குடியரசு தலைவர் வருகையும்.. காவேரி விவகாரமும்… அதுக்கு மேலேயும் ….

 இருநாள் பயணமாக தமிழகம் வருகின்றார் குடியரசு தலைவர், வேலூர் கல்லூரி விழா, தங்க கோவில் யாக விழா மற்றும் சென்னை பலகலைகழக 150ம் ஆண்டு விழாவில் பங்கேற்கின்றார்

அதாவது வருவது தங்க கோவிலின் யாக விழாவிற்கு என்பதால் கூடுதலாக சில நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றார்

இரு நாட்கள் பயணமாம், ஆனால் ஒரு நாளை ஏன் ஸ்ருமதி ராணிக்கு கொடுக்கவில்லை என தெரியவில்லை

குடியரசு தலைவர் விருது வழங்கும் விழாவில் அவருக்கு பதிலாக விருது வழங்கிய இரானிக்கு, குடியரசு தலைவருக்கு பதிலாக தமிழக விழாக்களில் கலந்து கொள்ள உரிமை இல்லையா என்ன?


குடியரசு தலைவர் வழங்க வேண்டிய விருதுகளை ஸ்ருமதி இராணி வழங்குகின்றார்

சிலர் மறுத்திருகின்றார்கள், சிலர் அதையும் வாங்கியிருக்கின்றார்கள்

குடியரசு தலைவருக்கு பதில் ஸ்ருமதி இராணி விருது வழங்கும்பொழுது இவர்கள் தங்கள் வீட்டு டிரைவரையோ அல்லது சமையல்காரனை விட்டோ வாங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்


தமிழ்நாட்டில் மீத்தேன் இருக்குமிடம் மிக சரியாக மத்திய அரசுக்கு தெரிகின்றது, அணுவுலை எங்கு அமைக்கலாம், ராக்கெட் மையம் எங்கு அமைக்கலாம், இன்னும் பல ராணுவ முகாம்களை எங்கு அமைக்கலாம் என்பது நொடிக்குள் தெரிகின்றது

யார் எவருக்கு பினாமி? எங்கே எது ஒளித்து வைக்கபட்டிருகின்றது என தெரிந்து துல்லியமாக வருமானவரி ஆய்வெல்லாம் நடத்தும் அளவு தகவல் இருக்கின்றது

ஆனால் நீட் தேர்வு மையம் அமைக்கவும், எய்ம்ஸ் கல்லூரிகள் அமைக்கவும் இடம் தெரியாதாம், அவகாசம் வேண்டுமாம்

இந்த அவகாசங்களை அந்த ஆபத்து நிறைந்த விஷயங்களில் கேட்டார்களா என்றால் இல்லை, அதெல்லாம் அவசரகோலம்

ஆனால் பலனளிக்கும் விஷயத்திற்கு எல்லாம் பெரும் அவகாசம் வேண்டுமாம்


 தமிழ்நாட்டு கனிமவளம் கொள்ளையடிக்க படுகின்றது, தமிழரை தமிழனே ஆளவேண்டும் : பாரதிராஜா வேதனை

 

கிரானைட் கொள்ளையும், தாது மணல் கொள்ளையும் ஜெயா ஆட்சியிலே அனுமதிக்கபட்டு கொள்ளை அமோகமாக நடந்தது

அப்பொழுதெல்லாம் அன்னார் அரை மயக்கத்தில் இருந்தார்

இப்பொழுது அத்தொழில் எல்லாம் முடக்கபட்ட நிலையில் ஒப்பாரி வைக்கின்றார்

இந்த நபரை மனநல சோதனைக்கு அனுப்புவது நல்லது,

தமிழகடவுள் முருகனின் பெயரை தாங்கி பச்சை தமிழன் பழனிச்சாமி ஆண்டு கொண்டிருக்கும்பொழுது, இன்னும் தமிழனை தமிழனே ஆளவேண்டும் என சொல்லிகொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

நிச்சயம் மண்டையில் கோளாறு என்றே அர்த்தம்


காவிரி விவகாரம், மத்திய அரசு அவகாசம் கோருவதை ஏற்க முடியாது : ஜெயக்குமார் கோபம்

இப்பொழுது அப்படியே அன்னாரின் கண்கள் சிவந்து, நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி, பல்லை கடித்துகொண்டு கொதித்தெழுந்து ராஜினாமா செய்வார் பாருங்களேன்

ஜெயக்குமாருக்கு கோபம் வந்தால் சும்மாவா?


 4 டிஎம்சி நீரை திற என சொன்னபின்னும் கன்னடம் அசையவில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பின் மரியாதை இதுதான்

இந்நாட்டில் எஸ்.வீ சேகரை பிடிக்க முடியாமல் காவல்துறை தடுமாறுவதில் என்ன ஆச்சரியம்?

உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் தயாராக இல்லை எனும்பொழுது உச்சநீதிமன்றம் என்ன செய்ய போகின்றது?

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தா அரசுகள் கலைக்கபடட்டும், அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி பதவி விலகட்டும்

ராணுவத்தை அனுப்பி அணையினை திறக்கவில்லை என்றால் உச்சநீதிமன்ற தீர்ப்பு கன்னட அரசின் கழிவறை காகிதம் எனும் அவமானத்திற்கு இலக்காகிவிடும்


அண்ணே சதாம் உசேன் விவகாரத்துல அவர் விருமாண்டி, அந்த கொத்தாளதேவர் அமெரிக்கா, ஈரான் நல்லம்ம நாயக்கர்னு சொன்னீங்க‌

ஆமா..

அந்த இன்ஸ்பெக்டர் பேய்காமன் யாருண்ணே?

அதுதான் ஐ.நா சபை., இப்பொழுதும் பார் இஸ்ரேலிலும் கொரியாவிலும் என்னமோ உளறிகொன்டிருக்கின்றது


 சித்தராமையா அல்ல , அவர் “சித்த ரூபையா” என சித்தராமய்யாவினை கலாய்க்கின்றாராம் மோடி

ரூபையா என்றால் மோசடி பேர்வழி, சிறைவாசி என்று அர்த்தமாம்

சொல்வது யாரென்றால் மோடி.

ஊரே “மோடி ஒரு கேடி” , “மோடி போ ஓடி” என சொல்லிகொண்டிருக்க , இவரோ அவரை ரைமிங்காக கலாய்க்கின்றாராம்

மோடி காதில் ஏதோ கோளாறு, அடுத்தவர் தன்னை கலாய்ப்பதை கேட்காமல் இவர் அடுத்தவரை கலாய்க்கின்றார்