இலங்கை அரசு பணிந்து
இந்திய அரசு கொடுத்த கடும் அழுத்தத்தின் பேரில் இலங்கை அரசு பணிந்து ஒரு வழிக்கு வந்திருக்கின்றது, அந்நாடு சீனாவுக்கு அந்த சர்ச்சைகுரிய கப்பல் பயணத்தை நிறுத்திவைக்கும்படி கோரியுள்ளது
சீனாவுக்கு இது பெரும் அதிர்ச்சி எனும் நிலையில் அந்நாடு இன்னும் வாய்திறக்கவில்லை எனினும் இலங்கையின் எதிர்ப்பை சீனா ஏற்றுகொள்ளும் கட்டாயத்தில் தள்ளபட்டுள்ளது
இந்த விவகாரத்தில் இந்திய அரசு தகுந்த காரணங்களை முதலில் தேடியது, இந்திய அரசு தென்மாகாணங்கள் அதாவது தமிழகம் ஆந்திரம் கேரளம் ஆகிய மாகாணா முதல்வர்களும் எம்பிக்களும் சீனகப்பல் வருகையினை பற்றி பாராளுமன்றத்தில் பேசுவார்கள், அதை ஒரு எதிர்ப்பாக இலங்கையிடம் முன் வைக்கலாம் என கருதியது இந்திய அரசு
இந்திய தமிழகத்தில் இரு அணுவுலைகள், விஜயநாராயணம், சூலூர், சென்னை என ராணுவ நிலையங்கள், மகேந்திரகிரி தளம் என ஏகபட்ட முக்கிய இடங்கள் உண்டு, அப்படியே ஆந்திராவில் சதீஷ்தவான் ராக்கெட் தளம், விசகாபட்டின கடற்படைதளம் என நிறைய உண்டு
கேரளத்திலும் தும்பா ஆய்வும் மையம்,கொச்சிகடற்படை தளம் என நிறைய முக்கிய நிலையங்கள் உண்டு
இம்மாகாண முதல்வர்களோ எம்பிக்களோ நாட்டுபற்றுடன் சீன கப்பலின் ஆபத்தை தடுக்க பேசுவார்கள் என எதிர்பார்த்த மத்திய அரசு பெரும் அதிருப்தியானது
கேரள முதல்வர் தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் சரியாக இருந்தார் சீன கப்பல் பற்றி அவர் வாயே திறக்கவில்லை
ஆந்திரமுதல்வரும் தெலுங்கானா முதல்வரும் ஏதோ உல்லாச கப்பல் இலங்கைக்கு வருவது போல அவர்கள் போகில் இருந்தார்கள்
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இதில் நல்ல வாய்ப்பு இருந்தது, இலங்கைக்கு அவரும் கப்பல் கப்பலாக உதவி பொருள் அனுப்பியுள்ளார், அவ்வகையில் தேசிய அரசியல் சர்வதேச அரசியல் என அவர் ஒரு ரவுண்ட் அடித்திருக்கலாம்
அண்ணாமலையினை வசமாக சிக்கவைக்கும்படி பேசியிருக்கலாம் ஆனால் வழக்கமான சொதப்பலில் அதை கண்டுகொள்ளாமல் அவர் பஸ்ஸுக்கு பெயின்ட் அடிப்பதுதான் முக்கியம் என சென்றுவிட்டார்
இந்தியாவின் எதிர்கட்சி தலைவரான ராகுல் அதுவும் கேரள தொகுதியின் எம்பியான ராகுல் இவ்விவகாரத்தில் பெரும் அரசியல் செய்திருக்கலாம் ஆனால் இதை சுத்தமாக மறந்து கறுப்பு சட்டை அணிந்து காமெடியில் இறங்கிவிட்டார்
ஆக நாட்டுபற்று இல்லாத எம்பிக்களும் முதல்வர்களும் தென் மாகாணத்தில் இருக்கின்றார்கள், ஒருவேளை சீன கப்பலால் குழப்பம் வந்திருந்தாலும் இவர்கள் நாட்டை பற்றி கவலைபடாமலேதான் இருந்திருப்பார்கள் என்பதை புரிந்த இந்திய அரசு அவர்கள் முகமூடியினை கிழித்துவிட்டு தானே களத்தில் இறங்கியது
இந்தியா இலங்கைக்கு செய்யும் உதவி, சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா இலங்கைக்கு வாதிடும் வாதம், செப்டம்பரில் நடக்க இருக்கும் ரணிலின் இந்திய பயணம் இவையெல்லாம் சுட்டிகாட்டியபின் இலங்கைக்கு வேறுவழி இல்லை
அவர்கள் கப்பல்வரவேண்டாம் என இலங்கைக்கு கடிதம் எழுதிவிட்டார்கள்
இலங்கை ஹம்பாத்தோட்ட துறைமுகம் சீன உதவியில் கட்டபட்டது, அந்த கடனை திருப்பிகொடுக்க வழியில்லாமல் 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு விடபட்டுள்ளது ஆனால் அங்கு இலங்கை அனுமதியின்றி சீன கப்பல் அதுவும் சர்ச்சகுரிய கப்பல் வரமுடியாதபடி சில ஒப்பந்தங்கள் உண்டு
அதை கையில் எடுத்திருக்கின்றது இலங்கை, அதாவது இந்தியாவினை பகைக்க தாங்கள் தயார் இல்லை என்பதை இலங்கை காட்டிவிட்டது
சீனா இப்பொழுது அதிர்ச்சியில் உள்ளது, அவர்களிடம் இருந்து அறிவிப்பு இன்னும் வெளிவராவிட்டாலும் இலங்கைக்கு அவர்களின் சர்ச்சைகுரிய கப்பல் வர வாய்ப்பில்லை என்பதுதான் தற்போதைய செய்தி
இது மோடியின் மிகபெரிய வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை, அதே நேரம் தென் எல்லையின் மூன்று மாகாண முதல்வர்களும் எம்பிக்களும் எப்படி பொறுப்பற்றதனமாக இருக்கின்றார்கள் என்பதும் அதுவும் எதிர்கட்சி தலைவரான ராகுல் கொஞ்சமும் தலைவனுக்குரிய பொறுப்பும் கடமையும் இல்லாமல் இருக்கின்றார் என்பதும் தேசத்தின் பெரும் கவலை