இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது மகா சுவாரஸ்யமானது
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது மகா சுவாரஸ்யமானது, கிறிஸ்தவ நம்பிக்கை அங்குதான் தொடங்குகின்றது
என்ன நடந்தது?
இயேசு சிலுவையில் மரித்ததும் அவர் மலையில் குடைந்த கல்லறையில் அடக்கம் செய்யபட்டார், துணி சுற்றி கல்லறையில் வைத்து வாசலில் கல்லும் வைத்து அடைக்கபட்டது
யூதர்கள் கோரிக்கைபடி அதில் ரோம அரசின் முத்திரை இடபட்டு காவலாளிகளும் நிறுத்தபட்டனர் இதுவரை 4 நற்செய்தியும் சரியாக சொல்கின்றது
அதன் பின் 4 நற்செய்தியும் மாற்றி சொல்கின்றன
அதாவது வானதூதர் வந்து கல்லை புரட்டினார், காவலர் அஞ்சி நடுங்கினர், அதன் பின் இயேசு உடல் அங்கே இல்லை
இன்னொரு நற்செய்தி சொல்வது இயேசுவின் சீடர்கள் வந்தபொழுது கல்லறை திறந்திருந்தது இயேசு உடல் இல்லை. அவர்கள் கதறி அழ வான தூதர் “அவர் இங்கு இல்லை” என சொன்னார்.
( 3ம் நாள் செய்ய வேண்டிய சில யூத சடங்குகளும் உண்டு, சீடர்கள் அதற்கு வந்தனர்
வெற்று கல்லறையினை கண்டதும் யாரோ உடலை திருடினார்கள் என்றுதான் அழுதார்களே தவிர அவர் உயிர்த்தார் என்ற நம்பிக்கையே அவர்களுக்கு அப்பொழுது இல்லை)
இன்னும் சில முரண்பாடுகள் உண்டு, ஆனாலும் அது வெற்று கல்லறையாக இருந்தது என்பது எல்லா நற்செய்தியும் ஒப்புகொள்ளும் விஷயம்.
அதன் பின் இயேசு மதலேன் மரியாள் எனும் சீடருக்கு தோன்றினார், இன்னும் பலருக்கு தோன்றினார் , பின் பூட்டிய வீட்டுக்குள் எல்லாம் வந்தார் இயேசு
ஆனால் சிலுவையில் அறையபடுவதன் முன்பு போதித்தது போல போதிக்கவே இல்லை
அவர் உயிர்த்ததை சீடர்கள் மட்டும் நம்பினர், அந்த நம்பிக்கையினை எல்லோருக்கும் விதைத்தனர்
நம்பிய கூட்டம் பெருக பெருக கிறிஸ்தவம் வளர்ந்தது
ஆக இயேசுவின் வெற்று கல்லறையினைத்தான் கண்டார்களே தவிர அவரின் உடல் உயிபெற்று எழுவதை கண்ணால் கண்டது யாருமில்லை
வானதூதர் அவர் உயிர்த்தார் என்பதை சொன்னாரே தவிர கண்ணால் கண்டவர் யாருமில்லை
அதன் பின் இயேசு சீடரோடு பேசியிருக்கின்றார், உணவருந்தியிருக்கின்றார். தான் உயிர்த்ததை சீடருக்கு மட்டும் காட்டினார்
பொதுமக்களுக்கு காட்டவே இல்லை, இதோ உயிர்த்துவிட்டேன் என ஜெருசலேம் ஆலய வாசலில் வந்து நிற்கவில்லை
அப்படி இயேசு வந்திருந்தால் யூத இனம் இவ்வளவு சிக்கலை சந்தித்திருக்காது, வரலாறே மாறி இருக்கும்
அவர் ஏன் அப்படி வரவில்லை என்பதுதான் யூதரின் கேள்வி.
கிறிஸ்து உயிர்ப்பு என்பது நம்பிக்கையில் வரவேண்டும், அந்த நம்பிக்கையில் கிறிஸ்து ரட்சகர் என ஏற்க வேண்டும் என்ற விசித்திரமான நிர்பந்தம் கிறிஸ்துவத்தில் உண்டு
ஆக சீடர்கள் நம்பினர், கிறிஸ்தவர்களும் நம்பினர் அவர்களுக்கு இயேசு உண்டு
இளையராஜாவுக்கு ஏன் உண்டு?