இன்றைய துளிகள் 21/06/2019
நிச்சயம் வன்மமிக்கது
யோகாவினை கொண்டாடி தொலைக்கட்டும்
ஆனால் இந்திரா பிறந்தநாளை கழிப்பறை தினம் என்பதும், ஹோவர்க்கர் நினைவுநாளை உலக யோகா தினம் என்பதும் எம்மாதிரியான விஷயங்கள்
அதுதான் சரியல்ல, நிச்சயம் வன்மமிக்கது.
“அண்ணே என்னெண்ணே பெரிய யோகா? நாங்கெல்லாம் எவ்வளவு செய்வோம் தெரியுமா?
அப்படியா? எப்பொழுது?
எல்லாம் இரவு 7 மணிக்கு பிறகு
யார் உங்கள் குரு?
அவரெல்லாம் எதுக்குண்ணே? வோட்கா உள்ளே போனால் யோகா தானாக வரும்..”
யோகா தாரகை
“யோகா தாரகை” ஷில்பா ஷெட்டியினை தவிர யாரிடமும் யோகா கற்க முடியாது என பிடிவாதமாய் அமர்ந்திருக்கின்றது சங்கம்.
யோகா கற்றால் ஷில்பா ஷெட்டியிம் மட்டுமே கற்போம், அவர் கற்றுதராத யோகா வேண்டவே வேண்டாம்..
(தலைவியிடம் இன்று ஒருநாள் மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டே சங்கம் பதிவிடுகின்றது,
அவரும் மன்னித்துவிட்டார்..)
இதுதான் பெரியார் மண்..
குஜராத்திலும் வடக்கே எங்கேயும் நிகழ்ந்த விஷயங்கள் என்றால் உடனே காவி தீவிரவாதம் , பாசிசம் என பொங்கும் யாரும் கோவையில் இப்பொழுதும் 3 பேர் பயங்கர சதிதிட்டத்துடன் கைது செய்யபட்டபட்டிருக்கும் நிலையில் வாயே திறக்கமாட்டார்கள்.
ஏன் என்றால் அப்படித்தான்
இதெல்லாம் என்ன வகை நியாயம்? என சட்டையினை பிடித்து கேட்டாலும் ஜனகராஜ் ஸ்டைலில் சிரித்துகொண்டே செல்வார்களே தவிர வாயே திறக்கமாட்டார்கள்
இதே தமிழகத்தில் அரைகிலோ வெடிபொருளுடன் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன் சிக்கியிருந்தால் நடந்திருப்பதே வேறு
இதுதான் பெரியார் மண்..
நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் ஓடிசென்று எடுத்து கொள்வதில் அவர் கவனமாக இருந்தார்
அவரின் நீண்ட ஆயுளுக்கு யோகாவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்

கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.
விஜயகாந்தின் பிறபகுதி இவ்வளவு சிக்கலாகும் என யாரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது
எல்லாம் ஆழம் தெரியாமல் அரசியலில் விழுந்தும், அதிலிருந்து மீள தெரியாமல் தவிப்பதுமே காரணம்