இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரிட்டன் எழுத்தாளர் கஸோ இஷிகுரோ தேர்வு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரிட்டன் எழுத்தாளர் கஸோ இஷிகுரோ தேர்வு

இவருக்கு விருது கொடுத்தது விஷயமல்ல, ஆனால் இதனை தொடர்ந்து தமிழகத்தில் எழுத்தாளர் இம்சைகள் அந்த நோபல் கமிட்டிக்கு இலக்கியம் என்றால் என்னெவென தெரியுமா? என சீறுவார்கள்.

அதனை தாங்கி கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல, அப்படி பெரும் ஆழிச்சாட்டியம் செய்வார்கள்.

ஒருவர் அதில் தரமில்லை என்பார், இன்னொருவர் நான் அதனை நம்பவில்லை என்பார், இன்னொருவர் சரிதான் நம்பியிருந்தால் என் படைப்புக்கு அல்லவா 10 ஆண்டுகளாக நோபல் கிடைத்திருக்க வேண்டும் என்பார்.

நாங்கள் உலகமாக எழுத்தாளர்கள், சூரியனுக்கு அந்த பக்கமும் எங்களை மிஞ்ச ஆளில்லை என சொல்லும் இந்த ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ரா, மனுஷ் போன்ற இம்சைகள் இனிதான் ஆட ஆரம்பிப்பார்கள்.

அதில் பெண்ணிய கும்பலும் சேர்ந்துகொண்டு இன்னொரு பக்கம் தாய்குலங்களோடு கத்திகொண்டிருக்கும்.

நோபல் கமிட்டிக்கே இலக்கியம் குறித்து வகுப்பெடுப்பார்கள்.

சரி தமிழகத்தில் யாருக்கு நோபல் கொடுக்கலாம் என கேட்டுவிட்டால் போதும், அதன் பின் அவர்களுக்குள் அடுத்த சண்டை தொடங்கிவிடும்.

இப்பொழுது ஆளாளுக்கு நோபல் விமர்சனம் எழுதிகொண்டிருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.

அந்த கஸோ இஷிகுரோ என்பவருக்கு மட்டும் தமிழ்தெரிந்தால் இவர்கள் விமர்சனத்தை கண்டு நோபல் பரிசினையே ஆற்றில் எறிந்துவிட்டு ஓடிவிடுவார்.

தமிழக அரசியல் மட்டுமல்ல, பத்திரிகை, தொலைகாட்டி இலக்கிய பக்கம் என எல்லாமே கடும் காமெடியாகவே இருக்கின்றது.