இவ்வளவு மோசமாகவா ஏமாற்றபட்டோம் நாதா..

நாதா

மேனகையே வா, உனக்காக 4500 கோடி பேக்கேஜ் செலவில் வரவேற்பு கொடுக்க ஆசைதான் ஆனால் நான் மேயரும் அல்ல நீ சென்னையில் பெய்யும் மழையும் அல்ல, என்ன செய்வது?

பொய் சொல்லாதீர்கள் நாதா, என்னை நீங்கள் தேடவே இல்லை

என் அழகான மேனகையே, இந்திய சட்டங்கள் போல 10%, 33%, 69% என்றா உனக்கு மனதில் இடம் ஒதுக்கியுள்ளேன்? இந்த சூரியன் சந்திரன் ராகு கேது குரு சனி என எல்லா கிரகங்களும் அஸ்தமிக்காத என் மன சாம்ராஜ்யத்தின் ராணியே நீயல்லவா?

நிஜமாகவா நாதா..

நிஜத்தில் ஏதடி பொய் என் செல்லமே..

என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் நாதா?

அந்த சிவாஜி கதையில்தான் மூழ்கி கொண்டிருக்கின்றேன், அந்த ஜெய்சிங்கிற்கும் அவனுக்குமான கடைசி கட்ட காட்சிகள் நடக்கின்றன, அதைத்தான் தேடி தேடி படிக்கின்றேன்

ஜெய்சிங் பற்றி அதிகம் இல்லையா நாதா..

இருக்கின்றது ஆனால் மிக குறைவாகவே இருக்கின்றது, இவ்வளவுக்கும் அவன் பெரும் ராஜபுத்திர மன்னனாக இருந்திருக்கின்றான், இன்றைய ஜெய்பூர் நகரமே அவன் பெயரால்தான் அவன் நினைவில் உருவாக்கபட்டிருக்கின்றது

அப்படியா?

நமக்கு ஏன் இதெல்லாம் தெரியவில்லை?

இங்கு 17 முறை கஜினி வந்து சோமநாதபுரத்தை கொள்ளையடித்தான் என நம்ப வைக்கபட்டிருக்கின்றோம், உண்மையில் அவன் காசி மதுரா என கொள்ளையடித்திருகின்றான், இப்படி மறைக்கபட்ட வரலற்றில் எதனை தேட சொல்கின்றாய் மேனகையே

இவ்வளவு மோசமாகவா ஏமாற்றபட்டோம் நாதா..

அதைவிட அதிர்ச்சிகரமாய் ஏமாற்றபட்டோம் மேனகையே

எப்படி நாதா?

17ம் நூற்றாண்டில் சிவாஜியின் மரணத்துக்கு பின் செஞ்சி வழியாக தமிழகத்தில் ஊடுருவினான் அவுரங்கசீப், அப்பொழுது மொகலாயருக்கு வரி வசூலிக்கும் ஒரு காவல் நிலையமாக உருவாக்கபட்டதுதான் ஆர்காடு நவாப் பதவி, அதற்கு முன் அப்படி ஒரு சுல்தானோ நவாபோ கிடையாது, வரி பிரித்து டெல்லிக்கு அனுப்புவதுதான் அந்த நிலையத்தின் வேலை

ஓ.. சொல்லுங்கள்

அப்படியான நவாப் குடும்பம் வடக்கே மொகலாயரை மராட்டிய சிவசேனை முற்றுகையிட்ட காலங்களில் தனி ஆவர்த்தனம் செய்தாலும் மொகலாயர் மீளும் காலங்களில் அவர்களின் பகதூர் ஷாவுக்கு கட்டுபட்டவர்களே

ம்ம்ம்

இந்த ஆற்காடு நவாப் மொகலாயரின் பிரதிநிதியாகத்தான் இங்கு ஆட்சி புரிந்தான், உரிய நேரத்தில் அவனை எதிர்த்து வரிதரமுடியாது என முழங்கிய பூலிதேவன் உண்மையில் மொகலாயரோடுதான் மோதினான்

எப்படி சொல்கின்றீர்கள் சுவாமி?

ஒரு பேரரசு சிக்கலாகும் பொழுது அவர்கள் பிடியில் இருந்த அரசுகள் தனியாகும், அப்படித்தான் தென்னகம் முழுக்க மைசூர் சமஸ்தானம்,தமிழக அரசுகளெல்லாம் மொகலாயருக்கு வரிகொடுக்கமாட்டோம் எனகிளம்பின‌

தமிழகத்திலும் மொகலாயருக்கு எதிரான குரல்கள் ஒலித்தன, மொகலாயமே இனி இல்லை உனக்கு ஏன் வரிகட்ட வேண்டும் என்றுதான் பூலிதேவனும் கட்டபொம்மனும் மறுத்தார்கள், இவர்களை மிரட்டத்தான் கூலிபடையினராக பிரிட்டிசாரை நவாப் ஏவினான்

அப்படியானால் பிரிட்டிசார் வரிபிரிக்க வந்த கூலிபடையா?

நிச்சயமாக அவர்கள் நவாபுக்க்காக வரி பிரிக்க வந்த கூலிபடை, வரியினை பிரிக்க சொன்னது மொகலயார்களுக்காக‌

அப்படியானால் புலித்தேவனும் கட்டபொம்மனும் மருதிருவரும் மொகலாயருடனேதான் மோதியிருக்கின்றார்களா சுவாமி

ஆம், ஆனால் இந்த காலகட்டத்தில் மொகலாயம் சரிய, அவர்கள் இல்லாமல் நவாபும் சரிய அதிகாரம் பிரிட்டிசாருக்கு சென்றுவிட்டது, உண்மையில் நம் போராட்டம் மொகலாயருடனானது

சுவாமி அப்படியானால் ஹைதரும் திப்புவும் அப்படி மொகலாயரோடுதான் மோதினார்களா?

ஆம், ஆனால் பலமிழந்த மைசூரை ஹைதர் கைபற்றி பழைய பிஜப்பூர் சுல்தானியத்தையே உருவாக்க முனைந்தான், அந்த சுல்தானிய உருவாக்கத்தில்தான் ஆங்கிலேயரோடு மோதினானே தவிர வேறொன்றுமில்லை

ஆக மொகலாயரோடு மோதிய கட்டபொம்மனை, வெறும் கூலிபடையாக வந்த பிரிட்டிசாரோடு மோதி ஆங்கில ஆட்சிக்கு எதிராக போராடினான் என திருப்பிவிட்டது யார் சுவாமி?

ஜெய்சிங் வரலாற்றை மறைத்து அவுரங்கசீப் எளியவன், குல்லா நெய்து வாழ்ந்தான், அக்பர் நல்லவன் என கதைகட்டினார்கள் அல்லலா? அவர்களேதான் சுவாமி

ஏன் அப்படி செய்தார்கள்?

சிறுபான்மை பெரும்பான்மையினை ஏமாற்ற வேறேன்ன செய்வார்கள் மேனகையே

இதெல்லாம் எப்பொழுது மாறும் சுவாமி?

மாறும், ஒவ்வொன்றாக மாறும், உண்மையான வரலாறுகள் தெளியும்

நாதா, நாம் சினிமாவுக்கு செல்லலாமா?

ஆமாம் மேனகையே இந்த காந்தாரா படத்துக்கு செல்லலாம்

சுவாமி, அங்கேயுமா? ஏதாவது காதலர் படத்துக்கு செல்லலாம் சுவாமி

காதலால்தானே அந்த பிருத்விராஜன் மாமனாருடன் மோதி கோரி உள்ளே வந்தான்? காதலால் சரிந்த ராஜ்ஜியங்கள் எவ்வளவு? காதல் படமெல்லாம் ஆபத்து மேனகையே, இப்பொழுது நமக்கு காந்தாரா படங்கள்தான் அவசியம்

காதல் என்றால் அவ்வளவுதானா சுவாமி

காதலை கொண்டாடிய ஷாஜகானும் உருப்படவில்லை, தமிழ் சினிமாவும் உருப்படவில்லை, அதை கண்டதமிழனும் உருப்படவில்லை அப்படிபட்ட காதல் படமெல்லாம் எதற்கு மேனகையே

நாதா, நான் வருகின்றேன்

காந்தாரா படம் பார்க்கலாம் வா, கடைசி 20 நிமிடம் மிக மிக அருமையாக இருக்கின்றதாம்

அதற்குத்தான் அஞ்சுகின்றேன் சுவாமி அப்பொழுது எனக்குள் ஏதோ இறங்கி உங்களை கொன்றுவிட்டால்

மேனகையே நீயா..

நான் செய்யமாட்டேன் சுவாமி ஆனால் என்னுள் உறங்கும் அல்லது இறங்கும் ஏதோ ஒன்று செய்யலாம்

மேனகையே…அந்த கோவை தீவிரவாதியின் நெஞ்சில் அந்த வெடிகுண்டு ஆணி குத்தியது போல் குத்திவிட்டாயே செல்லமே..

நீங்கள் ஆணியே புடுங்கவேண்டாம் சுவாமி…”