போராளி ஆக அனுதாபம் மட்டும் போதாது அறிவும் வேண்டும்
சாதியால் கணவனை இழந்தவள் எல்லாம் போராளியாகவேண்டுமென்றால் முதுகுளத்தூரிலும், நெல்லையிலும், விழுப்புரத்தில் இருந்தும் பெரும் போராளி பெண்படையே வந்திருக்க வேண்டும்
போராளி ஆக அனுதாபம் மட்டும் போதாது அறிவும் வேண்டும்
இந்த கவுசல்யா என்னவெல்லாமோ பேசுகின்றது, 2009ல் ஈழவிவகாரத்தில் திமுக நிலை கேள்விக்குறியாம்
அம்மா உனக்கு என்ன தெரியும்?
1978முதல் 1990 வரை திமுக ஈழபோராளிகளுக்கும் ஈழமக்களுக்கும் செய்த விஷயம் தெரியுமா?
ஈழவிவகாரத்திற்காக இருமுறை ஆட்சி இழந்தும் 1991ல் படுதோல்வியுற்ற கதை தெரியுமா? நீ அப்பொழுது பிறக்கவே இல்லையம்மா, நீ என்ன உன் அன்னையே பிறந்திருக்க முடியாது.
ஈழவிவகாரத்தில் ஒரு முடிவுக்கும் வரமாட்டேன் என அடம்பிடித்தது பிரபாகரன், இந்தியா எனும் நாட்டின் பிரதமரை கொன்றுவிட்டு ஈழம் அமைப்பேன் என அவன் கனவு கண்டால் அவனுக்கும் அறிவே இல்லை என பொருள்
2009லும் கனிமொழியும் பசிதம்பரமும் யுத்தம் நிறுத்த முயன்ற கதை அறிவாயோ, 1987 ஒப்பந்தத்தை அமல்படுத்த துடித்த கதை அறிவாயோ? அதை எலலம் தன் அகம்பாவத்தால் அழித்தான் பிரபாகரன்
ஈழவிவகாரத்தில் என்ன வேண்டுமோ இங்கே கேள், எல்லா கேள்விக்கும் விடை உண்டு. தொடக்கம் முதல் தெரியாமல் 2009ல் குதித்த கதை எல்லாம் உனக்கு புரியாது, சொல்லிதர நாங்கள் இருக்கின்றோம்
ஒரு இடத்திலாவது உன்னால் மறுக்க முடிந்தால் நாம் எழுதுவதையே நிறுத்திவிடுவோம் சவாலுக்கு தயாரா?
அம்மா நீ எங்கே சென்றாய்? யாழ்பாணத்திற்கா
நீ கொஞ்சமும் விவரம் இல்லாத தற்குறி என்பது இதிலே தெரியாதா? சாதிகளின் ஊற்றுகண்ணே யாழ்பாணமடி தெரியுமா?
ஈழம் அமையாவிட்டாலும் பரவாயில்லை பள்ளு பறைகள் எல்லாம் இயக்கம் என குரல் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது என பகிரங்கமாக சொன்ன ஊர் அது
ஈழப்போரின் உண்மை தெரியுமா உனக்கு?
ஒவ்வொரு போராளியும் அவன் சாதியால் முதலில் அறியபட்டான், டெலோவினை புலிகள் அழித்து 700 போராளிகளை யாழ்பாணத்தில் கொளுத்தியபொழுது புலிகளை சோடா கொடுத்து உற்சாகபடுத்தியது யாழ்பாண மேல்வர்க்கம்
தனிநாட்டை விட சாதிபெரிது என கொக்கரிக்கும் கூட்டம் அது, இன்றும் தாழ்த்தபட்டவன் அங்கு சபை ஏற முடியாது
பிரமாணியம் மட்டும் அல்ல சாதிவெறி, யாழ்பாண வெள்ளாளர் சாதிவெறி உலகறிந்தது
சென்றவள் நீ எங்கு சென்றிருக்க வேண்டும்? இன்றும் யாழ்பாணத்தாரால் ஒதுக்கபட்ட மலையகத்திற்கு சென்றிருக்க வேண்டும், சே குவாரே அங்குதான் சென்றான், சாதியின் இழிவு அங்கே இருக்கின்றது
இது கூட தெரியாயமல் யாழ்பாணம் சென்ற சாதி ஒழிப்பு போராளியா நீ?
எந்த யாழ்பாணம்? 2009ல் தமிழகத்தில் பலபேர் சாக அங்கே புலிகள் ஒழியட்டும் என இருந்த அந்த யாழ்பாணம். ராஜபக்சே பின் அதிக வோட்டு வாங்கிய அந்த யாழ்பாணம்
விஷயம் புரிந்தவர்கள் உன்னை நினைத்து சிரிக்கின்றார்கள், இவ்வளவுதான் உனக்கு வரலாறு தெரியுமா?
நீ சென்றது எப்படி இருகின்றது தெரியுமா? பெரியாரிஸ்ட் ஒருத்தி காசிக்கு சென்று கங்கையில் மூழ்கி பாவம் போக்கியது போல் இருக்கின்றது
ஒரு விஷயம் அழுத்தமாக சொல்கின்றேன், நான் திமுக அல்ல
ஆனால் அதனைவிட ஈழவிவகாரத்தில் பாடுபட்ட கட்சி இன்னொன்று இல்லை அது அப்படி பாடுபட்டு பாவி பிரபாகரனால் தீரா பழிசுமந்தது
அம்மா, இதோ பழனிச்சாமி இந்தியாவின் காவேரியினை கொண்டுவர முடியாத பொழுது கலைஞர் மட்டும் கடல்தாண்டி வல்லரசுகள் யுத்தத்தை நிறுத்தமுடியுமா?
சிரியாவில் ரஷ்யா போல இந்தியா களமிறங்கினால் உலகம் என்ன சொல்லும், ஏ இந்தியாவே உன் பிரதமரை கொன்றவனை காக்க வந்தாயோ, அமைதிபடையாக வந்து இவனால் கொல்லபட்ட 2000 சீக்கியரை அவமதிக்க வந்தாயோ என கேட்காதா?
உனக்கு காதல் தெரியலாம், வலி தெரியலாம் ஆனால் அரசியலோ , நுட்பமோ , உண்மையான போராட்டமோ, சுயநல கூட்டத்தின் ஆட்டம்மோ ஒன்றும் தெரியவில்லை
தமிழக கடலில் பிரபாகனோடு நெருங்கி பழகிவிட்டு அவனை சீ என ஒதுக்கிய பலர் உண்டு, அவர்கள் காங்கிரசில் உண்டு ,இந்திய ராணுவத்தில் உண்டு, உளவுதுறையில் உண்டு, திமுகவிலும் நிரம்ப உண்டு
அந்த திமிங்கலங்கள் சும்மா இருக்க அயிரை மீனான நீ துள்ளுவது சரியல்ல
விஷயம் தெரியவில்லை வரலாறை படி உண்மை புரியும்
அதற்கு மேலும் சந்தேகம் இருந்தால் எம்மிடம் கேள், விளக்க தயார். அதற்கு பின் இந்த கேள்விகளை எல்லாம் நீ ஏன் திமுகவிடம் கேட்க போகின்றாய்?
திமுக என்பது பெரும் ஆலமரம், நீ ஒரு மரங்கொத்தி. நீ கொத்தி அது சாயும் என நினைத்தாயோ?
நிரம்ப வாசி, உண்மையினை அறிந்துகொள், உலகை புரிந்துகொள் அதன் பின் போராட வா, அது உனக்கு அனுபவத்தை கொடுக்கும்
அம்பேத்கரும் பெரியாரும் அண்ணாவும் அதனைத்தான் செய்தார்கள், 40 வயதுவரை உலகை கவனித்துவிட்டுத்தான் போராட வந்தார்கள்
கன்றிலே குலை தள்ளும் வாழையும், 1 வருடத்தில் தேங்காய் கொடுக்கும் தென்னையும் அரைகுறை என ஒதுக்கபடுமே தவிர உபயோகபடாது