இவரை ஏன் விமர்சிக்கின்றார்கள் என்றால் இதற்காகத்தான் ?
இவரை ஏன் விமர்சிக்கின்றார்கள் என்றால் இதற்காகத்தான்
ஆளுநர் நடவடிக்கையினை விமர்சிக்கின்றேன் என சொல்லிவிட்டு, தமிழகத்தில் சீரான நிர்வாகம் இருப்பதை ஒப்புகொள்கின்றாராம்
உருப்படுமா? இப்படி சொல்லிவிட்டு எங்கிருந்து அரசியல் செய்வது?
பழனிச்சாமியும் சரியில்லை, இதனை கவனித்திருந்தால் எங்கள் ஆட்சியினை ஸ்டாலின் பாராட்டிவிட்டார் , வெற்றி வெற்றி என கிளம்பியிருக்கமாட்டாரா?
அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
சசிகலா தரப்பு சிக்கலில் சிக்கியிருக்கும்பொழுது அவர்கள் யாரை, எங்கே அனுப்பி டெல்லிக்கு சில சிக்னல்களை கொடுக்கின்றார்கள் பார்த்தீர்களா?
இதன் அர்த்தம் அரசியல் புரிந்தோருக்கு புரியும்.
இவர்கள் மூவரும் இவ்வளவு நாளும் செவ்வாய்கிரகம் சென்றிருந்தார்களா?
அதிமுக அரசு தெளிந்த நீரோடை போன்றது : அமைச்சர்
அந்த நீரோடை முன்பு எங்கெல்லாம் பாய்ந்தது என்பதை சில இடங்களில் காணும் விளைச்சலை பார்த்து உலகமே அறிந்தது, இப்பொழுது எங்கெல்லாம் பாய்கின்றது என்பதும் தெரியும்
அதில்தான் அணை கட்டி மக்கள் பக்கம் திருப்ப பார்க்கின்றார் ஆளுநர் அமைச்சரே..