இவர்கள் முட்டாள்களன்றி வேறுயார்?
இங்கே இருந்து கொண்டு நான் தமிழன் , நான் புயலில் சிக்கியபொழுது, நான் கதவிடுக்கில் சிக்கியபொழுது, நான் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுகாரனிடம் சிக்கியபொழுது காக்க வராத இந்திய ராணுவம்..
என் வீட்டு பூனைகுட்டியினை நாய் தூக்கி சென்றபொழுது வராத ராணுவம் , என் வடையினை காக்கா தூக்கியபொழுது வராத விமானபடை தேவையில்லை என சொல்லிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை
நாளையே தென்னக கேந்திரங்களான கூடன்குளம், மகேந்திரகிரி, ஐ.என்.எஸ் கட்டபொம்மன் போன்ற மகா முக்கிய இடங்கள் இருக்கும் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தானிய கப்பல் கன்னியாகுமரி பக்கம் வந்தாலோ இல்லை அவர்களின் நீர்மூழ்கிகள் வந்தாலோ இல்லை அவர்களின் விமானம் வந்தாலோ காப்பது யார்?
யாழ்பாணத்து பனங்கொட்டையோ இல்லை இங்கிருக்கும் மான உணர்வாளர்களோ அல்ல
கலைஞர் குடும்பமோ இல்லை வேறு அரசியல் குடும்பங்களோ ராணுவ சீருடையில் காக்க வராது
கருப்புசட்டை கும்பல் எல்லாம் பாகிஸ்தானின் நாசகாரி கப்பலை பெரியாரின் கைதடியுடன் எதிர்க்க முடியாது
அந்நிலையில் உங்களை காப்பதற்கு இந்திய ராணுவம் ஒன்றே வரும், வேறு யாரும் வரமாட்டார்கள்
யுத்தம் வெடிக்கும் பட்சத்தில் தென்னக எல்லையினை காக்க இந்தியன் நிரம்பிய இந்திய ராணுவமே இங்கு முற்றுகையிட்டு உன்னையும் என்னையும் காக்கும்
பாகிஸ்தானுக்கு தமிழர் தெலுங்கர் எனும் வித்தியாசமெல்லாம் தெரியாது,
கசாப் மும்பையில் சுடும்பொழுதும் , மும்பையில் குண்டுகள் வெடிக்கபட்டபொழுதும் இந்தியர் என்றே வெடித்தது
திமுக திக தலித் பாஜக காங்கிரஸ் என்பதெல்லாம் தெரியாது, அவனுக்கு நாமொரு இந்தியன்
இந்தியர் எனும் வகையில் காஷ்மீரி செத்தாலும் கன்னியாகுமரிக்காரன் செத்தாலும் அவனுக்கு ஒன்றுதான்
நாமெல்லாம் இந்தியன் என்பது பாகிஸ்தான்காரனுக்கும் சீனனுக்கும் இவர்களை தெற்கே அழைத்து வழிகாட்டபோகும் இலங்கைக்கும் தெரிந்திருக்கின்றது
இங்குள்ள பல தமிழ் பக்கிகளுக்கு தெரியாததுதான் மகா சோகம்
இவர்கள் முட்டாள்களன்றி வேறுயார்?