இலங்கையில் முகநூலுக்கு தடை

இலங்கையில் கண்டி கலவரம் பரவ தொடங்கியதும் அது முகநூலால் உலகம் முழுக்க நொடியில் பரவியது. இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்தன‌

குறிப்பாக வளைகுடா நாடுகள் கொந்தளித்தன. பாலஸ்தீன இஸ்லாமியர் மீதும்,சிரிய இஸ்லாமியர் மீதும் வராத இஸ்லாமிய பாசம் இலங்கையர் மேல் வந்தது

கொஞ்சம் உண்மையும் நிறைய வதந்தியுமாய் கலவர செய்திகள் முகநூலில் வந்தன‌

இலங்கை அரசு அட்டகாசமாக முகநூலை தடை செய்தபின் கலவர செய்திகள் பரவுவது நின்றது

நாங்கள் முகநூலில் இன உணர்வு புரட்சி செய்வதால் இலங்கை முகநூலை மூடிற்று என தும்பிகளும் சொல்ல தவறவில்லை

அவர்களுகென்ன காவல் சாமி வீரப்பன் இருந்தவரை காட்டில் ஒரு மரம் எரிந்ததா? என ஏற்கனவே கிளம்பியாயிற்று.

ஒரு குட்டிநாடு முகநூலை தடை செய்தது உலக அரங்கில் பெரும் ஆச்சரியமாக பார்க்கபடுகின்றது. எமது நாட்டிற்கு குழப்பம் விளைவிக்கும் எதனையும் அனுமதிக்க முடியாது என சொல்லிவிட்டது இலங்கை

இப்பொழுது முகநூல் குழுமமும் இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன‌

இப்படி முகநூல் தடை இந்தியாவில் வருமா என்றால், தமிழிசை நிச்சயம் ஆதரிப்பார். எச்.ராசா உடனே வேண்டுமென்பார். இருவரும் முகநூலில் படும்பாடு கொஞ்சமல்ல‌

ஆனால் பாஜக தடை செய்யமுன்வருமா என்றால் இல்லை, காரணம் முகநூல் வதந்திகளிலே அக்கட்சி வாழ்கின்றது என்பது அதற்கு தெரியாதது அல்ல.