இப்படித்தான் இருக்கும்..

“டேய் கொலை செய்தியா இல்லையா

கத்தியால குத்தி கொலை செய்தோம்ணே

அதைத்தானடா நானும் சொன்னேன்

அண்ணே நீங்க கத்தி கைப்பிடியில‌ உறைய எடுத்துட்டு குத்துனீங்கண்ணு சொல்றீங்க அது பொய்

டேய் குத்தினீங்களா இல்லியா

அண்ணே குத்தினோம், கொன்னோம் அதெல்லாம் வேற விஷயம். ஆனா கத்தியில் கைபிடியில‌ உறை இருந்து , கைபிடியில உறை இல்லண்ணு சொல்றீங்க அது பொய்

டேய் கொலை நடந்தா இல்லியா

அது விஷயம் இல்லண்ணே, நாங்க கொன்னோம்னு ஊருக்கே தெரியும், ஆனா கத்தி கைபிடியில உறை இருந்தது உண்மை , நீங்க பொய் சொல்றீங்க‌

அப்போ கொலை செஞ்சது நீங்கதான்

அட ஆமாண்ணே, ஆனா கத்தி கைபிடி உறையோடதான் குத்தினோம். செத்தவன பார்க்காதீங்கண்ணே உறை இருந்தா இல்லியா அத மட்டும் சொல்லுங்க

டேய் கொன்னீங்களா இல்லியா

அது கிடக்கட்டும் , கத்தி கைபிடியில உறை இருந்திச்சு, நீங்க பொய் சொல்லிட்டீங்க, மரியாதையா மன்னிப்பு கேட்ருங்க‌

டேய் நீங்க கொலை செஞ்ச பாவிங்கடா

அது கிடக்கு, இப்பொ பொய் சொன்னதுக்கு மன்னிப்பு கேளுங்க, கைபிடியில உறை இருந்திச்சி”

( இப்படித்தான் ராமர் படத்தை எரித்தோம், செருப்பால் அடித்தோம் ஆனால் அம்மணமாக சிலை இல்லை என சொல்லிகொண்டே இருக்கின்றன திக திமுக கோஷ்டிகள்

அதாவது அவர்கள் செருப்பால் அடித்தது உண்மையாம், ராமர் படத்தை கொளுத்தியது உண்மையாம் ஆனால் சிலை அம்மணமாய் இருந்தது பொய்யாம்

இப்படி ராமன்படத்தை கொளுத்தியதை ஒப்புகொள்ளும் அறிவார்ந்த கூட்டத்தை எங்காவது கண்டீர்களா?

முரசொலி படித்தாலே அறிவு மங்கும், இதில் விடுதலை பத்திரிகையும் படித்தால் அறிவு எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்.. )