இன்றைய துளிகள் 20/03/2019 (1)

வெற்றிகொண்டான்கள் சாகவில்லை, திமுக ஒரு காலமும் திருந்தாது

ஆபாசமும் அசிங்கமும் அவர்களுடன் கருப்பும் சிகப்புமாக கலந்தவை

அம்மா கனிமொழி அவர்களே

மகா ஆபாசமாக பேசிதிரியும் திமுக மேடைபேச்சாளர்களையும் வலைதள திமுகவினரையும் முதலில் கண்டித்து திருத்துங்கள்

பொள்ளாச்சி விவகாரத்தை அதன் பின் பார்க்கலாம்

பதிலே இருக்காது

“தமிழனுக்கு விஞ்ஞானம் தெரியாது, எமனுக்கு வாகனம் எதுவென கேட்டால் எருமை கடா என்பான்” அண்ணாவின் இந்த வசனத்தை அடிக்கடி சொல்லி மகிழ்கின்றது அந்த தரப்பு

சரி, திமுக ஆட்சியில் அல்லது அவர்கள் கும்பலில் அப்படி எத்தனை விஞ்ஞானிகள் உருவானர்கள்? உலக புகழ் பெற்றார்கள்? என கேட்டால் பதிலே இருக்காது

“என்ன யழவுடா இது?

ஒன்னு பாஜக சங்கி கோஷ்டி, இன்னொன்னு திமுக டெங்கி கோஷ்டி

இவனுக இரண்டுபேர்கிட்டேயும் சிக்கி உண்மையும் வரலாறும் படாத பாடுபடுது..

எவ்வளவு பொய்யா சொல்ரானுக பிளடி நான்சென்ஸ்”

“உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என சொன்ன முதல் பாட்டாளி கட்சி திமுக , உபிக்கள் உற்சாகம்

உழுபவனுக்கு நிலம் சொந்தமென்றால் நாற்றுநடவு , களையெடுக்கும் பெண்களுக்கு எல்லாம் பாதி நிலமாவது கிடையாதா?

நெல் அரைக்கும் ஆலைக்கு அரைக்கும் நெல் எல்லாம் சொந்தமா?

உண்பவனுக்கு ரெஸ்டாரண்ட் சொந்தம் என்றால் நாடு தாங்குமா?

வரலாறுகள் எப்படி எல்லாம் முரண்படுகின்றன

அப்பொழுது கனிமொழி திகாரில் இருந்தார், அடிக்கடி சென்று பார்த்த கலைஞர், திரூவாரூரில் மிக உருக்கமாக இப்படி பேசினார்

“திகார் எப்படிபட்டது தெரியுமா? வெயில் கொடுமை மிக்கது ஒரு பூவை தரையில் வைத்தாலும் அப்படியே கருகிவிடும், அப்படிபட்ட வேகாத வெயிலில் திகாரில் அடைக்கபட்டு கொடுமைபடுத்தபடுகின்றார் கனிமொழி”

அதே கனிமொழி இன்று மிக கடுமையான‌ வேகாத வெயிலில் தூத்துகுடி தொகுதி முழுக்க சுற்ற போகின்றார்…

வரலாறுகள் எப்படி எல்லாம் முரண்படுகின்றன.

நீங்க வாங்க பேபிம்மமா..

கலைஞரின் அக்கா குடும்பமெல்லாம் கட்சிக்குள் அரசியலுக்குள் வரும்பொழுது ஜெயாவின் அண்ணன் குடும்பம் வருவதில் என்ன தவறு?

நீங்க வாங்க பேபிம்மமா.. ம்ம் .. ஜம்ப் பிளீஸ்…