ஈரான் தான் பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டது
அமெரிக்கா தன் ஈரானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை தொடர்ந்து பல விஷயங்கள் வெடிக்கின்றன
இதுவரை இஸ்ரேலை நேரடியாக தாக்காத ஈரானிய ஏவுகனைகள் இன்று இஸ்ரேல் சிரிய எல்லையினை தாக்கி இருக்கின்றன
அதாகபட்டது நமது தலைகாவேரி குடகு பகுதி பொன்றது சிரியாவின் கோலன் குன்றுகள், இஸ்ரேலின் நீர் ஆதாரமான ஜோர்டான் ஆறு அங்கிருந்துதான் வருகின்றது
நிச்சயம் பின்னொருநாளில் சிரியா அதனை முடக்கும் என நீனைத்த இஸ்ரேல் அந்த மோஷே தயான் காலத்திலே அதை ஆக்கிரமித்துகொண்டது
அது சிரிய பகுதி என்பதால் இன்று இரானிய ஏவுகனைகள் அத தாக்கியிருக்கின்றன, பதிலுக்கு இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவின் ஈரானிய நிலைகளை தாக்கி இருக்கின்றது
பின் ஆளாளுக்கு தலையிட்டு அமர்த்தியிருக்கின்றார்கள்
விஷயம் பரபரப்பாகின்றது. ஈரான் தான் பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டதாக கருதுகின்றது
இஸ்ரேல் தரப்போ இதற்குத்தான் காத்திருந்தோம் என ஒரு மாதிரி சிரிக்கின்றது
பதற்றம் இன்னும் குறையவில்லை