இலங்கையில் கருணா கைது

Image may contain: 2 people

இலங்கையில் கருணா கைது செய்யபட்டிருப்பது ஒருவிதமான பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது, விஷயம் பல கோணங்களுக்கு செல்கிறது

பிரபாகரனின் மெய்காப்பளராகவும் டாப் வரிசை தளபதியாகவும் இருந்தவர் கருணா அம்மான். இயற்பெயர் விநாயக மூர்த்தி முரளிதரன் , இயக்க பெயர் கருணா அம்மான்

(அம்மான் என்றால் தமிழில் மாமன் என்றொரு பொருளில் வரும் உறவு முறை, அங்கு கருணா அம்மான், பொட்டு அம்மான் என பல அம்மான்கள் உண்டு, அதனால்தான் நாம் சீமான் அம்மான் என்பவரை அங்கிள் சைமன் என அழைக்கின்றோம்)

எல்லாம் நன்றாக போய்கொண்டிருந்த காலத்தில் சிக்கல் இல்லை, சமாதான காலத்தில் எல்லா தளபதிகளுக்குள்ளும் ஈகோ பிராப்ள்ம் வந்தது, அதாவது வடக்கு மாகாணத்திற்கு கிழக்கு எப்பொழுதும் ஒரு படி கீழ், அது சமாதான காலத்தில் தெரிந்தது

ஏராளமான காரணங்கள், பலவிதமான சிக்கல்கள். ஆனால் யுத்தத்தால் இனி தனிநாடு சாத்தியமே இல்லை என்பது கருணாவிற்கு புரிந்தது, ஆனையிறவு வெற்றியிலே தனிநாடு அடையமுடியாத இயக்கம் இனி நாடு அடையாது என்பதை உணர்ந்தார்.

கிழக்கு வடக்கு அடிப்படை வர்க்க பேதமும் கருணாவிற்கும் மற்ற தளபதிகளுக்கும் கடும் விரோதமாயிற்று, சமாதான காலம் அல்லவா? சிங்களனோடு அல்லாமல் அவர்களுக்குள்ளே குழி பறித்தார்கள்.

சமஷ்டி முறையில் சுயாட்சி மட்டுமே சாத்தியம் தனிநாடு சாத்தியமில்லை என கருணா உண்மையினை சொன்னதுதான் தவறு, இந்தியாவினை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும் என பிரபாகரன் சொல்லும்பொழுது, அது நடக்குமா? என சொல்லும் தைரியம் கருணாவிற்கே இருந்தது.

இனியும் போராடுவது அர்த்தமில்லாதது, ராஜிவ் கொலைகுற்றம் உள்ளவரை பிரபாகரனால் ஒன்றும் செய்யமுடியாது, இனி போர் என்றால் வீண் சாவு என்பதும் அவருக்கு புரிந்தது

முதன்முறையாக வாழ்வில் அமைதியான வெளிநாட்டை கண்டபின், அம்மகிழ்ச்சியினை கண்டபின், கருணா போரினை அறவே வெறுத்தார். மானிடம் என்றால் என்ன என்ற ஞானம் அவருக்கு அங்குதான் வந்தது

குண்டு வெடிப்பும், சாவும், ரத்தமும், அழுகுரலும், யாரையும் சந்தேகத்தோடே பார்க்கும் மிருக குணமும் மட்டுமே கண்டிருந்த அவருக்கு அக்காட்சிகள் பெரும் மாறுதலை கொடுத்தது.

நார்வே கூட்ட சுயாட்சி முடிவு தொடர்பாக கருணா பிரபாகரன் மோதல் தொடங்க, தனக்கு கீழ் உள்ள போராளிகளை கலைத்துவிட்டு, உயிர்தப்ப சிங்களனிடமே புகுந்தார் கருணா

அவர்களோ அரவணைத்து ஆதரித்தனர், இவ்வளவற்றிற்கும் பெரும் குற்றங்களை செய்தவர், பெரும் படுகொலைகளை செய்தவர் கருணா, ஆனால் புலிகளை பலவீனபடுத்த்த கருணாவினை மன்னித்தார்கள்

புலிகள் அழிய ஏராளமான காரணம் உண்டெனினும் கருணா பிரிவும் மிக பெரிய காரணம். அந்த பிரிவுக்கு பின் புலிகள் எதுவும் சாதிக்கவில்லை.

பின் ராஜபக்சேயின் சிங்கள அரசிலும் பெரும் மதிப்போடு வலம் வந்தார் கருணா, கிழக்கு மாகாணம் பெரும் அழிவிலிருந்து காக்கபடதால் அம்மக்களுக்கும் கருணா மீது மதிப்பு இருந்தது

அவர் திடீரென கைது செய்யபட்டிருக்கின்றார்

அதாவது இலங்கை அரசியல் வேறுமாதிரியானது, இன்று தேர்தலில் தோற்றிருந்தாலும் ராஜபக்சே இன்றளவும் இரும்பு மனிதன், அவருக்கென்று பெரும் வாக்கு வங்கி உள்ளது

உலக நாடுகளும் அவரை கொண்டாடுகின்றன, பல நாடுகள் வலிய அழைக்கின்றன, சீனா கூட இருநாளைக்கு முன்பு அழைத்து விருந்து கொடுத்தது, காரணம் அவர் புலிகளுக்கு எதிராக நடத்திய யுத்தம் அப்படி, அதாவது புலிகள் முற்றிலுமாக‌ அழிவதை இந்தியா விரும்பாது என தெரிந்தும் இந்தியாவினை சிக்க வைத்து அவர் நடத்திய யுத்தம் அப்படி.

ஆக இப்போதிருக்கும் அரசுக்கு அவர் பெரும் தலைவலி, அதனால் அவர் குடும்பத்தார் மீது பல வழக்குகள், கைதுகள். அவரின் கூட்டாளிகள் மீது வழக்குகள், கருணா மீதும் ஒரு வழக்கு

என்ன வழக்கு?

குண்டு துளைக்கா வாகனம் என பெரும் பாதுகாப்பு கருணாவிற்கு மகிந்த காலத்தில் கொடுக்கபட்டது, அதனை அரசு பணிதவிர சொந்த பணிகளுக்கு பயன்படுத்தினார், சிலவற்றை காணவில்லை என வழக்காம்

குண்டு துளைக்காத காரில்தான் பாதுகாப்பாக செல்லமுடியும், இதில் அரசுபணி என்ன? சொந்த பணி என்ன?

எப்படியோ போட்டு தூக்கிவிட்டார்கள், ஒரு வகையில் இந்தியாவின் மறைமுக ஆதரவும் கருணாவிற்கு உண்டு என்பதால், இது எப்படி நடந்தது? இந்திய ஆதரவு மைத்ரி எப்படி கருணாவினை கைது செய்ய துணிந்தார் என பல கேள்விகள்

ஆனால் உள்நாட்டு அரசியலால் அவர் கைது செய்யபட்டார் என ஒரு குரலும், முன்னாள் தீவிரவாதியான அவர் சில பாதுகாப்பிற்காக சிறை செல்லும் நாடகம் என சில குரல்களும் கேட்கின்றன‌

அடுத்து கோத்தபாயா கைது என யூகங்கள்

எங்கோ, ஏதோ இடிக்கின்றது

அதாவது சீனா சென்று ராஜபக்சே தன் வழக்கமான டிரேடு மார்க் சிரிப்பில் சிரிக்கும்பொழுது அவரின் கூட்டாளியான கருணா கைதும் , அடுத்து தம்பி கைது? என செய்தியும் கசிய விடபடுகின்றன‌

அதாவது ராஜபக்சேவினை வெறுப்பேற்றும் நிகழ்வுகள் நடக்கின்றன, சரி அவர் சீனாவோடு சேர்ந்தால் யாருக்கு கோபம் வரும்?, நீங்களே யூகித்துகொள்ளுங்கள்

ஆக கருணா கைதின் பிண்ணணியில் ஏகபட்ட எச்சரிக்கைகள் யாருக்கெல்லாமோ ஒளிந்திருக்கின்றது

இதனை புரியாமல், எங்கள் தலைவனுக்கு துரோகம் இழைத்த கருணாவினை சிங்களன் தண்டிக்கின்றான், அந்த பாவம் விடாது, இந்த பாவம் விடாது என சிலர் ஆனந்த கூத்தாடுகின்றனர்

இவர்கள் எம்மாதிரியானவர்கள் என தெரியவில்லை

அதாவது புலிகளுக்கு இந்தியா துரோகம் செய்து அழித்துவிட்டதாம், காஸ்ட்ரோ ஈழபோராட்டத்தை கண்டுகொள்ளாததால் அவரும் துரோகியாம்

ஆனால் சிங்கள ராணுவத்திற்கு ஆயுதமும், செயற்கை கோள் தகவலும் கொடுத்து, “இனி யுத்தம் வந்தால் புலிகள் மொத்தமாக அழிவார்கள்” என பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா பற்றியோ, புலிகளுக்கு தடை விதித்த ஐரோப்பா பற்றியோ ஒரு சத்தமும் இருக்காது

நிச்சயம் புலிகளை அழித்ததில் ஐரோப்பிய, அமெரிக்க உதவிகள் அதிகம், பின்னர் ஏன் அமெரிக்காவை, ஐரோப்பாவினை கண்டிக்காமல், சாபமிடாமல் இந்தியாவினை கரித்து கொட்டுகின்றனர்

அங்கு உல்லாசமாக வாழ்ந்துகொண்டு அமெரிக்காவினை, ஐரோப்பாவினை திட்டமுடியுமா? கழுத்தை பிடித்து தள்ள மாட்டானா?

தமிழகத்தில் இருந்துகொண்டு ஏ அமெரிக்கவே, ஏ ஐரோப்பாவே என திட்டினால் எப்படி டாலரும், யூரோவும் கொட்டும்?

அதனால் அவர்களை ஒன்றும் சொல்லமாட்டார்கள், ஒபாமாவினை , டேவிட் காமரூனை, சீன அதிபரை எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார்கள், சொல்லி இங்கு அரசியல் செய்யமுடியாது

அதனால் கிடைத்தவர் கலைஞர், அவர் பைத்தியங்களுக்கு பதில் சொல்லவில்லை என்பதால் இவர்களுக்கும் இன்றுவரை சொல்லவில்லை.

ஒன்று மட்டும் புரிகின்றது, இன்று வடகொரியாவினை போட்டு தள்ள உலகம் ஒன்றாக திரள்வது போல பிரபாகரனையும் உலகம் திரண்டு போட்டு தள்ளியிருக்கின்றது என்பதுதான் உண்மை, இருக்கட்டும்

கருணா அம்மான் விவகாரம் எப்படி செல்கின்றது என அவ்வப்போது பார்க்கலாம்.