இரண்டாம் கர்ம வீரர் பழனிச்சாமி வாழ்க…

Image may contain: 1 person, smiling, close-up

இப்போது வந்த செய்திகளிலே கவனிக்கபட வேண்டிய செய்தி முதல்வர் பழனிச்சாமி இந்த பள்ளி ஆசிரியர்கள் உட்பட்ட அரசு ஊழியர் சம்பளம் பற்றி சொன்ன செய்தி

நிச்சயம் கவனிக்கதக்க விஷயம் அது, அரசு கஜானாவின் பெரும் பகுதி அவர்கள் சம்பளத்திற்கே செல்கின்றது. டாஸ்மாக் எனும் துறையே அவர்களின் சம்பளத்திற்காக நடத்தபடுகின்றது

எப்படி ஆயிற்று இந்நிலை?

1960 வரை “வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை” என்ற நிலையே இருந்தது, அவ்வளவு சொற்ப சம்பளம் வாங்கிகொண்டிருந்தார்கள்

அவர்களுக்கு வாழ்வு எங்கு வந்தது என்றால், முதலில் வாழ வைத்தவர் கலைஞர் கருணாநிதி சந்தேகமில்லை

ஏன் வைத்தார்? சமூக நலனா? அவரின் பொதுநலத்திலே கொஞ்சம் சுயநலமும் கலந்திருந்தது

ஆம் , தேர்தலில் வாக்குகளை மக்கள் செலுத்தலாம் ஆனால் பணியாற்றுவது யார்? இரண்டே துறை ஒன்று காவல்துறை இன்னொன்று பள்ளி ஆசிரியர்கள்

இதை குறிவைத்தனர் அரசியல்வாதிகள், இவர்கள் மனதை குளிரவைத்தால் தேர்தல் நேரத்தில் பயன்படும் என்று கணக்கிட்டே அவர்களுக்கு சம்பளம் அள்ளி கொடுக்கபட்டது

பின்னர் வந்த ராமசந்திரன் தன் வள்ளல் இமேஜூக்கு இழுக்கு வரா வகையில் கூடுதலாக அள்ளிகொடுத்தார், விளைவு கஜானா ஆடியது, கூடுதல் வருமானம் இல்லாமல் சமாளிக்கமுடியா நிலை வந்தது

டாஸ்மாக் இனி தவிர்க்கமுடியா நிலை ஆனது, “வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை” என்பது “வாக்குசாவடி வாத்தியாருக்கே கவுரவ‌ வேலை” என்றானது

கொள்ளை சம்பளம் அவர்களுக்கு கொடுக்கபட்டது, சலுகைகள் வேறு தனிகணக்கு

இந்த விஷயத்தை முதலில் துணிச்சலாக கையில் எடுத்தவர் ஜெயலலிதா, ஆசிரியர் சம்பளம், விடுமுறை கால சம்பளம்,தேர்வு கால சம்பளம், பேப்பர் திருத்த சம்பளம், தேர்தல் சம்பளம் என பல சம்பளங்களை அவர்கள் வாங்குவதை கவனித்தார்

செய்வது ஆசிரியர் வேலை, பாடம் நடத்தாதபொழுது மற்ற வேலை அதற்கு ஏன் பல வழிகளில் சம்பளம் என முதலில் அவர்களுக்கு செக் வைக்க நினைத்தது அவர்தான்

ஆனால் பின்னர் வாக்கு வங்கிக்காக பின்வாங்கினார், அத்தோடு அதில் அவர் கை வைக்கவில்லை

அவர் என்றல்ல வாக்குவங்கி அடுத்த தேர்தல் என பல விஷயங்களை யோசிக்கும் யாரும் அதில் கைவைக்க முடியாது, கைவைத்தால் முடிந்தது அரசியல் வாழ்வு

இப்பொழுது காண கிடைக்கா கண்மணியாய், வராது வந்த மாமணியாய் வந்திருப்பவர் பழனிச்சாமி

அடுத்த முதல்வர் ஆசையும் அவருக்கு இல்லை, அடுத்த தேர்தல் பயமும் அவருக்கு சுத்தமாக இல்லை காரணம் அவருக்கென்ன எல்லோருக்கும் தெரியும், அடுத்த தேர்தலில் அவர் வாக்கு வாங்க போவதில்லை

இதனால் பேசா பொருளை பேச துணிந்தேன், தவறெனில் பொருத்தருள்க என தொடங்கியவர் , குற்றம் குற்றமே என சீறி நிற்கின்றார்

இப்பக்கமோ ஆசிரிய பெருமக்கள் நீர் ஏன் எம்.எல்.ஏக்களுக்கு சமபளம் கூட்டினீர் என பதிலுக்கு பொங்குகின்றனர்

என்றோ கலைஞரும் ராமசந்திரனும் தன் ஆட்சியினை தக்க வைக்க உங்களுக்கு அள்ளி கொடுத்தது போல் நான் என் ஆட்சியினை தக்கவைக்க கொடுத்தேன் போதுமா என மவுனத்தில் பதில் சொல்கின்றார் முதல்வர்

ஆக ஆளாளுக்கு தங்கள் பதவியினை தக்க வைக்க அன்றும் இன்றும் ஏதோ செய்துகொண்டிருகின்றார்கள் என தலையினை ஆட்டிவிட்டு தன் போக்கில் இருக்கின்றது தமிழகம்

ஆனால் உறுதியாக சொல்லலாம், இந்த தமிழகத்தில் ஆசிரியருக்கு கொடுக்கபடும் சம்பளம் மிக மிக அதிகம், நிச்சயம் தேவை இல்லா சம்பளம்

நாளை இவர்களை விரட்டிவிட்டால் கூட இதே வேலையினை இந்த சம்பளத்தில் 10ல் ஒரு பகுதியில் செய்ய பெரும் கூட்டமே காத்திருக்கின்றது

உயிரை பற்றி கவலைபடாதவனே நல்ல வீரனாக இருக்க முடியும், தன் அரசியல் எதிர்காலம் பற்றி கவலைபடாதவனே கர்ம வீரனாக இருக்க முடியும்

அப்படி இந்த பழனிச்சாமி இரண்டாம் கர்ம வீரர், நம் கர்மத்தின் படி நமக்கு வாய்த்த முதல்வர்

அவர் துணிந்து பேசியதற்கே தமிழகத்தில் ஆதரவு பெருகுகின்றது, முதல்வர் பேச்சில் அர்த்தமிருகின்றது என பலர் சொல்ல தொடங்கியாயிற்று

வெள்ளையானைக்கு இடப்படும் தீனிபோல் சென்றுகொண்டிருக்கும் இந்த பெரும் தொகையினை பழனிச்சாமி குறைக்கலாம், அவர்களுக்கு கடிவாளவிடலாம்

சம்பளம் போதவில்லை என்றால் அவர்கள் செல்லலாம், பதிலுக்கு ஆயிரம் பேர் காத்துகொண்டிருக்கின்றனர்

கர்ம வீரர் பழனிச்சாமி இதை செய்தால் அடுத்த தேர்தலில் தமிழக மக்கள் அவரை தேடி சென்று கொண்டுவந்து ஆட்சியில் மறுபடியும் அமர்த்துவார்கள்

என்றுமே உயிருக்கு அஞ்சாத போரிலேதான் மாவீரர்கள் வென்றிருக்கின்றார்கள், அரசியல் வாக்கு இன்னபிற விஷயங்களுக்கு அஞ்சாமல் அசரடிக்கும் பழனிச்சாமி வெல்லவும் வரலாற்றில் நிலைக்கவும் வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளது

காமராஜருக்கு பின் அரசியல் கணக்கில்லாமல் , அந்த சிக்கலே இல்லாமல் எதிர்காலம் பற்றி கவலை இல்லாமல் ஆடும் ஒரே முதல்வர் நம் பழனிச்சாமி

அந்த இரண்டாம் கர்ம வீரர் பழனிச்சாமி வாழ்க..