இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள்…

ஜெயலலிதா உடலில் போர்த்தபட்ட இருந்த தேசியகொடி, கட்சிக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லா ஒருவரிடம் வழங்கபட்டது, இத்தனைக்கும் அவர் ஒரு குற்றவழக்கில் தீர்ப்புக்கு காத்திருப்பவர்

பெண் தோழி கஞ்சா வழக்கு, இன்னும் பல வழக்குகளில் சிக்கி, காணமலே போயிருந்த ஒருவர் இறுதிமரியாதை செலுத்துகின்றார்

மொத்த இந்தியாவும் இந்த காணுவதற்கு அரிதான காட்சியினை பார்த்துகொண்டிருந்தது.

ஜெயலலிதாவோடு சேர்த்து தமிழகத்து மானமும் அடக்கம் செய்யபட்டாகிவிட்டது.


முதல்வர் உடலில் போர்த்தப்ட்டிருந்த புனிதமான தேசியகொடி , ஒரு தீர்ப்புக்கு காத்திருக்கும் குற்றவாளியின் கையில் ஒப்படைக்கபட்டது

கஞ்சா வழக்கிலும், இன்னும் பல வழக்கிலும் கைது செய்யபட்ட ஒருவர் முதல்வருக்கு மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார்

அந்த குழியில் புதைக்கபட்டது ஜெயலலிதா மட்டுமா?


அந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியினை கண்டவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது

அதாவது முறையான திட்டம் இல்லாமல் போலீஸ் குழம்பியிருக்கின்றது, சரியான திட்டமிடலோ காவலோ தடுப்போ இல்லை, எங்கும் நெரிசல் எங்கும் குளறுபடி

நிச்சயமாக ராஜாஜி ஹாலிலும், எம்ஜிஆர் சமாதியிலும் மூன்றடுக்கு வளையத்தை அமைத்திருக்கவேண்டும் உள்வட்டத்தில் சில மீட்டர் இடைவெளிக்குள்தான் ஜெயா உடல் இருந்திருக்க வேண்டும்

தமிழக போலிசாரை பற்றி தெரியும், முறையான உத்தரவும், தெளிவான திட்டமும் கொடுத்துவிட்டால் அசத்தி இருப்பார்கள், அவர்கள் திறமை என்றுமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது

பின் எங்கு குளறியது?

முறையான நிர்வாகம் இல்லை, எல்லோரும் சசிகலா விவேக் என எதிர்பார்க்க காவல்துறை திணறியது. முதல்வர் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை அவர் அப்படித்தான்

ஆளாளுக்கு தங்களை பார்த்துகொள்வதில்தான் குறியாக இருந்தார்களே ஒழிய ஒருவரும் பொதுமக்களையோ, நெருக்குதல்களையோ, அவசரமாக செய்யவேண்டிய காரியங்களை திட்டமிட்டு கொடுக்கவோ இல்லை

யாரிடம் அதிகாரம் இருக்கின்றது, யார் உத்தரவிடுவார்கள் என்ற குழப்பத்திலே காவல்துறை திணறியது,

எங்கு எப்போது என்ன செய்யவேண்டும்? என்ற திட்டமிடலை செய்ய அவர்களுக்கு தகுந்த உத்தரவுகள் வரவில்லை.

கவனித்திருக்கலாம், ஓரளவு வழக்கமான பாதுகாப்புகளை காவல்துறை செய்ததே தவிர, உடலை சுற்றி பாதுக்காப்பு வளையம் அமைக்கும் பணியோ, பாதுகாப்பு வளையமோ அது அமைக்கவில்லை

அல்லது அமைக்க அதற்கு உத்தரவு கிடைக்கவில்லை

காவல்துறையின் கரங்கள் சுதந்திரமாக விடபட்டிருக்குமானால் மிக நேர்த்தியாக நடந்திருக்கலாம், இத்தனை தள்ளுமுள்ளுகள் இருந்திருக்காது,

பாதுகாக்கபட்ட பெரும் வளையத்திற்குள் நடந்திருக்க வேண்டிய 60 குண்டு வழங்கும் மரியாதை இப்படி காய்கறி சந்தைக்குள் புடலங்காய் பிடித்தது போல நெருக்கடிக்குள் நடந்திருக்காது.

தன் கட்சியின் உச்ச அடையாளத்தை, மாநில முதல்வரின் நல்லடக்கத்தில் கூட தெளிவான செயல்திட்டம் இல்லாத இவர்கள்தான் இனி தமிழகத்தை அடுத்த 5 ஆண்டு ஆளபோகின்றார்கள்

மழை எப்படி பெய்யும்? இந்த கஷ்டத்தில் மக்களை இன்னும் ஏன் சிரமபடுத்தவேண்டும் என்ற கவலை கடவுளுக்கு இருக்கலாம்.