இவர்கள் கேட்பதன் தீர்வு என்ன?
தலித்துக்களுக்கு ஒரு உரிமையும் 2 ஆயிரம் ஆண்டுகளாக இல்லையாம், அதனால் போராடுகின்றார்களாம்
இதில் என்ன சொல்ல வருகின்றார்கள் என்றால்,இந்தியாவிலும் தமிழகத்திலும் இதற்கு முன் ஆண்ட திராவிட கட்சிகளும் ஒன்றும் செய்யவில்லை என சொல்ல வருகின்றார்கள்
இட ஒதுக்கீடு இத்தேசத்தில் கொடுக்கபட்டிருக்கின்றது, தீண்டாமை சட்டம் , வன்கொடுமை தடுப்பு சட்டம் என ஏகபட்ட பாதுகாப்பு இருக்கின்றது
உண்மையில் இத்தேசம் அவர்களை சட்ட ரீதியாக பாதுகாத்துகொண்டுதான் இருக்கின்றது, தமிழக கலைஞர் அரசு அவர்களுக்கு செய்திருப்பதெல்லாம் ஏராளம்
காமராஜர் காலமுதல் இன்றைய பழனிச்சாமி காலம் வரை அமைச்சரவையில் தலித் இருந்துகொண்டேதான் இருக்கின்றார்கள்
கக்கன் முதல் இன்றைய தனபால் வரை ஏராளமானவர் கொண்ட வரிசை அது
அவர்கள் முன்னேறுவதை அது சுய தொழிலோ அரசு பணியோ எதிலும் யாரும் தடுக்கவில்லை
தலித் இந்த வியாபாரம் செய்ய கூடாது என்றோ, இந்த தொழிற்சாலையினை தொடங்க கூடாது என்றோ எங்கே தடை இந்நாட்டில் இருக்கின்றது?
இன்னும் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, எங்களை வாழவிடவில்லை என்பதெல்லாம் என்ன வகை?
இத்தேசத்தில் மொத்தமும் அவர்களுக்கே கொடுத்துவிட முடியுமா?
பல இனங்கள் கலந்து வாழும் நாட்டில் அப்படி எதிர்பார்க்க முடியாது
அக்காலங்களில் விவசாயம் மட்டுமே தொழில், அது இல்லாவிட்டால் பட்டினி சாவு என்ற கொடுமையில் பல அட்டூழியங்கள் இருந்தன
இன்றோ விவசாய பணிக்கே ஆளில்லை, தலித்துகள் வாழ்க்கையில் முன்னேற எல்லா வாசலும் திறந்திருக்கின்றது
அரசுபணி அவர்களுக்கு எளிது, வியாபாரம் செய்தால் அதை தடுப்பது யார்? செய்யட்டும், முன்னேறட்டும்
அவர்கள் கற்பதையோ முன்னேறுவதையோ யாரும் தடுக்கவில்லை, முன்னேறட்டும்
வாசல்கள் திறந்துள்ள இக்காலத்திலும் அந்நாளில் நாங்கள் ஒடுக்கபட்டோம் என கொடிபிடித்து அலைவது சரியல்ல
உழைத்து வாழ்ந்தால் கோடி வாய்ப்புகளில் முன்னேறலாம் கோடி வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கலாம்
ஒரு நாடென்றால் எல்லா இனமும் மதமும் சாதியும் கலந்தே இருக்கும், அதில் சில சிக்கல்களும் சிற்சில இடைஞ்சல்களும் இருக்கும் இது எல்லா நாட்டிலும் உண்டு
வாய்ப்புகளை கொட்டி கொடுத்தபின்னும் 2000 ஆண்டு அடிமை என சொல்லிகொண்டிருந்தால் என்ன தீர்வு? இன்னும் அழுதுகொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
கொட்டிகிடக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த மாட்டோம், முன்னேறினாலும் தலித் அடையாளத்தை விட மாட்டோம் என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம்
இவர்கள் கேட்பதன் தீர்வு என்ன?
கேட்டதெல்லாம் கொடுத்தாகிவிட்ட பின்பும் இன்னமும் வேண்டும் எங்களை ஒடுக்குகின்றார்கள், சுரண்டுகின்றார்கள் என்றால் என்றால் தலித் நாடுதான் சரி
ஒரு சாதி மட்டும் வாழும் நாடுதான் இவர்களுக்கு சரி, இனி இவர்கள் அதையாவது கேட்கட்டும்
ஒரு சாதி மட்டும் வாழும் நாடு சாத்தியமா என்றால் நிச்சயம் இல்லை