இலங்கையில் சில அதிசய இடங்கள் உண்டு
வால்மிகி ராமயணத்தில் ராவணன் ஆண்ட இடம்பற்றி மிக சரியாக சொல்லவில்லை, ஆனால் கம்பன் அதனை தென்னிலங்கை என வாதிட்டு பாடலும் இயற்றினார்
இலங்கையில் சில அதிசய இடங்கள் உண்டு, மலை மீது இருக்கும் மிக அதிசய கோட்டை இன்னும் சில இடங்கள் புராதனமாவனை
அது ராவணனின் அடையாளம் என்றே சொல்கின்றார்கள், சிங்களரோ ராவணன் சிங்கள அரசன் என சிரிக்காமல் சொல்வார்கள்
இலங்கை இந்துக்களுக்கும் சிங்களவருக்கும் ராவணன் பெரும் அடையாள சின்னம், ஒரு மன்னன் வாழ்வாங்கு வாழ்ந்திருகின்றான் அது ராவணன் என்பது அவர்கள் நம்பிக்கை
மலை மீது இருக்கும் அந்த கோட்டை மகா அதிசயமானது, எப்படி கட்டினார்கள் என இன்றும் ஆயிரம் கேள்விகள் எழும், உண்மையில் உலக அதிசயம் எனும் பட்டியலுக்கு மிக பொருத்தமான கோட்டை அது,
நிச்சயம் அது அதிசயமே, அக்காலத்தில் கட்ட வாய்ப்பே இல்லாத கோட்டை அது
இதுகாலம் யாரும் ஏறமுடியா மலைமீது இருக்கும் கோட்டையே ராவணன் மாளிகை என நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரு தரையடி மாளிகை கிடைத்திருக்கின்றதாம்
அப்படி ஒரு குகை மாளிகை அன்றே அமைந்திருக்க வாய்ப்பு உண்டு, ஆச்சரியமெல்லாம் இல்லை
அங்கு செல்ல ஒரு குகை வழியாக நுழையவேண்டுமாம், அப்படி ஒரு புத்த துறவி சில அடையாளங்களை கண்டு அங்கு மாளிகை இருக்க வாய்ப்பு உண்டு என சொல்ல்விட்டார்,
படம் அவர் எடுக்கவில்லை, கொஞ்ச தூரம் பார்த்துவிட்டு வந்துவிட்டார், மிக அபாயகரமான பகுதி என்கின்றன செய்திகள்
பெரும் அளவில் தக்க ஆராய்ச்சி செய்தால் அதன் முழு உண்மை வெளிவரலாம்
இந்தியாவில் ராமர் விவகாரம் பெரிதாகும் காலங்களில் இலங்கையில் ராவணன் விவகாரமும் பெரிதாவது ஆச்சரியமே
அது இருக்கட்டும்
இப்பொழுது அந்த புத்த துறவி குகைக்குள் கொஞ்ச தூரம் சென்றுவிட்டு பயந்து வந்துவிட்டார் என்ன செய்யலாம்??
ராவணன் தமிழ் மன்னன், அவனுக்கு வீரவணக்கம் என சொல்லும் கும்பல்கள் இங்கு உண்டு, அவர்களில் சிலரை பிடித்து உங்கள் முப்பாட்டன் மாளிகையினை கண்டுபிடித்து வாருங்கள் என குகைக்குள் அனுப்பலாம்
“முப்பாட்டனான ராவணன் மாளிகையில் தமிழின விரோதிகளான புத்த பிக்குகள் நுழைவதா? விடலாமா சொந்தங்களே” இந்த தமிழ் இன உணர்வாளர்களின் என அவர்களும் செல்வார்கள்
மொத்தமாக எல்லோரையும் அனுப்பினால் தமிழகத்திற்கு நல்லது