இவர்கள் சாதி ஒழிப்பு போராளிகளாம்….

ரஜினியினை எல்லா சாதி இயக்குனர்களும் இயக்கி இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் சாதி என்ன என்பது யாருக்கும் தெரியாது.

யாரும் இவர் எங்கள் சாதி என கொண்டாடவுமில்லை, படு மொக்கையான படங்களை ரஜினி கொடுக்கும்பொழுது குறிப்பாக பாபா கொடுதபொழுது, அவரை வறுத்தெடுத்தபொழுது எங்கள் சாதி என்பதற்காக சுரேஷ் கிருஷ்ணாவினை பழிக்கின்றார்கள் என கிளம்பவில்லை

குசேலன் வந்தபொழுது வாசுவினையும், விங்கா வந்தபொழுது கே.எஸ் ரவிகுமாரையும் கலாய்த்தால் யாரும் வந்து எங்கள் சாதி இயக்குநர் என்பதால் உனக்கு பிடிக்கவில்லை என வரிந்து கட்டவில்லை

ஆனால் பா.ரஞ்சித் என்பவருக்கு வருகின்றார்கள் அவர் சாதி எல்லோருக்கும் தெரிகின்றது

இன்றுவரை கே.எஸ் ரவிகுமார், வாசு, சுரேஷ் கிருஷ்ணா எல்லாம் என்ன சாதி என்பது யாருக்கும் தெரியாது.

ஆக நாங்கள் தலித், நாங்கள் தாழ்த்தபட்டவர் என சாதி அடையாளத்தை இழக்க விரும்பாத சமூகம் எது என்று தெரிகின்றது

கலையுலகம் சாதிக்கு அப்பாற்பட்டது, நன்றாக இருந்தால் ரசிக்க போகின்றார்கள், இல்லை என்றால் கலாய்ப்பார்கள், இதில் சாதியினை இழுப்பது என்பது பலவீனமாவர்கள் செய்யும் வேலை

தங்கள் பலவீனத்தை சாதி அடையாளத்திற்குள் ஒளிந்து மறைக்க நினைக்கின்றார்கள்.

நிச்சயம் இன்னொருவர் சொல்லி இவர்கள் சாதி தெரியபோவதில்லை அவர்களே அவர்கள் சாதியினை சொல்லி அது ஒழிந்துவிடாமல் பார்ப்பதிலும் வலுகவனமாக இருக்கின்றார்கள்.

அம்பேத்கர் படத்தை பிடித்தால் மட்டும் சாதி ஒழியுமா? இப்படி நாங்கள் தலித் தலித் என அவர்கள் சுயசாதி வளர்க்க ஆரம்பித்த பின் எப்படி சாதி ஒழியும்?

கேட்டால் இவர்கள் சாதி ஒழிப்பு போராளிகளாம்