ஈரானின் பணமதிப்பு

அரபு நாடுகள் பலவற்றின் டாலருக்கு நிகரான பணங்களை பாருங்கள் மிக உயர்ந்த அளவில் இருக்கும், சில உச்சத்தில் இருக்கும்

அந்த அளவு இருக்க வேண்டிய ஈரானின் பணமதிப்பு அதள பாதாளத்தில் இருக்கின்றது

முன்பே அது சரிவுதான், ஈரான் அமெரிக்க சண்டைகளிலே அது 1 டாலருக்க்கு 200 ஈரான் ரியால் என்ற அளவில் சரிந்தது

இப்ப்பொழுது எவ்வளவு சரிந்தாயிற்று என்றால் 1 லட்சத்து 28 ஆயிரம் ரியால் எனும் அளவிற்கு சரிந்தாயிற்று

ஏன் என்றால் ஒரே காரணம் அமெரிக்காவின் பொருளாதார தடைகள்

அமெரிக்கா என்பது இப்போதைக்கு எதிர்க்க யாருமில்லா அசுரபலமான நாடு, வியாபாரத்தின் எல்லா சரடுகளையும் கையில் வைத்து மிரட்டும் நாடு

அதை இப்போதைக்கு முழுக்க எதிர்ப்பார் யாருமில்லை

யானை போன்ற மிருகங்களை பழக்குவோரிடம் கேட்டால் சொல்வார்கள், எந்த மிருகமும் முதலில் அடங்காது

அடித்தாலும் மிதித்தாலும் திமிருமே தவிர அடங்காது, அதற்கோர் வழி உண்டு

அதை கூண்டில் பட்டினி போட வேண்டும், பசியால் துடிக்கவிட வேண்டும், பின் கொஞ்சம் உணவளித்து ஆசைகாட்ட வேண்டும், கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு கொண்டுவரவேண்டும்

இவனை விட்டால் நமக்கு உணவளிக்க‌ யாருமில்லை என்ற நம்பிக்கையினை விதைத்தபின் எந்த மிருகமும் அடிமையே

இந்த தத்துவம் அரசியல் உலகிற்கும் உண்டு

அப்படித்தான் ஈரானை மிரட்டினார்கள், உருட்டினார்கள் இப்பொழுது பொருளாதார தடை என மிரட்டி அதை பிச்சைக்கார தேசமாக்கியாயிற்று

1 டாலருக்கே லட்சத்து 28 ஆயிரம் ரியால் என்றால், 100 டாலர் அமெரிக்க பொருளின் மதிப்பென்ன? இனி ஈரானிய பணத்தில் அதை எண்ண முடியுமா?

இதற்காக இனி ஈரான் பணம் வழக்கொழியும், டாலரோ இல்லை யூரோவோ ஈரானின் கணக்கிற்கு வரும்

ஒரு ஆடை 30 அமெரிக்க டாலர் எனில் என்னாயிற்று? 50 லட்சம் ஈரானிய பணமாயிற்று, உருப்படுமா?

இந்த சரிவால் உள்ளூரில் கடும் கொதிப்பு ஏற்பட்டிருக்கின்றது, அரசு சரியல்ல என மக்கள் பொங்க தொடங்கியாயிற்று

அமெரிக்கா எதிர்பார்த்ததும் அதுதான், எதற்காக நாம் சென்று யுத்தம் புரிய வேண்டும், செய்ய வேண்டியதை செய்தால் மக்களே அரசை விரட்ட போகின்றார்கள்

வாழ வழியில்லா மக்கள் கூட்டம் அதைத்தான் செய்யும்

ஈரானிய நிலமை சிக்கல் ஆகின்றது, பெரும் குழப்பங்கள் அதிகரிக்கின்றன‌

வெனிசுலா, அர்ஜென்டினா வரிசையில் ஈரானும் சேர்ந்தாயிற்று

இது இந்தியாவிற்கு பாதகமா என்றால் இல்லை, டாலரில் வர்த்தகம் செய்யும் இந்தியாவிற்கு இது பாதிப்பினை கொண்டு வராது

இங்கு ஆட்சியாளர்களின் குழப்பத்தால் இந்திய பணம் வீங்குகின்றது என்பது வேறு விஷயம்

1979ல் ஈரானின் அரசரை விரட்டிவிட்டு ஆட்சியினை பிடித்தார் கோமேனி, அது ஈரானிய புரட்சி

இன்று நுட்பமாக ஈரானை காயபோட்டு அடிக்கின்றது அமெரிக்கா, இதனால் மறுபடியும் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஏதும் நடக்கலாம்

ஈரான் எனும் யானை, ஏகபட்ட எண்ணெய் வளங்களை கொண்ட ராட்சத பலம் கொண்ட நாடு சர்வேதச அரசியலால் தரித்திர கோலம் பூண்டு நிறகின்றது

எனினும் ஈரானின் இந்த மாபெரும் சரிவுக்கு காரணம் அதிதீவிரமான மதவாதம் என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை