இப்போது ஆபத்தில்லை
மிக பதற்றமான போர்மேகம் கலைய தொடங்கியிருக்கின்றது, போரை தவிர்த்தது இம்ரான்கான் அல்ல பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் அரசின் நிலை கிட்டதட்ட கேப்டன் விஜயகாந்த் நிலையினை போன்றது, எல்லா முடிவுகளையும் பிரேமலதா எடுப்பது போல அங்கு ராணுவமே முடிவெடுக்கும்
ஸ்டாலினுக்கு சபரீசன் போல, விஜயாகாந்திற்கு சுதிஷ் போல அங்கு மறைமுக ஆட்டம் ஆடுவது ஐ.எஸ்.ஐ எனப்படும் பாகிஸ்தானிய உளவு அமைப்பு
இந்த உளவு அமைப்பின் உருவாக்கமே தீவிரவாதிகள், 1980க்கு முன்பு இத்திருப்பணியில் அவர்கள் இல்லை இந்தியாவினை உளவுபார்ப்பதோடு நிறுத்திகொள்வார்கள், ஆப்கனில் ரஷ்யாவுக்கு எதிராக உருவாக்கிய தீவிரவாதிகளை 1987 ரஷ்ய வெளியேற்றத்திற்கு பின் கையாள்வதில் திணறுகின்றார்கள்
ஆம் அந்த தீவிரவாதிகளை ஒழிக்கவும் முடியாது வைத்துகொண்டிருக்கவும் முடியாது, வேலை கொடுக்காவிட்டால் சனியன் பாகிஸ்தானை புரட்டிபோடும்
இதனால் காஷ்மீர் ஈரான் என அனுப்பி அவைகளை தாக்க சொல்லி வேலை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும் என்பது அவர்கள் தலைவிதி
ஆனால் அமெரிக்க வளர்ப்பான பின்லேடனும், இந்திய வளர்ப்பான புலிகளும் எல்லை மீறி வளர்த்த கடாபோல் பாய்ந்தது போல் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் அங்கு பாய்ந்தனர்
பெனசிர் கொலை, ராவல்பிண்டி ராணுவ பள்ளி தாக்குதல் இன்னும் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் மேல் தாக்குதல் என அவர்கள் திரும்பியதில் பாகிஸ்தான் ராணுவம் அப்செட்
ஆனால் ஏதோ காரணங்களுக்காக அமைதி
பாகிஸ்தானில் அரசுக்கு ராணுவமும் உளவுதுறையும் தங்களை கூட்டு சேர்ந்து கவிழ்க்குமோ எனும் அச்சம்
உளவுதுறைக்கு ராணுவமும் அரசும் தன்னை தொலைத்துவிடுமோ எனும் அச்சம்
ராணுவத்திற்கோ இருவர்மேலும் சந்தேக பார்வை, தீவிரவாதிகள் தங்களை ஏதேனும் ஒரு நாட்டுடன் போரில் இழுத்துவிடுவர், தேவையற்ற போரினை சந்திக்க நேரிடும் என அது யோசிக்கின்றது
இந்நிலையில்தான் இந்தியாவின் புல்வாமா தாக்குதலும் அதை தொடர்ந்த இந்திய தாக்குதலும் நடந்தன
அதே நேரம் ஈரானையும் தீவிரவாதிகள் தாக்கியதும் நடந்தது
கூட்டி கழித்த பாகிஸ்தான் ராணுவம் 2008ல் எப்படி போரை தவிர்த்ததோ அப்படியே தவிர்த்தது
2008ல் எப்படி தவிர்த்தார்கள்?
2008 மும்பை தாக்குதல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான போரை மூட்டும் தீவிரவாதிகளின் முயற்சி என சொல்லி பாகிஸ்தான் பின்வாங்கியது
(பேனசிர் படுகொலை விஷயத்தை எல்லாம் எடுத்து சொல்லி தீவிரவாதிகள் தங்கள் கைகளுக்கு மேல் வளர்ந்துவிட்டதை சொன்னது பாகிஸ்தான்)
பின்னால் பின்லேடன் பாகிஸ்தானில் சுட்டுகொல்லபடும்பொழுதும் பாகிஸ்தான் ராணுவத்தின் எதிர்ப்பு இல்லை
ஆனால் தீவிரவாதிகளின் தாக்குதலில் பின்னாளில் ஏகபட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர்
இப்படியாக பாகிஸ்தான் ராணுவ தீவிரவாதிகள் மோதல் இருக்கும் பொழுதுதான் கடந்தவார சம்பவம் நடந்தது
உங்களுக்கு கவனித்தால் புரியும் பாகிஸ்தான் ராணுவம் பெரிதாக இந்திய தாக்குதலை அலட்டிகொள்ளவில்லை, அமுக்கத்தான் பார்த்தார்கள் எனினும் செய்திகள் வேகமாக பரவ பதில் தாக்குதலுக்கு விமானங்களை அனுப்பினார்கள்
தாக்குதல் செய்தியினை பரப்பியது மசூத் அமார் அதாவது மசூத் அசாரின் தம்பி, “இஸ்லாமிய நாடொன்றை இந்தியா தாக்கியபின்பும் ஏன் பாகிஸ்தான் அமைதி? இஸ்லாமிய விரோதியா பாகிஸ்தான்?” என்ற அளவில் அவரின் கொதிப்பு இருந்தது, இது மக்களிடையே சலசலப்பையும் ஏற்படுத்திற்று
இதனால் ஒப்புக்கு விமாங்களை அனுப்பியது பாகிஸ்தான் அப்படியே அபினந்தனும் பிடிபட்டார்
நிச்சயம் இது போர்காலம் அல்ல, அப்படியான பட்சத்தில் ஏகபட்ட நிபந்தனைகள் அல்லது ஒப்பந்ததுடனேதான் அபினந்தன் விடுவிக்கபட்டிருக்க வேண்டும், இதைத்தான் நிபந்தனை விதித்தால் ஏற்கமாட்டோம் என டெல்லி முதலிலே சொல்லிற்று
ஆனால் வாய்ப்பினை வேண்டுமென்றே தவறவிட்டு அபினந்தனை விடுவிக்க செய்திருகின்றது பாகிஸ்தான் ராணுவம்
ஆம் அவர்கள் உத்தரவுதான் இது, இம்ரான் ஒரு பொம்மை
ஆக பாகிஸ்தான் ராணுவம் யோசித்திருக்கின்றது, இது ஐ.எஸ்.ஐ வளர்க்கும் தீவிரவாத யுத்தம் ஆனால் களத்தில் சாகபோவது யாரென்றால் பாகிஸ்தானி ராணுவமே
எதற்கு தேவையில்லா யுத்தம் என அது மறுத்துவிட்டது
நாட்டுக்காக சாகலாம், இந்த காட்டு மாடுகளுகளாக ஏன் வீணாக சாக வேண்டும் என போரை தவிர்த்துவிட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் முடிவிலும் நியாயம் இருக்கின்றது
சுருக்கமாக சொன்னால் ராவல்பிண்டியில் தன்மேல் நடத்தபட்ட தாக்குதலுக்கு பழிவாங்க, இந்தியா எல்லை மீறி அடித்ததை ரசிக்கின்றது பாகிஸ்தான் ராணுவம்
இந்திய ராணுவத்தின் நிலைப்பாட்டை பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தானிய ராணுவ நிலைப்பாட்டை இந்தியாவும் மிக நுணுக்கமாக புரிந்து கொண்டன
இனி இந்தியா சும்மா விடாது, எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற ஒருவித எச்சரிக்கை உணர்வும் அவர்களை அமைதிவழிக்கு திருப்பியிருக்கின்றது
இதனால் போர் தவிர்க்கபட்டிருக்கின்றது, இனி இப்போதைக்கு ஆபத்தில்லை
போரை இம்ரானும் தவிர்க்கவில்லை, மோடியும் தவிர்க்கவில்லை
இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவம் அஞ்சவுமில்லை, மோடி மிரட்டலில் மருளவுமில்லை, இதெல்லாம் பக்தாஸின் அழிச்சாட்டியம்
மோடியும் போரை விரும்பவில்லை என்பதே நிஜம்
பாகிஸ்தான் ராணுவமே இந்த இடத்தில் நிஜ ஹீரோ, தாங்கள் வளர்த்த தீவிரவாதம் தங்களையே பதம்பார்க்கும் நேரத்தில் இந்தியா அவர்களை குதறும்பொழுது அமைதி காப்பதே தர்மம் என நிற்கின்றார்கள்
அப்படியே நில்லுங்கள் பாகிஸ்தானியரே, இனியொரு யுத்தம் எந்நாளும் வேண்டாம்
(இது சுதந்திர தினதன்று இனிப்புகளை பரிமாறும் படம், இப்படி ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே, அமைதி நீடிக்க வேண்டும் என்பதே எல்லோர் விருப்பமும்)