இன வெறி பயங்கரவாதம்

நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலில் ஒரே ஒருவனை மட்டும் குற்றவாளி என அறிவிக்கின்றார்கள், மீதி 20 பேரும் விடுதலையாம்

என்ன காரணத்திற்காக சண்டாளன் சுட்டிருக்கின்றான் என்றால் இது “இனவெறி பயங்கரவாதம்”

ஆம் கருப்பர்கள் கொல்லபட வேண்டியவர்கள், வெள்ளையர்கள் ஆளபிறந்தவர்கள் எனும் அந்த பழைய வெறியில் ஊறியவன் அந்த வெறியிலே சுட்டிருகின்றான்

இவ்வளவிற்கும் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் குடியேற்ற நாடுகள். வெள்ளையருக்கு என்ன உரிமையோ அது மற்ற இனங்களுக்கும் உண்டு

ஆனால் ஆளபிறந்த குணம் கொண்டவர்கள் அல்லவா? சுட்டுவிட்டார்கள்

இந்த இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதெல்லாம் உண்மையில் தீவிரவாதமே அல்ல, 1950க்கு முன் எந்த இஸ்லாமிய இயக்கம் இருந்தது

பாலஸ்தீன் விடுதலையொட்டியே இயக்கங்கள் வந்தன அதில் நியாயம் இருந்தது

அதன்பின் கொடூர இயக்கங்கள் ஆப்கனில் ரஷ்யாவினை விரட்ட அமெரிக்காவால் உருவாக்கபட்டவை, அதன் பின் எண்ணெய் அரசியலுக்காகவும் இந்தியா போன்ற நாடுகளை அச்சுறுத்தவும் சிலரால் இந்த கொடூர தீவிரவாதம் இஸ்லாமியம் எனும் அடைமொழியால் வளர்க்கபடுகின்றது

மற்றபடி இஸ்லாமியரால் அச்சுறுத்தல் இல்லை

இந்த சர்ச்சைகளை விட கொடுமையானது இனவெறி, அது ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா என சுற்றிகொண்டிருந்தது, சமீபகால செயதிகளால் அது அடக்கபட்டிருந்தது

அது இன்னும் உலகில் விடைபெறவில்லை மகா கொடூரமாக சுத்திகொண்டிருக்கின்றது என்பதற்கு இச்சம்பவமே சாட்சி

இது ஓயாது, அவர்கள் அப்படித்தான்

ஆசியர்கள் எல்லோரும் அவர்களுக்கு கருப்பர்கள்தான், இரண்டாம்தரமே

அவர்களை எதிர்க்க ஆசியாவில் மிகபெரும் சக்தி தேவை, இதனால்தான் அன்றே சீனாவினை ஆதரித்தார் நேரு

ஆம், உலக அரசியலில் பல கோணங்கள் உண்டு. அது அங்கிள் சைமனின் தும்பிகளுக்கு தெரியாதது போலவே இந்த சங்கிகளுக்கும் சுத்தமாக தெரியவில்லை