உங்கள் தரத்திலே நின்று கொள்ளுங்கள்
எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கபட்டிருப்பது கண்டிக்கதக்கது, கற்றவர்கள் நிரம்பிய ஊர் என மார்தட்டும் நாகர்கோவிலில் இப்படி நடந்திருப்பது வருத்ததிற்குரியது
சல்லி பயல்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள் என்பது பொது விதி..
நிச்சயம் ஜெயமோகன் மாபெரும் எழுத்தாளன் , அவரின் நாவல்களும் எழுத்தும் பயணகட்டுரையும் வரலாற்று எழுத்தும் கொண்டாடபடவேண்டியவை
பொதுவாக எழுத்தாளர்கள் விஞ்ஞானிகள் உலகம் வேறு, அவர்கள் வழக்கமான உலகில் இருந்து விலகித்தான் இருப்பார்கள், அப்படியாக சில குணாதிசயங்கள் அவருக்கு இருக்கலாம்
ஆனால் தமிழுலகின் மிகசிறந்த எழுத்தாளர் என்பது ஒப்புகொள்ள வேண்டிய ஒன்று..
அந்த மாபெரும் எழுத்தாளனை எவனோ அவரின் அருமை தெரியாமல் தாக்கியிருப்பது நிச்சயம் கொடுமை
அந்த மனிதனின் அறிவுக்கும் சிந்தனைக்கும் அற்புதமான எழுத்துக்கும் உரிய மரியாதை கொடுக்கபட்டே தீரவேண்டும்
அறிவாளிகளை, சிந்தனையாளர்களை சொந்த ஊரில் மதிக்கமாட்டார்கள் என்பது இயேசுநாதர் வாக்கு
இயேசுவின் வரிகளில் சொல்லலாம்
“பன்றிகளின் முன்னால் முத்துக்களை எறிய வேண்டாம்..” மிஸ்டர் ஜெயமோகன்…
உங்கள் தரத்திலே நின்று கொள்ளுங்கள், யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்பது கவியரசர் வாக்கு..