உடன்பிறப்பே
உடன்பிறப்பே
நாம் எத்தனையோ களம் கண்டோம் அதில் வெற்றி சில தோல்வி பல பெற்றோம் ஆனால் எதிலும் கொண்ட கொள்கையில் நாம் பின் வாங்கியவர் அல்ல
திமுக தன் நாத்திக கொள்கையில் இருந்தவரை நம்மை யாரும் சீண்டவில்லை என்பது உனக்கு தெரியாததல்ல , எவ்வளவு பேசினோம்? எவ்வளவு ஆடினோம்? ஏன் அந்த சிவாஜி கணேசனே திருப்பதி சென்றுவிட்டு நம்மிடம் பட்டபாடு மறக்குமா?
எந்த இந்து கடவுளை விட்டுவைத்தோம்? எந்த சாமி மிஞ்சி இருந்தது? கைபந்து பால்பந்து போல அல்லவா ஆடினோம்
ஆனால் அரசியல் ஆசை வந்ததும் அண்ணா என்ன சொன்னார் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என நயமிகு தமிழில் நச்சென சொன்னாரா இல்லையா?
ஆம் ஆட்சிக்கு எது தேவையோ அதைத்தான் செய்ய வேண்டும் என்பது அண்ணா சொன்னது
உடன்பிறப்பே,
சமீபகால சர்ச்சையினை கண்டிருப்பாய், அந்த வீணன் வீரமணி ஏதோ சொல்லிவிட்டு நம்மை சிக்கலில் ஆழ்திவிட்டார்.
அவனுக்கும் நமக்கும் 1948ல் இருந்தே ஆகாது, நாம் அண்ணா வழி அவன் அய்யாவின் வழி அப்படியே அவர் சொத்து வழி
நம்மை அவருக்கு பிடிக்காது, காரணம் பெரியாரின் சொத்து மதிப்பை விட திமுகவின் சொத்து மதிப்பு அதாவது உன் சார்பாக என்னிடம் இருக்கும் சொத்து மதிப்பு அதிகம்
இதனால் நம்மையும் நம் இனமான சாம்ராஜ்யத்தையும் சரிக்க தருணம் பார்த்தார் அந்த வீண மணி
1972 ஆட்சியிலே இப்படி எல்லாம் செய்து அதன் பின் ராமசந்திரன் பிரிந்து நாம் வீழ்ந்த வீழ்ச்சி ஏராளம், அவன் சூழ்ச்சி அப்படி
அவன் வீரமணி அல்ல தக்க நேரம் பார்த்து கவுரவரை தவிக்க விட்ட துரோகி விதுரன்.
அப்படிபட்ட வீரமணி நான் இல்லா காலத்தில் களத்தில் போராடும் நம் கழக கண்மணி ஸ்டாலினுக்கு பெரும் வலை பின்னிவிட்டான், பத்மவியூகம் போல ஒன்றை அமைத்துவிட்டான்.
அதிலிருந்து வெளிவரமுடியாமல் தவிக்கின்றான் நான் பெற்ற அபிமன்பு
உடன்பிறப்பே, நாம் புதிய தமிழகம் மட்டுமல்ல புதிய பாரதமும் படைப்பவர்கள்
எந்த கண்ணனை வைத்து நம்மை சிக்கலில் இட்டானோ அந்த கயவன் அதே கண்ணனை வைத்தே நாமும் மீள்வோம்
கண்ணன் கதை ஒன்றும் ஒதுக்க வேண்டிய கதை அல்ல
கண்ணனை நன்றாக கவனி, அவன் கருப்பு அவன் முடி சுருட்டை முடி, அவன் கையில் இருந்தது தமிழரின் புல்லாங்குழல் அவன் மேய்த்தது திராவிட மாடு
அவன் திராவிட திருநாட்டின் ஒரு மன்னன், நம் கண்ணன்
அந்த திராவிட திருநாட்டு மன்னன் தீரா புகழுடனும் , நம்மை போலவே ஏழை எளியவரை கை ஏந்தி காத்தவனும் அவர்களுக்கு நாடு கொடுத்தவனும் அயோக்கியரை அழித்தவனுமாயிருக்கின்றான்
நாமும் அதைத்தான் செய்தோம், அவன் வாழ்வுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் காட்ட முடியுமா?
அங்கே பலராமனும் கண்ணனும் இங்கே நானும் அண்ணாவும்
அங்கே பீஷ்மரும், துரியோதனும்,கர்னனும் இங்கே ராஜாஜி சத்யமூர்த்தி காமராஜரும்
அங்கே கம்சன் இங்கே ஆரிய அட்டகாசம்
அங்கே அரக்கர் கூட்டம் இங்கே அதிமுக கூட்டம்
அங்கே பூதகி இங்கே ஜெயலலிதா
அங்கே சிசுபாலன் இங்கே ராமசநதிரன்
அங்கே காளிங்கன் இங்கே மோடி
அங்கே பாரத போர் இங்கே இந்தி எதிர்ப்பு போர்
அங்கே பாஞ்சாலி இங்கே தமிழன்னை
அங்கே பாம்பு கனை, பிரம்மாஸ்திரம் இங்கே சர்காரியா ஸ்பெக்ட்ரம்
அங்கே அஸ்வத்தாமன் இங்கே டிடிவி தினகரன்
அங்கே துர்வாச முனிவர் இங்கே வீரமணி
கண்ணன் அமைத்தது துவாரகா நாம் கண்டது சமத்துவபுரம்
கண்ணன் கையில் சங்கு சக்கரம் நம் கையில் பேனாவும் பேப்பரும்
கண்ணனுக்கு பாண்டவர் எனக்கு உடன்பிறப்புக்கள்
கண்ணனின் வாழ்வு அவன் வம்சத்தால் முடிந்தது கண்ணனின் மனைவி கணக்கு எல்லாம் உனக்கு மறந்துவிட்டது எனக்கு தெரியும்
உடன்பிறப்பே
கண்ணன் என்பவன் திராவிட திருநாட்டு மன்னன், அவன் புகழை கேள்விபட்ட ஆரிய கூட்டம் அந்த கதையினை திருடி கொண்டது
அந்த கண்ணனை வழிகாட்டியாக கொண்டுதான் இந்த மாபெரும் இயக்கம் இங்கே எழும்பியது, அவன் ஆயர்பாடியினை காத்தது போலத்தான் இங்கு திராவிட குடியினை திமு கழகம் காத்தது
அவன் பாரத போரை நடத்தி பாண்டவருக்கு நியாயம் கொடுத்தது போலத்தான் இங்கு நாம் சமூக நீதி கொடுத்தோம்
கண்ணன் கொடுத்தது கீதை, நாம் கொடுத்தது நெஞ்சுக்கு நீதி ஏன் வேண்டும் இன்ப திராவிடம்.
அவன் கையில் பஞ்சான்ய சங்கு நமக்கு முரசொலி உண்டு
இப்படி கண்ணனை மனதால் நினைத்து நாம் கட்சி வளர்தோம், களம் கண்டோம் இனம் காத்தோம்.
அதனால் உடன்பிறப்பே வீரமணி அமைத்துவிட்ட பத்ம வியூகத்திலிருந்து அபிமன்யுவினை காப்பாய், இதை எல்லாம் சொல்லி அந்த வியூகத்தை உடைத்து புதிய பாரதம் எழுதுவாய்
18 நாள் நடந்த பாரதபோர்தான் ஏப்ரல் 18லும் நடக்கின்றது என்பதை உரக்க சொல்வாய்
பாண்டவர் சேனையாக நம் பகுதறிவு படை எழட்டும். திராவிடம், தமிழ், சாதி ஒழிப்பு, சுயாட்சி , என் குடும்ப ஆட்சி என ஐந்தும் ஒன்றாக அணியாக பாண்டவராக திரளட்டும்
அதில் பாஜக ஆரியம் சமஸ்கிருதம் இந்தி பழனிச்சாமி ராமதாஸ் என நூறு எதிரிகள் ஓடட்டும்
கண்ணன் வழியிலே நம் அண்ணன் வளர்த்த கட்சியும் அப்போரில் வெற்றிபெறும் பாரதம் சித்தி பெறும்
