இஸ்ரேல் தன் 75ம் ஆண்டு
இஸ்ரேல் தன் 75ம் ஆண்டு சுதந்திர நாளை கொண்டாடுகின்றது, இந்த உலகில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் போராடி நாடு அடைந்த இனம் அது
அவர்களின் நீங்கா துயரத்துக்கும் கடைசியில் வெற்றி அடையவும் ஒரே காரணம் பைபிள் அந்த இயேசு
நிச்சயம் இயேசு எனும் யூதர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று அடையாளமற்ற மிக சிறு இனமாக யாசிதி போல பார்சி போல யூத இனமும் நாடற்று போயிருக்கும், இயேசு எனும் பெயரில் பைபிள் உலகெல்லாம் திணிக்கபட்டது, அந்த பைபிளில் ஜெருசலேம் யூதரின் தாயகம் என சொல்லபட்டது, அது மூளை சலவை போல ஒவ்வொரு ஐரோப்பியன் மண்டையிலும் திணிக்கபட்டது
ஆனால் போர் பலமாக இருந்தவரை அந்த ஜெருசலேம் கிறிஸ்தவர்க்கு என்ற நம்பிக்கையும், அதே நம்பிக்கை அந்நகரம் தங்களுக்கு என இஸ்லாமியருக்கும் சிலுவை போர்கள் எனப்படும் பெரும் போர் பல நூற்றாண்டுகள் நீடித்தது இறுதி வெற்றி ஆட்டோமன் துருக்கியருக்கே கிடைத்தது
போப்பின் மூட நம்பிக்கைகளை ஐரோப்பா உணர்ந்து சிந்திக்க ஆரம்பித்தது, கிறிஸ்தவம் வேறு அரசியல் வேறு என சிந்திக்க ஆரம்பித்ததில்தான் அவர்களின் முன்னேற்றம் உருவானது
அதுவரை போப்புடன் சேர்ந்து இயேசுவினை கொன்ற யூதர்கள் என கொத்து கொத்தாய் அவர்களை அடிக்கடி கொன்ற ஐரோப்பா அதை நிறுத்தியது, மார்ட்டின் லுத்தரின் அட்டகாசங்களுக்கு பின் பிரிவினை சபையும் அவர்களை தொடவில்லை
யூத விடுதலையின் முதல் படி போப்பின் வீழ்ச்சியில்தான் தொடங்கிற்று, அதுவும் நெப்போலியன் போப்பை கூப்பில் வைத்தபின் காட்சிகள் மாறின
அதன் பின் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் மோத ஆரம்பித்தன, யூதருக்கு இருந்த பெரும் சவாலில் போப் அதிகார ரீதியாக காலாவதியானார், யூதரின் அடுத்த எதிரியாக ஆட்டொமன் துருக்கிய சாம்ராஜ்யம் இருந்தது
இந்நேரம் அமெரிக்கா போன்ற நாடுகள் உருவானதில் யூதரின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது, காரணம் அங்கு கிறிஸ்தவ மன்னன் இல்லை, அங்கு அரச கட்டளை இல்லை இன்னும் பல தடைகள் இல்லை
ஆட்டோமன் துருக்கியர் பிரிட்டனுக்கு எதிராக ஜெர்மனியுடன் உறவு கொண்டிருந்தனர், இந்த உறவுதான் யூதருக்கு சாதகமாயிற்று
யூதருக்கு சிக்கலாய் இருந்த இன்னொரு அரசு ரஷ்ய ஜார் அரசு, அதையும் கம்யூனிசம் முறித்து போட்டது
இஸ்லாமியர் ஆதரவு ஜெர்மனிக்கு இருக்க யூத ஆதரவு பிரிட்டனுக்கு இருக்க முதல் உலகபோரில் ஆட்டோமன் சாம்ராஜ்யம் சரிந்தது
யூத ஆதரவு பிரிட்டன் கடந்த போரில் வெற்றிபெற்றதுதான் ஹிட்லருக்கு பொறுக்கமுடியாத ஆத்திரம், அவனின் அப்பட்டமான யூத வெறுப்பு அதில்தான் தொடங்கிற்று
ஹிட்லர் மிகபெரிய கில்லாடி, மாபெரும் நிர்வாகி, அசாத்திய வித்தைக்காரன் ஆனால் அவனின் யூதவெறுப்பு எல்லை கடந்தது
இந்நிலையில் பாலஸ்தீனியரும் ஹிட்லரை ஆதரித்தனர்
இந்த புள்ளியில்தான் மேற்குல மொத்த ஆதரவை இஸ்ரேல் பெற்றது, மேற்குலக ஆதரவை பாலஸ்தீனம் இழந்தது
இன்னொன்று அரேபியாவில் ஆட்டோமன் வீழ்ச்சிக்கு பின் வலுவான அரசுகள் இல்லை, பாலஸ்தீனத்தை இஸ்ரேல் என பங்குபோட்டு எளிதாக கொடுத்தது பிரிட்டன்
உண்மையில் இந்தியாவுக்கு வைக்கபட்ட அதே நெருக்கடிதான் இஸ்ரேலுக்கும் வைக்கபட்டது, பிரிட்டன் ஒன்றும் சும்மா கொடுக்கவில்லை
காலத்துக்கும் இஸ்ரேலும் பிரிட்டனும் தங்கள் காலை சுற்றவேண்டும் என பாலஸ்தீன நடுவில் இஸ்ரேலை உருவாக்கி, இரு பக்கமும் பாலஸ்தீனத்தை வைத்தது
பாகிஸ்தான்கள் நடுவில் இந்தியா இருந்தது போன்ற சாயல் அது
ஆனால் இஸ்ரேல் யூதம் பூதமாக எழுந்து ஆடிற்று, சுதந்திரம் அடைந்த மறுநாள் யுத்தம் சந்தித்த தேசம் அது, அதில் எளிதாக வென்றார்கள்
யூதர்களின் அன்றைய வெற்றி ஆச்சரியமானது அல்ல, பல விஷயங்கள் அவர்களுக்கு சாதகாமாக இருந்தது.
அதாவது அவர்கள் ஐரோப்பாவில் வாழ்ந்தவர்கள், நவீன போர்முறை அறிந்தவர்கள். பல நாட்டு ராணுவத்தில் பணியாற்றிவர்கள்.
அதனால் யுத்தநேர்த்தி இயல்பாய் வந்தது. நேர்மாறாக பாலஸ்தீன் கூட்டணியிடம் கோபம் இருந்ததே தவிர முறையான பயிற்சி இல்லை.
மொத்தமக்களையும் ராணுவமாக மாற்றி, தாகுதல்,தற்காப்பு என களத்தில் பின்னி எடுத்தது இஸ்ரேல். போர்காலத்தில் எப்படி தப்பிக்கவேண்டும் என்பதில் ஹிட்லர் புண்ணியத்தில் யூத இனம் நன்றாக அனுபவட்டிருந்தது.
ஆனால் அராபியருக்கு இது புதிது. தடுமாறினார்கள். ஐரோப்பா ஓட அடித்த ஓணான் இது என நினைத்து அவர்கள் அடித்தது ஓணானை அல்ல டைனோசரை என பின்னால் புரிந்துகொண்டார்கள்.
ராணுவமும், உளவுதுறையும் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை என்பதை இஸ்ரேல் அனுபவபூர்வமாக உணர்ந்தது.
பாதிபாலஸ்தீனில் இஸ்ரேலாக இருந்தவர்களுக்கு அகண்ட இஸ்ரேல் கனவு தோன்ற்றிற்று
இந்த போரின் மூலம் அந்த கனவில் எண்ணெய் ஊற்றினார்கள்.
சரிபாதியாக பிரிக்கபட்ட பாலஸ்தீன் என்றால் கூட சிக்கல் இருந்திருக்காது , மூலையில் இரு பாலஸ்தீன் நடுவில் இஸ்ரேல் ஜெருசலேம் பொது நகரம் என்பதில் சிக்கல் கூடிற்று
இஸ்ரேல் சந்தித்த மிகபெரிய எதிரி எகிப்தின் நாசர்
அதிர்ஷ்ட வசமாக எகிப்து சூயஸ் கால்வாய் மூலமும், அரபுலகம் எண்ணேய் மூலமும் பணம் குவிக்க அடுத்த போர்கள் ஆரம்பமானது.
விஸ்வரூபமெடுத்து ஆடியது இஸ்ரேல், எகிப்து படுதோல்வி அடைந்தது இத்தனைக்கும் இஸ்ரேலை விட 4 மடங்கு பெரிய ராணுவம் அது கொண்டிருந்தது, எகிப்துடன் சேர்ந்த இதர சகல நாடுகளும் சமாதான உடன்படிக்கை என விலகிவிட்டன.
பாலஸ்தீனர்களை அப்படித்தான் அந்த தேசங்கள் கைகழுவின.
உண்மையில் பாலஸ்தீனியர்களுக்காக அரபு தேசங்கள் ஒன்றாக எழுந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் ஆனால் அது வரவே இல்லை, வரும் அறிகுறியுமில்லை
மிகசில தேசங்களின் ஆதரவில்தான் அராபத் போராடினார், ஆனால் அவராலும் முழுவெற்றி பெறமுடியவில்லை.
பாலஸ்தீன் என ஒரு நாடு, அதனை பிரித்து ஒரு குடியேற்ற நாட்டை உருவாக்கி, குடிவந்த இனம் மொத்த தேசத்தையும் கபளீகரம் செய்த ஆச்சரியம் அங்குதான் நடந்தது.
சுருக்கமாக சொன்னால் ஒரு தேசம் திட்டமிட்டு அழிக்கபட்டது, மண்ணின் சொந்தமக்கள் அனாதைகளாக்கபட்டனர், கேட்பாரில்லை.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் என சிலவிஷயங்களில் ஒப்பாரி வைக்கும் வல்லரசுகள், இந்த பச்சையான அக்கிரமத்தினை கண்டுகொள்வதே இல்லை.
இன்றும் கூட பாலஸ்தீனை ஆக்கிரமித்து பட்டினிபோட்டு, அவ்வப்போது மற்ற நாடுகளின் எல்லையில் அத்துமீறி தாக்கும் இஸ்ரேல், அது தற்காப்பு என வாசிக்கும் அமெரிக்கா.
பாலஸ்தீனியரின் வலியை புரிந்துகொள்ள அவர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும், பெரும் துரோகத்தால் சிதைக்கபட்டவர்கள் அவர்கள்.
மதுரையில் ஹேமநாத பாகவதருக்கு ஒரு காலத்தில் பாண்டிய மன்னன் பெரும் சொத்து கொடுத்திருந்தான், திடீரென ஒரு கூட்டம் வந்து இது இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் எங்கள் சொத்து நாங்கள் பாகவதரின் வாரிசு என சண்டையிட்டால் எப்படி இருக்கும்?
அதுதான் பாலஸ்தீனத்தில் நடந்தது
இந்த சாதனையினை செய்ய துணை போனது பைபிள், அதுதான் இயேசு எனும் பெயரில் ஒவ்வொருவனிடமும் ஜெருசலேம் யூதனுக்கு என நம்ப வைத்தது
இன்றும் கிறிஸ்தவர்கள் கொஞ்சமும் தயக்கமில்லாமல் “பிராமிஸ் லேண்ட்” என்றும் “ஹோலி லேண்ட்” என்றும் அதை ஒப்புகொண்டு அது யூதருக்கு என தயக்கமின்றி சொல்வார்கள்
இவ்வளவுக்கும் யூதன் இயேசுவினை ஏற்றவனும் அல்ல, ஞானஸ்நானம் வாங்கியவனும் அல்ல
இதெல்லாம் மிகபெரிய தந்திரம், மிகபெரிய உளவு மூளை, மாபெரும் வியூகம், யூதரை தவிர யாருக்கும் சாத்தியமில்லை
ஒன்று உண்மை
இயேசு ரோமர் காலத்தில் தனி இஸ்ரேலிய விடுதலைக்கு அமைதி புரட்சி செய்தார் ஆனால் அவரை புரிந்து கொள்ளா யூத கூட்டம் கொன்றது
அன்று ரோமரின் சின்னம் கழுகு சின்னமாய் இருந்தது
அந்த இயேசுவின் கதையில் தங்கள் பழைய ஏற்பாட்டை புகுத்தி மிக தந்திரமாக உலகெல்லாம் ஜெருசலேம் தங்களுக்கு என நம்ப வைத்த யூத கூட்டம் இரண்டாயிரம் வருடத்துக்கு பின் அமெரிக்க ஆதரவுடன் விடுதலை பெற்றது
இன்று அமெரிக்கரின் சின்னம் அதே கழுகு
ஆக இயேசு என்பவர் வாழும்பொழுதும் செத்த பின்பும் ஏன் இரண்டாயிரம் வருடமாக யூத இனத்துக்கு மட்டும் எவ்வளவு பலன் கொடுக்கின்றார் என்பதை எளிதாக உணரலாம் ,அவர் யூத விடுதலைக்கு மட்டும் வந்தார் அதை சாத்தியமும் ஆக்கினார்
அதை தவிர அவரை பற்றி சொல்லபடுவது எல்லாம் அரசியல் முழு அரசியல்