்காதீங்க, அதெல்லாம் பிராமண சதி
“அடேய் மானமும் அறிவும் மானிடருக்கு அழகுண்ணு” யார் சொன்னா?
இது தெரியாதா? பெரியார்ணே
அதாண்டா, இது என் நாடு எனக்கு மானம் இருக்கு அதனால நான் பொங்குறேன், உனக்கு மானமில்ல , அறிவுமில்ல நீ இம்ரான்கான் வாழ்கன்னு சொல்லிட்டே இரு போடா, அடி வாங்குறதுக்குள்ள ஓடிரு”
என்னது மோடியினை எதிர்ப்பது இந்து மதத்தை ஆதரிப்பது ஆகாதா?
அதையும் தெளிவாக சத்தமாகவுமா ஒருவர் உளறுவார்?
அதற்கு கைதட்ட 4 அல்லக்கைகள் வேறா?
கலைஞர் புரியாமல் பேசி குழப்புவதில் வல்லவர், அது சுவாரஸ்யமானது
இவரோ எழுதி வைத்ததையும் தப்பு தப்பாக பேசிகொண்டிருக்கின்றார்
இப்பொழுது உபிக்களுக்கு சிக்கலான நிலை
மோடியினை எதிர்த்து முக ஸ்டாலின் இந்துமதத்தை ஆதரிக்கவில்லை என எப்படி முட்டிகொடுப்பது என கடும் ஆலோசனையில் இருக்கின்றார்கள்
கெடு முடிய இன்னும் 24 மணிநேரமே உள்ள நிலையிலும் சத்திய மூர்த்தி பவனும், டெல்லி அக்பர் சாலை காங்கிரஸ் அலுவலகமும் தொடர்ந்து அமைதி காப்பது நல்லதல்ல
உடனே தலைவி குஷ்புவிற்கான தொகுதியினை அறிவித்து பேரழிவினை தவிர்க்குமாறு சங்கம் கேட்டுகொள்கின்றது
ஒரு கையில் வரவேற்கும் மலர்செண்டு இன்னொரு கையில் காங்கிரசை குழிதோண்டி புதைக்க மண்வெட்டியும் கையுமாக சங்கம் காத்திருக்கின்றது
எது வேண்டும் உங்களுக்கு என்பதை நீங்களே இன்னும் 23 நிமிடம் 59 நிமிடங்களுக்குள் முடிவு செய்யுங்கள்