உச்சநீதி மன்ற தலமை நீதிபதி மேல் பாலியல் புகார் தொடுக்கபட்டாயிற்று
உச்சநீதி மன்ற தலமை நீதிபதி மேல் பாலியல் புகார் தொடுக்கபட்டாயிற்று
இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்கின்றார்கள்
இங்கு எதில்தான் அரசியல் இல்லை எல்லாவற்றிலும் இருந்து தொலைக்கின்றது
அத்வாணி மேல் பாபர் மசூதி இடித்த வழக்கு உண்டு அதற்கு தீர்ப்பு வரவே வராது, ஆனால் சசிகலா என்றால் மட்டும் சரியான நேரத்தில் வரும்
நீதிமன்றம் பல சர்ச்சையான விஷயங்களை தீர்ப்பாக சொன்னது , உதாரணம் அந்த ஓரின சேர்க்கை விவகாரம், தாகத உறவு குற்றமல்ல என ஏராளம்
சபரிமலை பற்றிய தீர்ப்பு உலகிற்கே தெரியும்
எச்.ரஜா சொன்னது போல ஒருமாதிரியான மன்றமாகத்தான் இருந்தது
இப்பொழுது அந்த நீதிபதி கோகாய் என்பர்மேல் பாலியல் வழக்கு
நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா?
உலகில் பெரும் அதிபர்கள் கூட சிக்கிய வழக்கு இது, இதில் இவரும் சிக்கிவிட்டார்
அவர் விசாரணையினை எதிர்கொள்வதுதான் முறை, வீண் அனுதாபம் தேடி ஆகபோவது ஒன்றுமில்லை