இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்….
பலத்த எதிர்ப்பினை மீறி, இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமினை அறிவிக்க டிரம்ப் முடிவு செய்திருக்கின்றார்ர்
இது பெரும் சிக்கலுக்கு அஸ்திவாரம் என்பதில் சந்தேகமே இல்லை
இஸ்ரேல் அமைந்திருப்பதும் அது அட்டகாசம் செய்வதே பெரும் சர்ச்சைகுள்ளானது. இதில் பொது இடமாக இருக்கும் ஜெருசலேமினை இஸ்ரேல் தலைநகராக்குவது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதற்கு சமம்
2000 ஆண்டுகளாக போராடிய யூத இனம் முழுவெற்றி பெறபோகும் நேரத்திற்கு வந்துவிட்டதாக கருதுகின்றார்கள். யூதரின் போராட்டமே இந்த நகருக்குத்தான்
ஆனால் அரபு உலகமும், இஸ்லாமிய உலகமும் இதனை சும்மா விடாது, பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தும்
பிரான்ஸ் உட்பட்ட ஐரோப்பிய நாடுகளின் கண்டனத்தையும் மீறி டிரம்ப் எடுத்திருக்கும் இந்த முடிவு பெரும் போரினை கூட ஏற்படுத்தலாம்
அதில் வடகொரிய அதிபருக்கு கூட ஆதரவு கூடலாம்
பெரும் குழப்பம் மேற்காசியாவில் வெடிக்க தயாராகின்றது, இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் இந்தியாவிற்கு சுற்றுபயணம் வேறு வரப்போகின்றாராம்
சமீபத்தில்தான் பல்லாயிரம் கோடிரூபாயில் ஈரானில் இந்தியா துறைமுகம் கட்டியிருக்கின்றது, பாகிஸ்தானில் சீனா கட்டும் துறைமுகத்திற்கு பதிலடி அது
இந்த சிக்கலான நேரத்தில் இஸ்ரேல் பக்கம் இந்தியா சாய்ந்தால் அது ஈரானுக்கு பெரும் கோபத்தை கொடுக்கும் அதில் இந்திய நலனும் பாதிக்கபடலாம்
இனி நடக்க போகும் ஒவ்வொரு விஷயங்களும் கவனம் வாய்ந்தவை
நிச்சயம் இஸ்ரேல் வெல்லலாம், ஆனால் அது சாதாரண வெற்றியாக இருக்காது, பெரும் அழிவுகளுக்கு மத்தியில் அது இருக்கலாம்.
பணத்திலும், அறிவிலும் உச்சத்தில் இருக்கும் இஸ்ரேலின் தலைநகரை யார் நிர்ணயம் செய்கின்றார்கள் பார்த்தீர்களா?
இதுதான் உலக அரசியல்
இப்படி அணுக வேண்டிய விஷயங்களை துப்பாக்கியும் சயனைடும் ஏந்திவிட்டோம், சாக தயாராகிவிட்டோம் அதனால் நாங்கள் கேட்டதுதான் நடக்க வேண்டும் என கிளம்பினால் உலகம் சுத்தமாக கண்டுகொள்ளாது