இலங்கை கடற்படையின் அராஜகம் அதிகமாகிவிட்டது
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இலங்கை கடற்படையின் அராஜகம் அதிகமாகிவிட்டது: ஓபிஎஸ் கண்டனம்
ஆமாம், ஜெயலலிதாதான் தமிழக படைகளை அனுப்பி இலங்கை கடற்படையினரை மிரட்டி வைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது
ஜெயா காலத்தில் தமிழக மீணவர்கள் இலங்கை தாண்டி, இந்தோனேஷியா வரை சென்று மீன்பிடித்தனர் என நம்பிகொள்ளுங்கள்
மெரினாவினை சுத்தபடுத்துகின்றேன் என சொல்லி சொந்த தமிழக மீணவர்களை சுட்டுகொன்றவர் எம்ஜிஆர், எத்தனை பேர் செத்தார்கள் என்பது இதுவரை தெரியாது
இடிந்தகரை மீணவ மக்கள் அடித்து நொறுக்கபடும் பொழுதும், சிலர் சாகும்பொழுதும் ஒன்றுமே தெரியாதவர் போல இருந்தவர் ஜெயலலிதா
மணல் ஆலைகளால் தென்னக மீணவர்கள் படும்பாட்டினை காதுகொடுத்து கேட்கவும் அவர் தயாராக இல்லை
இப்படி என்றுமே மீணவர் விரோத அரசாக இருப்பதுதான் அது.
அந்த அதிமுகவின் ஜெயலலிதாதான் ராமேஸ்வர மீணவர்களை காப்பாற்றினாராம்
ஆனாலும் பன்னீருக்கு இம்ம்புட்டு ஆகாது..
மீணவர்களும் சும்மா இல்லை, இவ்வளவு பட்டும் அதிமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள், மானிய விலை டீசல் கொடுத்த காமராஜரை கூட நினைக்கமாட்டார்கள்
காமராஜர் என்ன படகோட்டி, மீணவநண்பன் என்றா நடித்தார்?
எம்ஜிஆர் அல்லவா அவர்களுக்காக நடித்தார்.