இஸ்ரேல் உலகை அதிர வைக்கும் விஷயத்தை வெளியிட்டுள்ளது

ஈரானும் அமெரிக்காவும் முட்டிகொண்டிருக்கும் நிலையில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேல் உலகை அதிர வைக்கும் விஷயத்தை வெளியிட்டுள்ளது

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி “நாம் வான் பாதுகாப்பின் புது யுகத்தில் நுழைந்துவிட்டோம், இனி எதிரியின் ஏவுகனைகளும் விமானமும் நுழையமுடியாதபடி பல அடுக்கு பாதுகாப்பு செய்துவிட்டோம்” என்கின்றது

ஆம் லேசர் கற்றையினை வலுபடுத்தி மகா வலுவான வான் வேலியினை அமைத்திருக்கின்றது இஸ்ரேல்

ஏற்கனவே அயர்ன் டோம் எனப்படும் சிஸ்டம் அவர்களின் நகரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நிலையில் 3 அடுக்கு பாதுகாப்புக்கு மாறுகின்றது இஸ்ரேல்

1000 ஏவுகனைகள் ஏவபட்டால் 10 ஏவுகனை முதல் அடுக்கில் தப்பினால் அடுத்த அடுக்கு 2 ஏவுகனைகளை விட்டாலும் அதை 3ம் அடுக்கு தடுக்கும்

இந்த இரண்டாம் மூன்றாம் கட்டத்தை தாவீது கவண் எனப்படும் David Sling என்கின்றது இஸ்ரேல்

ஆம் பழைய ஏற்பாட்டில் தாவீது கவண் கல்லில் கோலியாத் என்பவனை கொன்றாராம், அதனால் அந்த பெயராம். யூதர்களின் ஒப்பற்ற அரசன் அவன் என்பதால் அவன் அடையாளத்தையே வைத்துவிட்டார்கள்

அயர்ன் டோம், தாவீது கவண் 1 , தாவீது கவண் 2 என 3 அடுக்கு பாதுகாப்பில் நுழைகின்றது இஸ்ரேல்

இன்றைய உலகில் அதி நவீன வான் பாதுகாப்பு இதுதான், உலகம் அவர்களை ஒரு மிரட்சியுடனே பார்க்கின்றது

ஏவுகனை, விமானம், ட்ரோன், ஈ, எறும்பு, புறா என எதுவும் அதன் வானத்துக்குள் நுழையமுடியாதபடி அசத்தி நிற்கின்றது அந்த யூத நாடு

ஆச்சரியத்திலும் மகா ஆச்சரியம் அது..

இதுபற்றி ஈரானிடம் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா? அவர்களும் அடாவடி கோஷ்டி அல்லவா? அதனால் மன்சூர் அலிகான் பாணியில் இப்படித்தான் சொல்வார்கள்

“அவனுக வானத்தை மூடிட்டா, பூமிய தோண்டி எங்களால போக முடியாதா?, அப்படியே சுரங்கம் தோண்டி போய் அவனுக சிஸ்டம் பேட்டரிய உடைச்சிட்டோம்னு வச்சிக்க, அவனுக ஒரு புல்லும் புடுங்க முடியாது”