இன்றைய துளிகள் (1)
மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு- கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல்
ஓராண்டாக என்ன செய்தார், மய்யம் எங்கே வளர்த்திருக்கின்றது என பார்த்தால் ஒன்றுமே இல்லை
கட்சி தொடங்கும் பொழுது அருகில் இருந்த ஸ்ரீபிரியா உள்ளிட்டவர்களை கூட இப்பொழுது காணவில்லை
சொல்லிகொள்ளாமல் ஓடிவிட்டார்கள் போலிருக்கின்றது
திரையில் கமலஹாசன் ஜெயித்திருக்கலாம் ஆனால் அரசியலில் கேப்டன் விஜயகாந்த் பக்கம் கூட அவரால் வரமுடியாது என்பதுதான் நிஜம்
பிஞ்சு குழந்தைகளுக்கு கூடுதல் சுமை
வெள்ளையன் கல்வி கொடுக்க ஆரம்பித்த காலத்தில் உயர் படிப்பெல்லாம் அதிகமில்லை
இதனால் 8ம் வகுப்பும் ஒரளவு எழுதபடிக்க தெரிந்த 5ம் வகுப்பும் அவனது ஆட்சிக்கு தேவையான கல்வியாய் இருந்தது, அதெல்லாம் பழங்காலம்
இன்று பி.எச்டி படிப்பே கட்டைபீடி போல ஆளாளுக்கு கையில் வைத்திருக்கும் காலத்தில் 5ம் வகுப்பு 8ம் வகுப்பு கடும் கட்டாய தேர்வு என்பது கற்காலத்திற்கு திரும்புவதை போன்றது
அல்லது கடுமையான உள்நோக்கம் கொண்டது
பிஞ்சு குழந்தைகளுக்கு கூடுதல் சுமை கொடுக்கும் இத்திட்டம் நிறுத்தபட வேண்டும், கிராமபுற மாணவர்களை கல்வியிலிருந்து விரட்டும் ஆபத்தும் இதிலிருக்கின்றது
நிச்சயம் இது அகற்றபட வேண்டும் என்பதில் மாற்றுகருத்தே இல்லை
சவுதி முதலீடு
பொருளாதார வலிமையான நாடான சவுதி இந்தியாவில் 100 பில்லியன் டாலருக்கு முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றது
நிச்சயம் இது நல்ல விஷயம், ஈரானோடும் நல்லுறவு சவுதியிடமிருந்தும் முதலீடு என்பது இந்தியாவின் ராஜதந்திர வெற்றி
ஏராளமான இந்திய தொழிலாளர்கள் சவுதியில் பணியாற்றும் நிலையில் சவுதி இந்திய ஒத்துழைப்பு மகா அவசியம்
காவி அரசு என்ற நிலையிலும் இஸ்லாமிய நாடுகளுடன் நல்ல உறவினை பேணுவது நல்ல விஷயம்
ஆனால் அதே இஸ்லாமிய நல்லுறவினை இந்தியாவிலும் மோடி தொடர்ந்தால் நன்றாகத்தான் இருக்கும்
தமிழக மாப்பிள்ளை
தமிழக மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்ய தயார் : தமண்ணா அறிவிப்பு
Senthil Kumar Chennai , Omm Prakashபோன்றவர்கள் கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்து தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து தமண்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது
வாய்ப்புகிடைக்காதவர்கள் ஹன்சிகா அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும்