“இரும்பு முதல்வர்” பழனிச்சாமி வாழ்க..

இந்த போலி பாஸ்போர்ட் கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது

இக்கும்பலோடு தொடர்புடையவர் பாதிரி ஜெகத் கஸ்பர். இவர்தான் அக்கும்பலோடு பிரபாகரன் பிறந்த நாளில் கேக் வெட்டுதல், மரம் நடுதல் என ஏக அலப்பறைகளை செய்தவர்

அவரும் ஐரோப்பா முதல் பலநாடுகளில் தொடர்புடையவர்

இக்கும்பல் முழுக்க முழுக்க புலி ஆதரவு தொடர்புடையவர்கள் என்பதால் , அவர் எப்படி தப்பித்தார் என தெரியவில்லை

இச்சம்பவம் நடக்கும் என நினைத்தாரோ என்னமோ பாதிரி தூத்துகுடி கலவரத்திற்கு நீதி வேண்டும் என மாறுவேடத்தில் திரிகின்றார்

இத்தனை ஆண்டுகாலம் பிடிபடாத கும்பல்கள் எல்லாம் பிடிபடுகின்றன, ராமேஸ்வரத்தில் பயங்கர ஆயுதங்கள் மீட்கபடுகின்றன‌

இரும்பு முதல்வர் பழனிச்சாமி அசத்துகின்றார்

இப்பொழுதெல்லாம் நாம் பழனிச்சாமியின் ரசிகராக மாறிகொண்டிருக்கின்றோம்


ராமேஸ்வரத்தில் புதைத்து வைக்கபட்ட சில வருடங்களுக்கு முந்தைய‌ ஏகே 17 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கபட்டிருக்கின்றன, நிச்சயம் மீன் பிடிக்க இவ்வகை தோட்டாக்கள் பயன்படாது

பின் எதற்காக அங்கு பதுக்கினார்கள்?

வேதாரண்யம், ராமேஸ்வரம் முதல் தூத்துகுடி வரையிலான கடற்பகுதிகள் கடத்தலுக்கு பெயர் பெற்றவை, அவை எக்காலமும் நடப்பவை

இந்திரா கச்சதீவினை கொடுக்க இம்மாதிரி சிக்கல்களே முதல் காரணம். போராளி குட்டிமணியே இலங்கை கோர்ட்டில் எம் தொழில் கடத்தல் என சொல்லியிருந்தது குறிப்பிடதக்கது

தமிழக மீணவ சமுதாயத்தின் எல்லா மீணவர்களுமா கடத்தினார்கள், அல்லவே அல்ல.

மொத்த மீணவர்களும் அல்ல, சொல்லபோனால் கடத்துபவர்கள் மீணவர்களும் அல்ல, மீணவர் அடையாளத்தில் இருந்த சில படுபயங்கர சக்திகள்

ஆனால் புலிகள் காலத்தில் ஆயுதங்களும் இன்னபிற விஷயங்களும் கடத்தபட அது பெரும் சிக்கலானது

சிங்கள கடற்படை அதன்பின்பே சந்தேகம் கொண்டு சுட ஆரம்பித்து பெரும் கொடுமைகள் எல்லாம் நடந்தன‌

ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மொத்த ராமேஸ்வர மீணவ சமூகமும் பட்டபாடு கொஞ்சமல்ல‌

கடத்தலை தமக்கு சாதகமாக புலிகள் வளைக்க, அதிலிருந்தே ராமேஸ்வர மீணவ சிங்கள ராணுவ மோதல் தொடங்கிற்று

புலிகள் காலத்தில் தொடங்கிய ராமேஸ்வர மீணவ படுகொலைகள் அவர்கள் காலத்திற்கு பின் குறைந்தன‌

இப்பொழுது மோடி அரசில் துப்பாக்கி சூடும் இல்லை

முன்பே சொன்னதுதான்

கலைஞர் ஆட்சியில் சிவராசன் வேதாரண்யம் வரமுடிந்தது, பத்மநாபா வரை கொல்லமுடிந்தது

ஜெயா ஆட்சியிலும் கடத்தலும் புலிகள் நடமாட்டமும் அமைதியாக நடந்தன‌

இருவருக்குமே கடற்கரை பகுதி அட்டகாசம் தெரியுமா என்றால் தெரியும், ஆனால் வாக்கு வங்கிக்காக அமைதி காத்தார்கள்

ஆனால் நம் பழனிச்சாமிக்கு என்ன பயம்? காற்றுக்கென்ன வேலி, கங்கை வெள்ளம் சங்கில் அடங்குமா?

உண்மையில் பழனிச்சாமி ஆட்சியிலேதான் ராமேஸ்வரத்தில் ஆயுதங்கள் மீட்கபட்டு உண்மைகள் உலகிற்கு சொல்லபடுகின்றன‌

“இரும்பு முதல்வர்” பழனிச்சாமி வாழ்க..

இம்மாதிரியான விஷயங்கள் இனியாவது முழுக்க களையபட்டு தென்னக கடற்கடையில் அமைதி திரும்பட்டும்