இளைய இந்திரா வரட்டும், இந்தியா செழிக்கட்டும்
பிரியங்கா தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வரலாம் என்கின்றார்கள், அப்படி வந்தால் அவரை வாழ்த்தி வரவேற்கலாம்
இந்தியாவுக்கு தனிபெரும் தலைவர்கள் தேவை, இந்நாட்டின் ஒருமைபாட்டையும் ஒற்றுமையினையும் பாதுகாக்க ஜாதி , மதம் இனம் மொழி கடந்த தலைவர்கள் தேவை
காலத்தினால் மோடி உருவாகிவிட்டார் நல்லது, ஆனால் அது ஒரு துருவ தலமையாகிவிடும் அது தேசத்திற்கு நல்லதல்ல
மோடிக்கு சமமான நல்ல ஆளுமை இன்னொரு இந்திய ஆளுமையாக வரவேண்டும் அதுதான் தேசத்துக்கு நல்லது
அப்படி ஒரு நல்ல ஆளுமையாக வசீகரம் மிகுந்த தலைவராக பிரியங்கா வந்தால் மிக்க நல்லது
இத்தேசத்திற்கு பெரும் தியாகங்களை கொடுத்த அந்த பாரம்பரிய குடும்பத்திலிருந்து அவர் வந்து தேசம் காக்கட்டும்
அந்த வீர மங்கையினை, தியாக தீபத்தை, இந்தியரின் குல கொழுந்தை தமிழகம் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது
இந்திரா அரசியலுக்கு வரும்பொழுது அவருக்கு வயது 46 , சாஸ்திரிக்கு பின் காங்கிரசும் தேசமும் இருக்காது என்பதை அவர்தான் பொய்யாக்கி தேசம் காத்தார்
ஆச்சரியமாக பிரியங்காவும் அதே 46 வயதிலே அரசியலுக்கு வருகின்றார், ஆம் பாரதம் அந்த அதிசய ஒற்றுமையினை காண்கின்றது
காங்கிரஸ் அன்று இந்திராவினை எதிர்கொண்டது போலவே பிரியங்காவினையும் வரவேற்று கொண்டிருக்கின்றது, தேசம் பெரிதும் அவரை எதிர்பார்க்கின்றது
இளைய இந்திரா வரட்டும், இந்தியா செழிக்கட்டும்