இல்லாவிட்டால் அது இந்தியாவின் ஆப்கன் பகுதியாக மாறும்
வடக்கே நடந்திருப்பது மாபெரும் கொடுமை, சந்தேகமில்லை
ஆனால் இதெல்லாம் அங்கு புதிதா என்றால் இல்லை, அன்றிலிருந்தே அந்த பகுதி அப்படித்தான் இருந்திருகின்றது
புத்தரும், மகாவீரரும் அதை திருத்தபார்த்து தனிவழிகண்டு தோற்றுபோய்விட்டார்கள்
பின்னாளில் அப்பகுதியினை ஓரளவு மீட்டவர் குருநாணக், ஆம் சீக்கியம் அந்த பஞ்சாப் பகுதியினை காத்தது. குருநாணக் வராவிட்டால் பஞ்சாபும் அரியானாவும் இன்று உபி மபி பீகார் போலத்தான் இருந்திருக்கும்
வெள்ளையனுக்கும் அந்த பகுதி சவாலே, கல்கத்தா சென்னை மும்பை என ஆளுநர் என நேரடி ஆட்சி செய்த அவனுக்கு வடக்கே முடியவில்லை
இந்த காட்டுமிராண்டி கூட்டத்தை நீயே ஆண்டுகொண்டு எமக்கு கப்பம் கட்டு என சுல்தான்களையும் மஹாராஜாக்களையும் விட்டு வைத்தான்
அந்த சுல்தான்களும் மஹாராஜாக்களும் கல்வி வளர்க்காமல், நாகரீகம் வளர்க்காமல் அம்மக்களை அப்படியே வைத்தும் விட்டனர்
சுதந்திர இந்தியாவுக்கு அந்த பகுதி பெரும் சவால், நேருவும் இந்திராவும் திணறினர், சஞ்சய் காந்தி துப்பாக்கி சூடு , கட்டாய கருதடை என எல்லை மீறி ஆடினார்
அந்த பகுதியில் மதவாதத்தை தூவுவது எளிதான விஷயம் என்பதால் அதனால் திரட்டபட்ட கூட்டம் பாபர் மசூதியினையும் இடித்தது வேறுவிஷயம்
தாஜ்மகாலையே மிரட்டும் கூட்டம் எப்படிபட்டதாக இருக்க முடியும்
ஆக அங்கு நடக்கும் கொடூரங்கள், கொலைகள் எல்லாம் வழக்கமாக நடப்பது, நிச்சயம் பாஜக ஆட்சி வந்துவிட்டதால் என சொல்லமுடியாது
அது வெள்ளையன் ஆட்சி முதல் மன்மோகன் சிங் ஆட்சி வரை அடிக்கடி நடந்தது, இப்பொழுதும் நடக்கின்றது
இங்கு ஏதோ புதிதாய் நடப்பது போல சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
தரமான கல்வி, கடும் கட்டுபாடுகளுடன் கூடிய சட்டம் , நிலங்கள் ஒரே நபரிடம் குவிந்து கிடக்கும் முதலாளித்துவம் என பல விஷயங்களை செய்தால் அடுத்து வரும் தலைமுறையாவது அங்கு வாழும்
இல்லாவிட்டால் அது இந்தியாவின் ஆப்கன் பகுதியாக மாறும்
கல்வியும் சிந்தனையும் தகுந்த வேலைவாய்ப்புமே அவர்களை உயர்த்தும்
மற்றபடி காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் ஜமாஜ் என யார் வந்தாலும் எதுவும் மாறபோவதில்லை
மற்றபடி இக்கொடுமைகள் பாஜக ஆட்சியால் மட்டும் வந்ததல்ல அந்த பக்கம் எல்லா ஆட்சியிலும் அப்படித்தான் இருந்தார்கள், இன்னமும் இருப்பார்கள்