இன்றைய துளிகள் 17/06/2019

ஜெயமோகனும் பெட்டிகடைகாரனும்

ஜெயமோகனும் பெட்டிகடைகாரனும் வாய்சண்டையில் முதலில் ஈடுபட்டார்கள் என்கின்றது ஒரு கோஷ்டி

ஆனால் ஒரு பயலும் அவர்கள் என்ன வார்த்தையில் திட்டி கொண்டார்கள் என சொல்லவே இல்லை

நாரோயில் (நாகர்கோவில் )மக்கள் சண்டையிட்டு கொண்டால் கேட்கவே ரசனையாக இருக்கும்

அந்த வார்த்தைகளுக்கு பாதிதான் அர்த்தம் புரியும் என்றாலும் அப்படி ஒரு ஸ்லாங்கில் ஆக்ரோஷமாக திட்டி தீர்ப்பார்கள்

அங்கிள் சைமன் எல்லாம் அவர்கள் முன் நிற்க முடியாது, அலறி அடித்து ஓடிவிடுவார்

“தள்ளைய..” என தொடங்கி தாயோழி என வளர்ந்து … எங்கெல்லாமோ போகும்.

வாத்சாயனர் நாகர்கோவில் பக்கம்தான் பிறந்திருப்பாரோ என்ற அளவு யோசிக்க செய்யும் வார்த்தைகள் அவை

.உலகத்திலுள்ள மொத்த கெட்டவார்த்தையும் அந்த ஒரு ஊருல அடங்கும்ணா சும்மாவா?

அந்த சண்டையினை கேட்டவர்கள் யாராவது சொன்னால், காது குளிர கேட்கலாம்…

Happy Fathers Day….

“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் 
யானும் நீயும் எவ்வழி அறிதும் ..”

விஷால் பல பெண்களை சீரழித்தார் நடிகை ஸ்ரீரெட்டி புகார்

சினிமா உலகில் வாய்ப்புகளை மிக கச்சிதமாக பயன்படுத்தும் நடிகை அம்மணி ஒருத்திதான்

எப்பொழுது யார்மேல் எந்த குண்டை வீசவேண்டும் என அவருக்கு கனகச்சிதமாக தெரிகின்றது

ஜெகமோகன் ரெட்டி தப்பியதே தகப்பன் செய்த புண்ணியம் போல..

இதோ அட்டகாசமாக விஷால் மீது ஏவிவிட்டார்கள், இனி விஷால் அலறி அடித்து ஓடுவதை தவிர வேறு வழியே இல்லை

இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்தினார் அமித்ஷா

அறை நண்பன் நேற்றே சொன்னான், “அண்ணாச்சி நாளைக்கி மோடி கண்டிப்பா இந்திய அணியினை வாழ்த்துவார் பாரும்..”

அட அட, நம்மை விட அவனுக்கு இந்திய அரசியல் நன்றாகவே தெரிகின்றது.

இனி அந்த மகானை சாதாரணமாக எண்ண கூடாது…