பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈழத்தில் சாதிக் கொடுமை….

Image may contain: one or more people and outdoor

ஈழம், யாழ்பாணம் தமிழர் தொப்புள் கொடி இன்னபிற விஷயங்களுடன் கலைஞரும் திமுகவும் அவருக்கு துரோகம் இழைத்தது என சொல்லிகொண்டிருப்பவர்கள் இதனை கவனிக்கலாம்

யாழ்பகுதியில் கண்ணகை ஆலயம் உள்ளது, அங்கு நடந்திருக்கும் சம்பவம் அப்படி

கண்ணகை என்பது கண்ணம்பாள் சாமி வகையறா, கண்ணகிக்கு வேறு இடங்களில் அங்கு கோவில் உண்டு

இங்கு திருவிழா கொண்டாடி இருக்கின்றார்கள், சிக்கல் சாதி வடிவில் வந்திருக்கின்றது

( சாதிய வன்மங்களுக்கு தமிழகத்தை விட தீபற்றி எரியும் பகுதி அது, புலிகள் ஈழத்தையே எரித்ததால் வெளி தெரியவில்லை

ஒவ்வொரு போராளிகுழுவிற்கும் சாதி அடையாளம் இருந்தது, இதனால்தான் புலிகள் சக குழுக்களை அழிக்கும்பொழுது கொடூரமாக உற்சாகபடுத்தியது யாழ்பாண மேல்வர்க்கம்

அமைதி திரும்பிய பின் அதே சாதிகொடுமை பட்டவர்த்தனமாக தெரிகின்றது )

இப்பொழுது திருவிழாவில் உயர்சாதி மட்டும் தேரினை இழுக்க வேண்டுமாம் இல்லை என்றால் தீட்டாம் மரபு சரியுமாம்

ஆனால் உயர்சாதிகளிடம் தேரை இழுக்க ஆள்பலமும் இல்லை, உடல் பலமும் இல்லை

என்ன செய்திருக்கின்றார்கள்?

அக்காலத்தில் யானையும், குதிரையும் இழுத்த தேர்தானே என புல்டோசர் வைத்து இழுத்திருக்கின்றார்கள்

சுற்றிலும் ஆயிரகணக்கான தாழ்ந்த சாதி இளைஞர்கள் இருக்க அவர்கள் நடுவில் இவர்கள் எந்திரம் வைத்து தேரினை இழுத்திருக்கின்றார்கள்

எப்படிபட்ட கொடுமை இது, நினைக்கவே நெஞ்சு பதறுகின்றதல்லவா?

கவனியுங்கள், சக மனிதனை அழைத்து இழுக்க சொல்ல அவர்களுக்கு சாதி தடுக்கின்றது, அந்த அளவு சாதிவெறி கலந்த சமூகம் அது

இவர்களுக்கு பின் எங்கிருந்து ஒற்றுமை வரும், எங்கிருந்து தீர்வு கிடைக்கும்

அந்த தேரினை யானை, குதிரை என மிருகம் இழுக்கலமாம், புல்டோசர் எந்திரம் இழுக்கலமாம், ஆனால் குறைந்த சாதி மனிதன் தொட்டுவிட கூடாதாம்

ஈழப்போராட்டம் நாசமாக இப்படியான விஷயங்களும் காரணம்

இவ்வளவு நடந்தபின்னும் ஈழத்தில் ஒரு சத்தம் இருக்கும் என கருதுகின்றீர்கள்? அவர்களிடம் கேட்டால் இது இங்கு சாதாரணம் என்கின்றார்கள்

தமிழகத்தில் இப்படி நடந்தால் எப்படி ஆர்ப்பாட்டமாய் வெடித்திருக்கும்? அங்கு ஏன் வெடிக்கவில்லை

பெரியார் மண் என இதனை சொல்வது இதனால்தான்

இந்த ஈழ சாதிவெறி இருக்கும் வரை அங்கு ஒரு முடிவும் வராது, ஒரு வேளை ஈழதமிழருக்கு உரிமை கிடைத்தாலும் அது உயர்சாதி தமிழருக்கே கிடைக்கும், அடிசாதி தமிழருக்கு ஒன்றும் கிடைக்காது எனும் நிலை அப்பொழுதே இருந்தது

இதனால்தான் பெரியார் அந்த ஈழத்து காந்தி செல்வநாயகத்திடம் சொன்னார்

“ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படிங்க உதவ முடியும்”

அவர் சொன்ன அர்த்தம் இந்த சாதிவெறிதான், இந்த அடிமைதனத்தைத்தான் அன்றே அப்படி சொன்னார்

பெரியார் பிறந்த மண் என்பதால்தான் இன்னும் இங்கு ஜேசிபி வைத்து தேர் இழுக்கும் நிலை வரவில்லை

வரவும் வராது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications